அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் இந்திய நெடுஞ்சாலைகள் அமெரிக்க நெடுஞ்சாலைகளின் தரத்திற்கு இணையாக இருக்கும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். ஜார்க்கண்டின் ராஞ்சியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், சாலை உள்கட்டமைப்பை நவீனமயமாக்குவதில் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை வலியுறுத்தினார், உலகத்தரம் வாய்ந்த பொறியியல், நீடித்து உழைக்கும் தன்மை மற்றும் பாதுகாப்பில் கவனம் செலுத்தி இந்தியா நெடுஞ்சாலை கட்டுமானத்தில் மிகப்பெரிய மாற்றத்தை சந்தித்து வருவதாகக் கூறினார். “லாஜிஸ்டிக் செலவும் டிசம்பர் […]

ரூ. 200 கோடி பண மோசடி வழக்கை ரத்து செய்யக் கோரிய நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸின் மனுவை நீதிமன்றம் நிராகரித்தது. ரூ.200 கோடி பணமோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சுகேஷ் சந்திரசேகர் தொடர்பான வழக்கில் தனக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கை ரத்து செய்யுமாறு பெர்னாண்டஸ் கோரியிருந்தார். ஜாக்குலின் பெர்னாண்டஸ், பணமோசடி தடுப்புச் சட்டம், 20202-ன் திட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்டுள்ளபடி, பணமோசடி குற்றத்தில் ஈடுபடவில்லை என்றும், குற்றத்தின் மூலம் கிடைத்த வருமானத்தையும் […]

போலீசாரை குற்றவாளிகள் தாக்க முயன்றால் தற்காப்புக்காக அவர்களை துப்பாக்கியால் சுடுவதற்கு போலீசார் தயங்கக்கூடாது என போலீசாருக்கு கேரள ஏடிஜிபி உத்தரவிட்டுள்ளார். கேரள மாநிலம் திருச்சூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரவுடி ஒருவரின் பிறந்தநாளை அவரது ஆதரவாளர்கள் கொண்டாடி உள்ளனர். அப்போது ஏற்பட்ட சலசலப்பில் ஒருவரையொருவர் தாக்கி மோதலில் ஈடுபட்டிருக்கின்றனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று மோதலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய முயன்றனர். அப்போது பயங்கரவாத ஆயுதங்களை […]

ஸ்லைஸ் நிறுவனம் இந்தியாவில் முதல் UPI கிரெடிட் கார்டு மற்றும் UPI வங்கி கிளையை அறிமுகப்படுத்துகிறது. ஒவ்வொரு இந்தியருக்கும் வங்கிச் சேவையை அணுகக்கூடியதாக மாற்றும் நோக்கத்துடன், ஸ்லைஸ் (slice) யுபிஐ கிரெடிட் கார்டை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது., இது இந்தியாவில் கடன் அணுகலில் புரட்சியை ஏற்படுத்தும் ஒரு புரட்சிகரமான தயாரிப்பாகும். கூடுதலாக, ஸ்லைஸ் இந்தியாவின் முதல் யுபிஐ-இயங்கும் நேரடி வங்கி கிளை மற்றும் ஏடிஎம்மைத் திறந்து வைத்துள்ளது, எளிமை மற்றும் […]

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டம் குமாரியா கிராமத்தை சேர்ந்தவர் 54 வயதான சுஷிலா தேவி. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். போலீசார் விசாரணையில் பல அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சுஷிலா தேவியின் இளைய மருமகள் பூஜா, அவளது சகோதரி கமலா மற்றும் கமலாவின் காதலர் அனில் வெர்மா ஆகியோர் […]

பாகிஸ்தான் நடிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்களின் சமூக ஊடக கணக்குகள் மீது இந்தியாவில் மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா மேற்கொண்ட “ஆபரேஷன் சிந்தூர்” நடவடிக்கையின் போது பாகிஸ்தான் சமூக ஊடக கணக்குகளுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்படது. பாகிஸ்தானில் இருந்து வரும் ஓடிடி தளங்கள் மற்றும் டிஜிட்டல் தள உள்ளடக்கங்களை நிறுத்துமாறு இந்திய அரசு அறிவுறுத்தியது. இந்த நிலையில் ஜூலை 2 ஆம் தேதி தடை […]

பெற்றோரின் மூட நம்பிக்கையால் சிறுமி மூன்று நாட்களாக பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜலாவர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரகலாத் மேகர் (41) என்பவர், தன்னை ஒரு தாந்திரீகர் எனக் கூறிக் கொண்டு அப்பகுதியில் வலம் வந்துள்ளார். துஷ்ட சக்திகளை அகற்றும் பூஜைகள், கடன் தொல்லைகள் நீங்கும் என நம்பிக்கை ஏற்படுத்தி பொதுமக்களில் புகழ் பெற்று வந்த இவர், தற்போது போலி சாமியார் எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். போலீசார் […]

முன்கூட்டியே கடன் செலுத்தும் கட்டணங்கள் குறித்த புதிய வழிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.. கார் லோன், ஹோம் லோன், பெர்சனல் லோன் என ஏதாவது ஒரு கடனை வாங்கி மக்கள் தங்கள் தேவையை பூர்த்தி செய்து வருகின்றனர். கடன் பெற்ற நபர்கள் சில சந்தர்ப்பங்களில் முன்கூட்டியே கடனை செலுத்துகின்றனர். ஆனால் இப்படி முன்கூட்டியே கடனை திரும்ப செலுத்தும் போது பெரும்பாலான வங்கிகள் அதற்கு ஒரு குறிப்பிட்ட கட்டணத்தை வசூலிக்கின்றன.. இந்த […]