ராஜஸ்தானில் இன்று இந்திய விமானப்படையின் போர் விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. ராஜஸ்தானின் சுரு மாவட்டத்தில் உள்ள பானுடா கிராமம் அருகே இன்று இந்திய விமானப்படையின் ஜாகுவார் போர் விமானம் விபத்துக்குள்ளானதாக பாதுகாப்பு வட்டாரங்கள் உறுதிப்படுத்தின. ரத்தன்கர் பகுதியில் இந்த சம்பவம் நடந்ததால், உள்ளூர் அதிகாரிகள் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர். விபத்து நடந்த இடத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், அவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. விமானம் நடுவானில் சமநிலையற்றதாகத் […]

மும்பையில் உள்ள MLA விருந்தினர் மாளிகையில் ஒரு கேன்டீன் ஊழியரை சிவசேனா (ஷிண்டே பிரிவு) சட்டமன்ற உறுப்பினர் தாக்கியதன் மூலம் புதிய சர்ச்சையில் சிக்கி உள்ளார்.. புல்தானா தொகுதி MLA சஞ்சய் கெய்க்வாட், விருந்தினர் மாளிகை கேன்டீனில் வழங்கப்படும் உணவின் தரத்தில் அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது.. இதனால் அந்த கேண்டீன் ஊழியரை அவர் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. அவருக்கு வழங்கப்பட்ட உணவின் தரம் மோசமாக இருந்ததாகவும், அவர் ஊழியர்களை கடுமையாக சாடியதாகவும், […]

ஹைதராபாத்தில் கலப்படம் செய்யப்பட்ட கள் அருந்திய 15 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தெலங்கானாவின் குகட்பள்ளியில் உள்ள ஒரு கடையில் கலப்படம் செய்யப்பட்ட கள்ளை ​​உட்கொண்ட பலருக்கும் உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது.. சுமார் 15 பேர் ஹைதராபாத்தின் ராம்தேவ் மருத்துவமனையில் குறைந்தது அனுமதிக்கப்பட்டதாக கலால் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், மீதமுள்ளவர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணையை தொடங்கப்பட்டுள்ளது. […]

நாட்டில் முதல் முறையாக மொபைல் செயலி மூலம் டிஜிட்டல் முறையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. இதனால், 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பின் தரவு முன்கூட்டியே கிடைக்கும் என்று இந்திய பதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் (RGI) தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக RGI மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் அலுவலகத்தின் X தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, முதல் டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடத்தப்படும். […]

கூகுள் இந்தியாவில் ஒரு புதிய முயற்சியைத் தொடங்கியுள்ளது. கூகுள் இப்போது இந்தியாவில் அதன் தேடல் தளத்தில் செயற்கை நுண்ணறிவு பயன்முறையை (AI) தொடங்கியுள்ளது. கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை செவ்வாய்க்கிழமை (ஜூலை 8, 2025) சமூக ஊடக தளமான X இல் இதை அறிவித்தார். “ஆய்வகங்களில் கிடைத்த மகத்தான வரவேற்பைத் தொடர்ந்து, இந்தியாவில் உள்ள அனைத்து பயனர்களுக்கும் தேடலில் AI பயன்முறையை நாங்கள் இப்போது அறிமுகப்படுத்துகிறோம். இது […]