நாடாளுமன்ற மரபுகளையும் ஜனநாயக விழுமியங்களையும் வலுப்படுத்துவதில் மாநிலங்களவையில் ஓய்வுபெறும் உறுப்பினர்களின் பங்களிப்பை பிரதமர் நரேந்திர மோடி இன்று பாராட்டினார். பிரியாவிடை அமர்வின் போது பேசிய பிரதமர், மாநிலங்களவை என்பது அனுபவமும் ஞானமும் விலைமதிப்பற்றதாக இருக்கும் ஒரு தொடர்ச்சியான அமைப்பு என்று கூறினார். தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, “அரசியலில் முற்றுப்புள்ளி இல்லை” என்று குறிப்பிட்டார். மேலும், பொதுச் சேவைப் பயணம் முறையான பதவிக்காலங்களுக்கு அப்பாற்பட்டுத் தொடர்கிறது என்றும் அவர் வலியுறுத்தினார். […]

தென்மேற்கு டெல்லியில் உள்ள பாலம் மெட்ரோ நிலையத்திற்கு அருகே, ஸ்ரீ ராம் சௌக் பகுதியில் அமைந்துள்ள ஒரு பல அடுக்கு குடியிருப்பு கட்டிடத்தில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் பலர் பலத்த காயமடைந்ததாகவும் டெல்லி காவல்துறை மற்றும் டெல்லி தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தீயை அணைக்கவும், மீட்புப் பணிகளை மேற்கொள்ளவும் சுமார் 30 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு […]

பயணிகளுக்கு ஒரு பெரும் நிவாரணமாக, மத்திய அரசு விமானங்களில் இருக்கைத் தேர்வு கட்டணங்களுக்கு உச்சவரம்பு நிர்ணயித்துள்ளது.. மேலும் , ஒவ்வொரு விமானத்திலும் குறைந்தது 60% இருக்கைகள் இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இந்த மத்திய அரசின் நடவடிக்கையால், இந்தியாவில் விமான பயணிகள் தங்களின் இருக்கைகளை தேர்வு செய்யும் போது விதிக்கப்படும் கூடுதல் கட்டணங்கள் குறைய வாய்ப்பு உள்ளது. இது தொடர்பாக, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் (Civil Aviation […]

மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் உள்ள பிரிஜேஸ்வரி அனெக்ஸ் குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள ஒரு வீட்டில் இன்று பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.. இந்த தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, அவசர மீட்புப் பணிகள் தொடங்கப்பட்டன. பல மாடிக் கட்டிடத்தில் ஏற்பட்ட இந்தத் தீ, கட்டிடம் முழுவதும் விரைவாக பரவியதால், அங்கிருந்த பலர் உள்ளே சிக்கிக் கொண்டனர்.. ஆரம்பகட்ட மீட்புப் பணிகளும் தாமதமாது.. இதைத் தொடர்ந்து இந்தூர் மாவட்ட ஆட்சியர் […]

இந்தியாவில் உள்ள எல்பிஜி நுகர்வோர் தொடர்ந்து எரிவாயு சிலிண்டர்களைப் பெறுவதற்கு ஆதார் அடிப்படையிலான e-KYC நடைமுறையை மேற்கொள்ள வேண்டும் என்று எண்ணெய் அமைச்சகம் மார்ச் 15 அன்று அறிவித்தது. ஆனால், இந்த அறிவிப்பு நுகர்வோர் மத்தியில், குறிப்பாக ஏற்கனவே தங்கள் e-KYC நடைமுறையை முடித்தவர்களிடையே, பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. எல்பிஜி பயோமெட்ரிக் ஆதார் அங்கீகாரம் குறித்த அனைத்து விவாதங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் […]

இந்திய ரிசர்வ் வங்கி (RBI), வங்கி அமைப்பில் மோசடியைக் குறைப்பதற்காகப் புதிய தொழில்நுட்பங்களை ஆராய்ந்து வருகிறது. ஏடிஎம்கள், வங்கிக் கிளைகள் மற்றும் பிற சேவை மையங்களில் முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான அமைப்புகளைச் செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை அது ஆராய்ந்து வருகிறது. குறிப்பாக, மோசடி அதிகம் நடக்கும் இடங்களை இது குறிவைக்கிறது. இந்தத் திசையில் முன்னேறுவதற்காக வங்கிகளிடமிருந்து கருத்துக்களை அது கோரியுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கூற்றுப்படி, […]

மத்திய அரசு விரைவில் பெண்களுக்காக மற்றொரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது. தொழில் தொடங்க விரும்பும் பெண்களை ஊக்குவிக்கும் வகையில், ஒரு புதிய திட்டத்தை அது தொடங்க இருக்கிறது. இத்தகவலை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் அறிவித்தார். தொழில்துறையில் சிறந்து விளங்க விரும்பும் பெண்களுக்கு, 10 லட்சம் ரூபாய் முதல் 1 கோடி ரூபாய் வரையிலான கடன்கள் மிகக் குறைந்த வட்டி விகிதத்தில் வழங்கப்படும் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்தச் சலுகை […]

தத்தெடுக்கப்பட்ட குழந்தையின் வயது 3 மாதங்களுக்குக் குறைவாக இருந்தால் மட்டுமே, தத்தெடுக்கும் தாய்மார்கள் 12 வார மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என்பது ஏற்படையது அல்ல என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, தத்தெடுக்கப்பட்ட குழந்தையின் வயதைப் பொருட்படுத்தாமல், தத்தெடுக்கும் தாய் 12 வார மகப்பேறு விடுப்புக்கு உரிமையுடையவராக இருக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது. “2020 ஆம் ஆண்டின் சட்டத்தின் […]

EPFO சந்தாதாரர்களுக்கு மத்திய அரசு விரைவில் நிவாரணம் அளிக்கும் என்றும், ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தின் (Employees’ Pension Scheme) மாதாந்திர குறைந்தபட்ச ஓய்வூதிய வரம்பை உயர்த்தும் என்றும் கடந்த சில நாட்களாகச் செய்திகள் வெளியாகி வருகின்றன. தற்போது மாதாந்திர குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 1,000 ஆக உள்ள நிலையில், அது ரூ. 7,500 ஆக உயர்த்தப்படலாம் என்று யூகங்கள் நிலவி வருகின்றன. இந்தச் செய்திகள் மற்றும் யூகங்களுக்கு மத்திய அரசு […]

ஆப்கானிஸ்தானின் காபூலில் உள்ள மருத்துவமனை மீது பாகிஸ்தான் நடத்திய கொடிய வான்வழித் தாக்குதலை இந்தியா வன்மையாகக் கண்டித்துள்ளது. 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கக் காரணமாக அமைந்த இதனை, “மிருகத்தனமான” செயல் என இந்தியா தெரிவித்துள்ளது. உமித் போதை மீட்பு சிகிச்சை மருத்துவமனை மீதான இந்தத் தாக்குதலை, பொதுமக்களுக்கு எதிரான வன்முறையின் அதிர்ச்சியூட்டும் நிகழ்வு என வெளியுறவு அமைச்சகம் விவரித்துள்ளது. வெளியுறவு அமைச்சகம் தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில், “மார்ச் 16 ஆம் தேதி […]