விண்வெளி ஆராய்ச்சி மற்றும் மனித விண்வெளிப் பயணங்களில் தங்களது கூட்டணியை மேலும் வலுப்படுத்தும் வகையில், அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசா, தனது நிலவு தளத் திட்டத்தில் (Moon Base Programme) இணையுமாறு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவுக்கு அழைப்பு விடுத்துள்ளது. எதிர்கால நிலவு திட்டங்கள், விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சிகள் குறித்த இருநாடுகளின் பேச்சுவார்த்தைக்கு இடையே இந்த அதிகாரப்பூர்வ செய்தி வெளியாகியுள்ளது. அமைதியான முறையில் நிலவை ஆராய்வதற்கும், அங்கு […]

LPG Gas | வீட்டு சமையல் எரிவாயு பயனாளிகள் ஆதார் வாயிலாக உண்மைத் தன்மையை சரிபார்க்க தவறினால், சிலிண்டர் முன்பதிவு செய்ய முடியாது என்று பரவி வரும் தகவல்கள் முற்றிலும் வதந்தியே என மத்திய பெட்ரோலிய அமைச்சக அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். தகுதியான பயனாளிகளுக்கு அரசு வழங்கும் மானியம் முழுமையாகச் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில், சமையல் எரிவாயு இணைப்பு வைத்துள்ள வாடிக்கையாளர்களின் உண்மைத் தன்மையைச் சரிபார்க்க எண்ணெய் நிறுவனங்களுக்கு […]

உலக அளவில் முன்னணி ஆன்லைன் வீடியோ தளமாக திகழும் யூடியூப் (YouTube), பொழுதுபோக்கு, கல்வி, செய்தி, தொழில்நுட்பம் மற்றும் வணிகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த படைப்பாளிகள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தவும் வருமானம் ஈட்டவும் முக்கியக் களமாக விளங்கி வருகிறது. இந்நிலையில், யூடியூப் நிறுவனம் தனது ‘யூடியூப் பார்ட்னர் புரோகிராம்’ (YouTube Partner Program) தகுதி விதிகளில் மிக முக்கியக் கெடுபிடிகளை கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த புதிய மாற்றங்கள் […]

இந்தியாவில் நாள்பட்ட சிறுநீரக நோய்கள் வேகமாக அதிகரித்து வருவது குறித்து கவலை தெரிவித்துள்ள நாடாளுமன்றக் குழு, இதற்கான காரணங்களைக் கண்டறிய நாடு தழுவிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுமாறு மத்திய அமைச்சகங்கள் மற்றும் அறிவியல் நிறுவனங்களுக்குப் பரிந்துரைத்துள்ளது. மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட 177-வது அறிக்கையில், சிறுநீரக நோய்க்கான அடிப்படைக் காரணங்கள் குறித்து விரிவான ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, வெப்ப அழுத்தம், தொடர்ச்சியான நீர்ச்சத்து குறைபாடு, பூச்சிக்கொல்லிகள் பயன்பாடு, அசுத்தமான […]

சத்தீஸ்கர் மாநிலத்தில் பொது விநியோகத் திட்டத்தை நவீனப்படுத்தி, மக்களுக்கு எளிதில் ரேஷன் பொருட்கள் கிடைக்கும் வகையில், அம்மாநில அரசு ‘அன்னபூர்த்தி தானிய ஏடிஎம்’ என்ற புதிய வசதியை ராய்ப்பூரில் அறிமுகப்படுத்தியுள்ளது. வங்கி ஏடிஎம்களில் பணம் எடுப்பதைப் போல, ரேஷன் அட்டைதாரர்கள் இனி மணிக்கணக்கில் நீண்ட வரிசையில் காத்திருக்கத் தேவையின்றி, 24 மணி நேரமும் தங்களுக்குத் தேவையான தானியங்களை இச்சேவை மூலம் எளிதாகப் பெற்றுக் கொள்ள முடியும். சுமார் 2,500 கிலோ […]

இந்தியாவில் யுபிஐ தொடங்கபட்ட காலத்திலிருந்தே நுகர்வோருக்கு முற்றிலும் இலவசமாகவே வழஙகபட்டு வருகிறது. எதிர்காலத்திலும் ஒவ்வொரு இந்தியரும் எவ்விதமான பரிவர்த்தனை கட்டணமும் இன்றி இந்த உடனடி டிஜிட்டல் சேவையை தொடர்ந்து பயன்படுத்துவார்கள் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் ‘வரிவிதிப்பு மற்றும் இதர சட்டங்கள் மசோதா 2026’ மீதான விவாதத்தின் போது பேசிய அவர், இந்த மசோதாவானது 2007-ஆம் ஆண்டின் ‘பணம் செலுத்துதல் மற்றும் தீர்வு முறைமைகள் சட்டத்தின்’ […]

டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது பெல்லட் குண்டுகள் மூலம் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகக் கூறி வரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு, மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜே.பி.நட்டா, ராகுல் காந்தி தொடர்ந்து ‘தனது நிலைபாடுகளை மாற்றிக்கொண்டே இருப்பதாகவும்’, நாடாளுமன்றத்தை முடக்குவதே அவரது நோக்கம் என்றும் நட்டா கடுமையாக விமர்சித்தார். ஆரம்பத்தில் நீட் தேர்வு குறித்து விவாதிக்க வேண்டும் […]

மத்தியப் பிரதேச மாநிலம் தேவாஸ் பகுதியை சேர்ந்த குடும்பத்தினர் சிலர், சாரங்பூர் அருகே உள்ள கட்னாவாட் கிராமத்திற்கு ஆன்மீக பயணம் மேற்கொள்வதற்காக வேனில் புறப்பட்டுள்ளனர். இன்று காலையில் இந்த வேன் படானா பைபாஸ் பகுதிக்கு அருகே வந்தபோது, அப்பகுதியில் பெய்த கனமழையால் சீறிப்பாய்ந்து வந்த ஜிரி ஓடையின் நீர், சாலையை முழுமையாக மூழ்கடித்து வழிந்தோடிக் கொண்டிருந்தது. அப்போது, வெள்ளப்பெருக்கு அதிகமாக உள்ளதால் வாகனத்தை இயக்க வேண்டாம் என அப்பகுதி மக்கள் […]

மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் பழங்குடியினர் உறைவிடப் பள்ளியில் நடந்த பாம்பு கடி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விடுதியில் தூங்கிக் கொண்டிருந்த 6 மாணவிகளை பாம்பு கடித்ததில், 3 மாணவிகள் உயிரிழந்தனர். மேலும் 3 மாணவிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மகாராஷ்டிர மாநிலத்தின் கட்சிரோலி மாவட்ட தனோரா தாலுகாவில் உள்ள ஜப்தலை கிராமத்தில் அரசு உதவி பெறும் பழங்குடியினர் உறைவிடப் பள்ளி […]

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, வரும் 2035ஆம் ஆண்டிற்குள் இந்தியாவுக்கான தனித்துவமான விண்வெளி நிலையத்தை விண்ணில் அமைக்கும் இலக்குடன் செயல்பட்டு வருவதாக அதன் தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின்படி, அடுத்த 5 முதல் 6 ஆண்டுகளில் சுமார் 300 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவுவதற்கான இலக்கு இஸ்ரோவுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் முன்னோடியாக, ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து மனிதரில்லா சோதனை விண்கலம் நடப்பாண்டிற்குள் ஏவப்படவுள்ளதாகவும் […]