நாட்டின் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ பாடலுக்கு, தேசிய கீதத்திற்கு இணையான உயர்ந்த அந்தஸ்தை வழங்கும் மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. நேற்று மாநிலங்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், இன்று மக்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு மற்றும் அமளிக்கு மத்தியிலும், ஆளுங்கட்சியின் பெரும்பான்மையுடன் இந்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்த புதிய மசோதாவின்படி, ‘வந்தே மாதரம்’ தேசியப் பாடலை […]

ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் அரசு மற்றும் நிதித் துறை சார்ந்த பல்வேறு முக்கிய விதிமுறைகளில் மாற்றங்கள் கொண்டுவரப்படுவது வழக்கம். அந்த வகையில், பிறக்கவிருக்கும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் ரயில்வே முன்பதிவு, வருமான வரி தாக்கல், சமையல் எரிவாயு விலை மற்றும் வங்கிச் சேவைகள் எனப் பல துறைகளில் புதிய நடைமுறைகள் அமலுக்கு வரவுள்ளன. இந்த மாற்றங்கள் சாமானிய மக்களின் அன்றாட வாழ்க்கை முறையிலும், மாதாந்திர குடும்ப வரவு செலவுத் […]

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் இடையே 8-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் மற்றும் புதிய ஊதிய மேட்ரிக்ஸ் பற்றிய எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, புதிய ஊதியக் குழுவில் ஃபிட்மென்ட் காரணி (Fitment Factor) எவ்வளவு நிர்ணயிக்கப்படும் என்பது அனைவரது மத்தியிலும் பெரும் கேள்வியாக உருவெடுத்துள்ளது. தற்போதுள்ள அடிப்படை ஊதியத்தைப் புதிய ஊதியக் குழுவின் நிலைக்கு உயர்த்துவதற்காகப் பயன்படுத்தப்படும் ஒரு குறிப்பிட்ட பெருக்கல் அளவீடே இந்த […]

உச்சநீதிமன்ற உத்தரவின்படி அமைக்கப்பட்டுள்ள காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு ஆகியவை, மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீட்டைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன. இதற்காக மாதம் ஒருமுறை கூட்டங்கள் நடத்தப்பட்டு, நீர் இருப்பு மற்றும் மழைப்பொழிவு நிலவரங்கள் குறித்து ஆலோசிக்கப்படுவது வழக்கமாகும். அந்த வகையில், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் இன்று காணொளி வாயிலாக நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் […]

இந்தியாவில் ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்ட காலத்திலிருந்தே காகிதத்தினாலான பணத்தாள்களையே நாம் பயன்படுத்தி வருகிறோம். இந்நிலையில், நாட்டின் பணப்புழக்க வரலாற்றில் முதன்முறையாகப் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளைச் சோதனை முறையில் அறிமுகப்படுத்த இந்திய ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. முதற்கட்டமாக, அதிக பயன்பாட்டில் இருக்கும் 10 ரூபாய் மற்றும் 20 ரூபாய் மதிப்பிலான பிளாஸ்டிக் நோட்டுகள் புழக்கத்திற்கு வரவுள்ளன. ரிசர்வ் வங்கியின் இந்தப் பரிந்துரையை ஏற்று அனுமதி வழங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, […]

அரசுப் போட்டி தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்கும் வகையில் 2024ம் ஆண்டு பொதுத்தேர்வுகள் முறைகேடுகள் தடுப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. சமீப காலமாக வினாத்தாள் கட்சி விவகாரம் பூதாகரமாகி வந்த நிலையில், இச்சட்டத்தில் திருத்தங்கள் செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இந்த சட்ட திருத்த மசோதா லோக்சபாவில், எதிர்க்கட்சிகளின் அமளிக்கு மத்தியில் அமைச்சர் ஜிதேந்திர சிங் தாக்கல் செய்தார். தண்டனைகளை கடுமையாக்கும் வகையில் இச்சட்டத்தில் முக்கிய திருத்தங்கள் செய்யப்பட்டு உள்ளன. […]

எத்தனால் கலந்த பெட்ரோல் குறித்த சர்ச்சை அதிகரித்து வரும் நிலையில், ஒரு சராசரி கார் உரிமையாளரால் தங்கள் வாகனத்தின் எரிபொருள் சிக்கனத்தை (மைலேஜ்) தாங்களாகவே துல்லியமாக அளவிட முடியாது என்றும், அங்கீகரிக்கப்பட்ட டீலர்கள் நடத்தும் சோதனைகளையே அவர்கள் நம்பியிருக்க வேண்டும் என்றும் சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.. E20 பெட்ரோலுக்கு மாறிய பிறகு வாகன ஓட்டிகள் எரிபொருள் சிக்கனத்தை எவ்வாறு அளவிட வேண்டும்? ஒரு வாகனத்தின் […]

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவடைந்து வரும் நிலையில், சவூதி அரேபியா ஆசிய நாடுகளுக்கான கச்சா எண்ணெய் விலை 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைத்துள்ளது. இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறையுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மத்திய கிழக்கில் போர் பதற்றம் தணிந்ததும், உலகளவில் கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் விநியோகம் அதிகரித்துள்ளது. இதுவே இந்த விலை மாற்றத்திற்கு முக்கிய காரணங்களாகக் கருதப்படுகிறது. இந்தச் சூழலில், […]

தென்மேற்குப் பருவமழை தொடங்கியிருந்தாலும், எதிர்பார்த்த அளவு மழை பெய்யவில்லை. பருவமழையின் தீவிரம் குறைவாக இருப்பதால் மழைப்பற்றாக்குறை நிலவுகிறது; பல இடங்களில் மழை இன்னும் முழுமையாகத் தொடங்கவில்லை. இதனால் அனைத்துப் பகுதிகளிலும் மழைப்பற்றாக்குறை நீடிக்கிறது. ‘எல் நினோ’ (El Niño) விளைவு காரணமாக இந்த ஆண்டு இயல்பை விடக் குறைவான மழையே பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளது. இது சாமானிய மக்களைப் பாதிக்கும். குறைந்த மழையினால் […]

பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு வெப்பநிலை வழக்கத்திற்கு மாறாக அதிகரிக்கும் ‘எல் நினோ’ (El Niño) வானிலை நிகழ்வு, இந்தியாவின் மீது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். உலகளாவிய வானிலை சுழற்சிகளை சீர்குலைக்கும் இந்த நிகழ்வு, முக்கியமாக இந்திய பருவமழையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. வரும் நாட்களில் எல் நினோவினால் நாட்டில் பல தீவிர சிக்கல்கள் ஏற்படக்கூடும் என்று வானிலை மற்றும் பொருளாதார நிபுணர்கள் கடுமையான எச்சரிக்கைகளை விடுத்து வருகின்றனர். எல் நினோ […]