மத்திய பிரதேசத்தில் தேடுதல் வேட்டையின்போது பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் 4 நக்சல்கள் பலியாகினர். நாட்டிலிருந்து நக்சலைட்டுகளை ஒழிப்பதற்கான அனைத்து முயற்சிகளும் நடைபெற்று வரும் நிலையில், மத்தியப் பிரதேசத்தின் பாலகாட் மாவட்டத்தில் சனிக்கிழமை பாதுகாப்புப் படையினருடனான ஒரு பெரிய மோதலில் நான்கு நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இறந்தவர்களில் ஒரு ஆண் மற்றும் மூன்று பெண் நக்சலைட்டுகள் அடங்குவர். அவர்களிடமிருந்து ஒரு பதுக்கல் ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இப்பகுதியில் பலத்த மழை […]

குஜராத்தில் நடந்த விமான விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கையானது 270 ஆக அதிகரித்துள்ளதாகவும், டிஎன்ஏ சோதனையில் 11 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அகமதாபாத் அரசு மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குஜராத்தின் அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையத்தில் இருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட போயிங் 788 ட்ரீம் லைனர் விமானம் 30 விநாடிகளிலேயே விபத்துக்குள்ளானது. மருத்துவ கல்லூரியின் விடுதியின் மீது விமானம் விழுந்து தீப்பிடித்ததில் விமானத்தில் இருந்தவர்கள் மட்டுமல்லாமல் […]

ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பான விசாரணை முடிந்தால் தான் விபத்துக்கான உண்மையான காரணம் தெரிய வரும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து குறித்து சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் இன்று ஊடகங்களுக்கு விளக்கம் அளித்தது.. உயிர் இழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்தும், விபத்தை ஒரு சோகம் என்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு தனது உரையைத் தொடங்கினார். தொடர்ந்து […]

நீட் இளங்கலை தேர்வு முடிவுகளை தேசிய தேவு முகமை வெளியிட்டுள்ளது. நீட் இளங்கலை தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன. தேசிய தேர்வு முகமை (NTA) நீட் இளங்கலை தேர்வு முடிவுகளை இன்று அறிவித்துள்ளது. மருத்துவ நுழைவுத் தேர்வில் கலந்து கொண்ட விண்ணப்பதாரர்கள் தங்கள் தகுதி நிலையை neet.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சரிபார்க்கலாம். அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, இந்த ஆண்டு இளங்கலை NEET UG 2025-க்கு கிட்டத்தட்ட 23 லட்சம் […]

8 நாட்களுக்கு மேல் ஒரே இடத்தில் நிறுத்தப்படும் எந்தவொரு வாகனமும் கைவிடப்பட்டதாகக் கருதப்பட்டு நேரடியாக ஸ்கிராப்பிங் செய்ய அனுப்பப்படும் என்று கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் அதிரடியாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோவா மாநிலத்தின் சாலைப் பாதுகாப்புப் பிரச்சினைகளைத் தீர்க்கும் நோக்கில் முக்கிய போக்குவரத்து மேலாண்மை நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக குறிப்பிட்டார். அதன்படி, எட்டு நாட்களுக்கு மேல் சாலைகளில் ஒரே இடத்தில் நிறுத்தப்படும் எந்தவொரு வாகனமும் கைவிடப்பட்டதாகக் கருதப்பட்டு […]

மருத்துவ இளநிலைப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வான நீட், மே 4ஆம் தேதி அகில இந்திய அளவில் நடைபெற்றது. நாடு முழுவதும் 557 நகரங்களில் 4,750 தேர்வு மையங்களிலும் வெளிநாட்டில் 14 மையங்களிலும் தேர்வு நடைபெற்றது. தமிழ்நாட்டில் 30-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. முன்னதாக சத்தீஸ்கர் மாநிலத்தில் நீட் மறுதேர்வு நடத்தப்பட வேண்டும் என்று கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அதேபோல தமிழ்நாட்டிலும் ஆவடி உள்ளிட்ட தேர்வு […]

கடந்த சில மாதங்களாக, தொடர்ச்சியான சரிவு காணப்பட்ட கச்சா எண்ணெய் விலை தற்போது உயர்ந்துள்ளது. வளைகுடா நாடுகளில் பதற்றம் உச்சத்தை எட்டியதே இதற்குக் காரணம். ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்குப் பிறகு, வெள்ளிக்கிழமை எண்ணெய் விலையில் 12 சதவீதம் வரை மிகப்பெரிய உயர்வு ஏற்பட்டுள்ளது. அதன்படி, ஒரு பேரல் விலை தற்போது 77 டாலருக்கும் அதிகமாக விற்கப்படுகிறது. போர் பதற்றம் தொடர்ந்தால், விலை மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் […]