நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு ஒரு குட்நியூஸ் வெளியாகி உள்ளது.. ஆம்.. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையமான NHAI இன் ராஜ்யமார்க் யாத்ரா செயலி மூலம் மிகக் குறைந்த கட்டண வழி விருப்பத்தை நீங்கள் அணுக முடியும். இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இந்த அதிகாரப்பூர்வ செயலியில் ஒரு சுங்க வரி குறிகாட்டி அம்சத்தை அறிமுகப்படுத்த உள்ளது. இதன் மூலம் பயனர்கள் இரண்டு நகரங்களுக்கு இடையே மிகக் குறைந்த கட்டண […]

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள கட்கா கிராமத்தில், வானில் இருந்து வயலில் மேகம் விழுவது போன்ற விசித்திரமான வீடியோ வெளியாகி சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பருவநிலை மாறுபாடு காரணமாக இதுபோன்ற பல்வேறு இயற்கை நிகழ்வுகள் ஆங்காங்கே ஏற்பட்டு வருகிறது. இதுதொடர்பாக விஞ்ஞானிகளும் தொடர்ந்து ஆராய்ச்சி செய்துவருகின்றனர். மிக அரிய நிகழ்வு என்ற போதிலும், இதுபோன்ற சில வீடியோக்கள் உண்மையா என்றும் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்தநிலையில், உத்தரபிரதேச […]

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த முதலாமாண்டு சட்டக் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர் பாதிக்கப்பட்ட பெண்ணை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக மருத்துவ அறிக்கையில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளன. பாதிக்கப்பட்ட பெண்ணின் அனைத்து கூற்றுகளும் மருத்துவ பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. விசாரணையில் பாதிக்கப்பட்டவரின் உடலில் கடித்து வைத்த பற்களின் அடையாளங்கள், நகக் கீறல்கள் மற்றும் கட்டாய பாலியல் வன்கொடுமைக்கான சான்றுகள் கண்டறியப்பட்டுள்ளன. மேற்கு வங்க […]

ஆக. 1 முதல் GPay, Paytm, PhonePe உள்ளிட்ட UPI பேமெண்ட் செயலிகளில் முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளன. இந்த டிஜிட்டல் உலகத்தில் UPI பரிவர்த்தனை முறையே பெரும்பாலான மக்கள் நம்பி உள்ளனர். சிறிய டீ கடைகள் முதல் பெரிய மால்கள் வரை அனைத்து இடங்களிலும் UPI முறையிலேயே பணம் அனுப்பி வருகின்றனர். மற்றவர்களுக்கு செய்யும் பண பரிவர்த்தனைக்கும் UPI செயலிகளையே நம்பி உள்ளனர். UPI பேமெண்ட்களின் எண்ணிக்கை […]

ஒடிசாவில் உலகப் புகழ்பெற்ற புரி ஜெகந்நாதர் கோவில் ரத யாத்திரை நேற்று (ஜூன் 27) காலை கோலாகமாக துவங்கியது. புரி ஜெகன்நாதர் வருடாந்திர ரத உற்சவம், நேற்று 27ம் தேதி துவங்கி ஜூலை 5ம் தேதி வரை நடக்க உள்ளது. இன்று காலை 6 மணிக்கு மங்கள ஆரத்தியுடன் ரதயாத்திரைக்கான சடங்குகள் தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. காலை 8 மணி முதல் 11.30 மணி வரை தெய்வங்கள் […]

புதுச்சேரி ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சாய் சரவணகுமார் தனது பதவியை ராஜினாமா செய்தார். புதுச்சேரி ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சாய் சரவணகுமார் தனது பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை முதலமைச்சர் ரங்கசாமியிடம் அவர் வழங்கினார்.. புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் உடன் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறும் நிலையில் அவர் ராஜினாமா செய்துள்ளார். கட்சி மேலிடம் உத்தரவிட்டதால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகிறது. காலியாக உள்ள […]

புதுச்சேரியில் பாஜக நியமன MLA-க்கள் 3 பேர் ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராமலிங்கம், வெங்கடேசன், ரமேஷ் பாபு ஆகியோர் தங்களது ராஜினாமா கடிதத்தை சபா நாயகரிடம் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதுச்சேரி அமைச்சரவையிலும் மாற்றம் ஏற்படும் எனக் கூறப்படுகிறது. இவர்கள் ராஜினாமா செய்ததற்கான தெளிவான காரணம் இதுவரை வெளியாகவில்லை. ஆனால், பாஜக மாநிலக் குழுவில் இடம்பெறும் உள்கட்சி முரண்பாடுகள், அமைச்சரவை பதவிக்கு இடமாற்றங்கள், மற்றும் அணிச்சேர்க்கை நடவடிக்கைகள் உள்ளிட்ட […]

அகமதாபாத்தில் நடந்த ஜெகந்நாதர் ரத யாத்திரையின் போது, ​​ஊர்வலத்துடன் வந்த யானைகள் கூட்டம் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடியதால், அங்கிருந்த பக்தர்கள் பீதியடைந்தனர்.. இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ரத யாத்திரையின் போது கட்டுப்பாட்டை இழந்து ஓடிய யானைகளை மீண்டும் கட்டுப்படுத்த யானைப் பாகன்கள் போராடுகின்றனர். ஆனால் மக்கள் பீதியில் சிதறி ஓடுவதை அந்த வீடியோவில் பார்க்க முடிகிறது. மேலும் அந்த யானைகளில் […]