இந்தியாவில் வங்கி லாக்கர் வசதிகள் ரிசர்வ் வங்கியின் (RBI) வழிகாட்டுதல்கள் மற்றும் தனிப்பட்ட வங்கிகளின் விதிகளின் கீழ் செயல்படுகின்றன. வாடிக்கையாளரின் லாக்கரில் சேமிக்கப்பட்ட உள்ளடக்கங்களின் பதிவுகளை வைத்திருக்க அனுமதியில்லை. மேலும், லாக்கருக்குள் என்ன இருக்கிறது என்பது குறித்து விசாரிக்கவும், வங்கிகளுக்கு உரிமை இல்லை. வங்கியின் அலட்சியம் அல்லது வேறு ஏதேனும் காரணங்களால் இழப்பு ஏற்பட்டால், வாடிக்கையாளருக்கு வங்கி இழப்பீடு வழங்க வேண்டும். ரிசர்வ் வங்கியின் கூற்றுப்படி, வங்கியின் அலட்சியத்தால் இழப்பு […]
தேசிய செய்திகள்
NATIONAL NEWS|1newsnation brings to you today news from India along with top headlines, current news and live updates on politics, national issues and news from states.
மத்திய அரசின் உதவித்தொகை தொடர்பாக முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் பீடி, சுண்ணாம்புக்கல் மற்றும் டோலமைட் சுரங்கத் தொழிலாளர்கள், சினிமா தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு ரூ.1,000 முதல் ரூ.25,000 வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது. 1ஆம் வகுப்பு முதல் தொழில் முறை படிப்புகள் வரை பயிலும் குழந்தைகளுக்கு 2025-26 ஆம் நிதியாண்டில் கல்வி உதவித் தொகை பெற மின்னணு முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிப்பது […]
நாட்டில் தற்போது கொரோனா பெருந்தொற்று கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில், கர்ப்பிணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்தியாவிலேயே, கேரள மாநிலத்தில் தான் கொரோனா பெருந்தொற்று வேகமாக அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. அங்கு நேற்று முன்தினம் நிலவரப்படி, 24 மணி நேரத்திற்குள் 192 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில், இரண்டு பேர் உயிரிழந்திருப்பதாக அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், கேரளாவில் கொரோனா பாதித்து […]
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நீண்ட காலமாகவே 8-வது ஊதியக்குழுவின் உருவாக்கத்திற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் டிசம்பர் 2025இல் நிறைவடைய உள்ள நிலையில், 8-வது ஊதியக்குழுவுக்கான பரிந்துரைகள் ஜனவரி 2026 முதல் அமலுக்கு வரவேண்டும். ஆனால், இதில் சற்று தாமதம் ஏற்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே, மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் பலவிதமான கேள்விகள் தற்போது எழுகிறது. அதாவது, மாத ஊதியம் எவ்வளவு அதிகரிக்கும்..? […]
பக்ரீத் பண்டிகை முன்னிட்டு இன்று பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. குர்ஆன் அருளப்பட்ட ரமலான் மாதத்தில் கொண்டாடப்படும் ரம்ஜான் பண்டிகை போல இந்த பக்ரீத் பண்டிகையும் இஸ்லாமியர்களின் முக்கியமான பண்டிகையாக விளங்குகின்றது. இஸ்லாமியர்களின் புனித பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத், இன்று கொண்டாடப்படுகிறது. ஆண்டு தோறும் பக்ரீத் அன்று பொது விடுமுறை தினமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதேபோல், பல மாநிலங்களும் பொது விடுமுறையாக அறிவித்துள்ளன. இதனால் இன்று […]
சந்தையில் அரிசி, பருப்பு, கோதுமை ரகங்களின் விலை சீராக நீடிப்பதால், மலிவு விலை விற்பனைக்கான, ‘பாரத் பிராண்டு’ திட்டம் கைவிடப்பட உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஏப்ரல் மாதத்தில் உணவுப் பணவீக்கம் 1.78% ஆகக் குறைந்துள்ளதால், பாரத் பிராண்ட் தயாரிப்புகளை நிறுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது . நடுத்தர வர்க்கத்தினருக்கு மானிய விலையில் உணவு தானியங்கள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்காக கடந்த 2023ஆம் ஆண்டு பாரத் பிராண்ட் […]
இந்தியாவின் வக்ஃப் சொத்து நிர்வாக வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயமாக உமீத் (UMEED) மைய போர்ட்டல் தொடங்கப்பட்டுள்ளது. இது வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வருவது மட்டுமின்றி சாமானிய முஸ்லீம்களுக்கு குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உதவியாக இருக்கும் என்று மத்திய சிறுபான்மையினர் நலன் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார். டெல்லியில் உமீத் (UMEED) மைய போர்ட்டலை நேற்று தொடங்கிவைத்த அவர், இந்தப் போர்ட்டல் தொழில்நுட்ப மேன்மைப்படுத்தலைவிட கூடுதல் […]
ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது லட்டு தான். திருப்பதி லட்டு அந்தளவுக்கு மக்களிடையே பிரபலம். இதற்கிடையே, கடந்த 2024இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், சந்திரபாபு நாயுடு முதலமைச்சராக பதவியேற்றார். அவர் பதவி ஏற்ற சில மாதங்களிலேயே லட்டு குறித்து பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார். ஜெகன் மோகன் ரெட்டி முதல்வராக இருந்தபோது திருப்பதி கோயிலில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக சந்திரபாபு நாயுடு கூறினார். […]
பீகார் மாநிலத்தில் நடந்த ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம், தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீஹார் மாநிலம் பிர்னோவில் மாவட்டம் இன்வா தியாரா கிராமத்தைச் சேர்ந்த மணமகள், திருமணமான மறுநாள் காலை தனது மாமியார் வீட்டிற்குச் செல்லும் வழியில், காரிலிருந்து இறங்கி தனது முன்னாள் காதலனுடன் பைக்கில் தப்பிச் சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூன் 3ஆம் தேதி பிரிஜேஷ் குமார் என்பவருக்கும், இளம்பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. பெற்றோர் உறவினர்கள் முன்னிலையில் […]
இந்திய விமான நிலையத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இறுதிநாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனம் : AAI Cargo Logistics & Allied Services Company Ltd (AAICLAS) வகை : மத்திய அரசு வேலை காலியிடங்கள் : 396 பணியிடம் : இந்தியா பணியின் பெயர் : Security Screener (Fresher), Assistant (Security) கல்வித் […]