நாடு முழுவதும் இன்று 79-வது சுதந்திர தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. தேசிய தலைநகரான டெல்லி செங்கோட்டையில் இன்று முக்கிய நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. மேலும் 28 மாநிலங்​கள், 8 யூனியன் பிரதேச தலைநகரங்​கள், மாவட்ட தலைநகரங்​களில் சிறப்பு ஏற்​பாடு​கள் செய்யப்பட்டுள்ளது. செங்​கோட்​டை​யில் இன்று காலை 7.30 மணிக்கு பிரதமர் மோடி தேசியக்கொடி ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. மேலும், […]

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி, நாடு முழுவதும் சுதந்திர தினம் உற்சாகத்துடனும் பெருமையுடனும் கொண்டாடப்படுகிறது. இந்த முறை நாடு தனது 79 வது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறது. இன்று நாடு முழுவதும் சுதந்திரம் தினம் கோலாகலமாக கொண்டாப்படுகிறது.. ஆனால் இந்தியாவில் 2 மாவட்டங்கள் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தை கொண்டாடுவதில்லை.. அதற்கு பதில் 2 நாட்களுக்குப் பிறகு அதாவது ஆகஸ்ட் 18 ஆம் தேதி […]

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி, நாடு முழுவதும் சுதந்திர தினம் உற்சாகத்துடனும் பெருமையுடனும் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இன்று நாட்டின் 79-வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.. இந்த நாள் இந்திய வரலாற்றில் மிகவும் முக்கியமான பொன்னாள் ஆகும்.. இந்த நாள், சுதந்திரத்தின் மதிப்பையும் முக்கியத்துவத்தையும் நமக்கு நினைவூட்டுகிறது. ஆனால், ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினம் ஏன் கொண்டாடப்படுகிறது? அதன் வரலாறு மற்றும் முக்கியத்துவம் […]

தமிழக மீனவர்கள் 8 பேருக்கு ரூ.9 லட்சம் அபராதம் விதித்தும், 16 தமிழக மீனவர்களுக்கு காவல் நீட்டிப்பு செய்தும் இலங்கையின் மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி, தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்படும் சம்பவங்களும் தொடர் கதையாகி வருகின்றன. மத்திய அரசின் அழுத்தம் காரணமாக, தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படும் சம்பவம் குறைந்துள்ளது. மேலும் கைது நடவடிக்கை தொடர்ந்து வருகிறது. மேலும், மீனவர்களின் […]

இந்திய கடற்படையில் உள்ள காலியிடங்கள் அவ்வப்போது முறையான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு நிரப்பப்பட்டு வருகின்றன.. அந்த வகையில் தற்போது இந்திய கடற்படை தற்போது, சிவில் டிரேட்ஸ்மேன் திறன் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு, இந்திய கடற்படையில் வேலை பெறுவதற்கான இந்த பொன்னான வாய்ப்பு வந்துள்ளது. இந்த ஆட்சேர்ப்பு செயல்முறை மூலம், இந்திய கடற்படை 1,266 காலியிடங்களை நிரப்ப உள்ளது. இந்த ஆட்சேர்ப்புக்கான குறைந்தபட்ச தகுதி […]

பொறுப்பற்ற, போர் வெறிக் கொண்ட, வெறுப்பூட்டும் கருத்துகளை வெளியிடும் பாகிஸ்தானை மத்திய வெளியுறவு அமைச்சகம் கண்டித்துள்ளது.. மேலும் எந்தவொரு தவறான செயலுக்கும் வேதனை தரும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் இந்தியா எச்சரித்துள்ளது.. இன்று செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், இந்தியாவுக்கு எதிரான கருத்துகளை மீண்டும் மீண்டும் வெளிப்படுத்துவது பாகிஸ்தானின் நன்கு அறியப்பட்ட செயல் முறையாகும் என்று கூறினார். மேலும் “இந்தியாவுக்கு எதிராக […]

உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் மனோஜ். இவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரூபி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு இருவரின் வாழ்க்கையும் மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்தது. ஆனால், அதில் ஒரு திடீர் திருப்பம் நிகழ்ந்தது. மனோஜின் மனைவி ரூபாவுக்கு பக்கத்து ஊரை சேர்ந்த வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நட்பாக இருந்தவரை எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், இது கள்ளக்காதலாக மாறியது. இதனால், இருவரும் […]