இந்தியாவில் கோவிட் பரவல் அதிகரித்து வரும் நிலையில், தற்போது புழக்கத்தில் உள்ள புதிய மாறுபாடுகளால் கடுமையான அச்சுறுத்தல்கள் இல்லை என்று முன்னணி இந்திய பயாலஜிஸ்ட் டாக்டர் வினீதா பால் தெரிவித்துள்ளார்.

செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட ஆயிரக்கணக்கான கணக்குகள் முடக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்களின் முன்னேற்றத்தையும், அவர்களின் நிலையையும் மேம்படுத்தும் நோக்கில் பிரதான் மந்திரி சுகன்யா சம்ரித்தி யோஜனாவை எனப்படும் செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது. இத்திட்டத்தின் கீழ், பெற்றோர் தங்கள் 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தையின் பெயரில் வங்கி அல்லது தபால் நிலையத்தில் கணக்கைத் தொடங்கலாம். இந்த கணக்கை பூஜ்ஜிய இருப்பில் […]

பெங்களூரு வெற்றிக்கொண்டாட்ட நெரிசல் வழக்கில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவின் மார்க்கெட்டிங் தலைவர் நிகில் சோசலே உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதிப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வெற்றி பெற்றது. ஐ.பி.எல். வரலாற்றில் பெங்களூரு அணி கோப்பையை வெல்வது இதுவே முதல் முறை.இதனால் அந்த அணி ரசிகர்கள் மட்டுமின்றி, கர்நாடக மக்களும் அந்த வெற்றியை உற்சாகமாக கொண்டாடினர். இதையடுத்து, […]

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 5,000யை நெருங்கி வருவதால் அனைத்து மருத்துவமனைகளிலும் ஆக்ஸிஜன், தனி வார்டுகள், வென்டிலேட்டர்கள் தயார் நிலையில் வைக்க மாநில அரசுகளுக்கு, மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு சீனாவில் பரவ ஆரம்பித்த கொரோனா நோய், நாளடைவில் உலகம் முழுவதும் பரவி பல உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. இதனிடையே தடுப்பூசி செலுத்திய பிறகு, கொரோனா நோய்த் தொற்றின் பரவல் சற்று குறைந்தது. 2022-ம் ஆண்டு வரை உச்சத்தில் இருந்து, […]

பீடி, சுண்ணாம்புக்கல், டோலமைட் சுரங்கத் தொழிலாளர்கள், சினிமா தொழிலாளர்களின் குழந்தைகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். மத்திய அரசின், மத்திய தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ், பீடி, சுண்ணாம்புக்கல், டோலமைட் சுரங்கத் தொழிலாளர்கள், சினிமா தொழிலாளர்கள் ஆகியோரின் குழந்தைகள், ஒன்றாம் வகுப்பு முதல் தொழில் முறை படிப்புகள் வரை பயில உதவித்தொகை பெறுவதற்காக மின்னணு முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இத்திட்டத்தின் கீழ், 2025-26 -ம் நிதி ஆண்டில், 1,000 […]

BIS சான்றிதழ் இல்லாமல் 11,000க்கும் மேற்பட்ட பொருட்களை விற்பனை செய்த விவகாரம் தொடர்பாக அமேசான் (Amazon), ஃபிளிப்கார்ட் (Flipkart) உள்ளிட்ட காமர்ஸ் நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மைன்ட்ரா(Myntra), மீஷோ(Meesho), பிக்பாஸ்கெட் (Bigbasket) நிறுவனங்களும் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது. மார்ச் மாதத்தில் நடத்தப்பட்ட தொடர் சோதனைகளுக்குப் பிறகு, இந்திய தரநிலைகள் பணியகம் அல்லது பிஐஎஸ் இந்த தளங்களில் சான்றிதழ் பெறாத பொருட்கள் விற்கப்படுவதைக் […]

அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராமர் கோயிலில், ராம தர்பார் (Ram Darbar) உருவங்களின் முதல் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 2025 ஜூன் 5 அன்று, கங்கா தசமி பண்டிகையை முன்னிட்டு, கோயிலின் முதல் மாடியில் உள்ள ராம தர்பார் மற்றும் ஏழு பிற கோயில்களில் பிரதிஷ்டை விழா நடைபெற்றது. உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் ஸ்ரீ ராமஜென்மபூமி புண்ணிய ஷேத்ரா அறக்கட்டளை சார்பில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டப்பட்டு உள்ளது. இதன் முதற்கட்ட […]

இந்தியாவில் தினமும் மில்லியன் கணக்கான பயணிகள் ரயிலில் பயணம் செய்கிறார்கள். இதனால் இப்போதெல்லாம் உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டைப் பெறுவது மிகவும் கடினமாக உள்ளது. ஆனால் அவசர காலங்களில், ரயில்வேயின் தட்கல் திட்டம் பயனுள்ளதாக இருக்கும். தட்கல் திட்டம் பயணிகள் தங்கள் பயணத்திற்கு ஒரு நாள் முன்பு ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய அனுமதிக்கிறது. இது உடனடி அல்லது அவசர பயணத் தேவைகளுக்கு ஏற்றது. இருப்பினும், அதிக தேவை மற்றும் குறைந்த எண்ணிக்கையிலான […]

பெங்களூர் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த நிலையில் ஆர்சிபி வெற்றி விழாவை நடத்தியது கர்நாடக அரசா அல்லது கிரிக்கெட் வாரியமா? என கேள்வி எழுப்பிய கர்நாடகா உயர் நீதிமன்றம் இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என ஐபிஎல், பிசிசிஐ, பெங்களூர் ஆட்சியருக்கு கோர்ட் உத்தரவிட்டது. ஐபிஎல் சீசன் நடத்தப்பட்டு 18வது ஆண்டில் முதல் முறையாக ஆர்சிபி அணி கோப்பையை வென்றது. இது ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை […]

ஐபிஎல்லில் ஆர்சிபி வெற்றி பெற்ற பிறகு, சின்னசாமி மைதானத்தில் ஒரு வெற்றி அணிவகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் சோகத்தையும் அதிச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் இப்படி ஒரு சம்பவம் நடந்தது இது முதல் முறையல்ல. கோயில்களில் நெரிசல் ஏற்பட்டு பலர் உயிரிழந்த சம்பவங்கள் இதற்கு முன்னரும் நடந்துள்ளன.  அவ்வாறு சமீபத்திய ஆண்டுகளில் நடந்த சம்பவங்கள் பற்றி பார்க்கலாம். மகா […]