PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஒரு முக்கியமான அப்டே வந்துள்ளது.. ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) கணக்குகளில் இருந்து பணத்தை எடுப்பதற்கான விதிகளில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும். ஓய்வூதிய நிதி அமைப்பு ஒரு திட்டத்தை முன்வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. அதன்படி இனி EPFO உறுப்பினர்கள் ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் ஒரு முறை தங்கள் முழுத் தொகையையோ அல்லது அதன் ஒரு பகுதியையோ திரும்பப் பெற முடியும். இந்த திட்டம் […]
தேசிய செய்திகள்
NATIONAL NEWS|1newsnation brings to you today news from India along with top headlines, current news and live updates on politics, national issues and news from states.
ஜெகதீப் தன்கரின் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகு, அடுத்த துணைக் குடியரசு தலைவர் யார் என்பது குறித்த விவாதங்கள் எழுந்துள்ளன.. பாஜக தலைவர்கள் மத்தியில் பல பெயர்கள் பேசப்பட்டு வருகின்றன. தற்போது பீகார் ஆளுநராக இருக்கும் ஆரிஃப் முகமது கான் இந்தப் பதவிக்கு முதன்மையான தேர்வாக இருப்பதாக கூறப்படுகிறது.. பிரதமர் நரேந்திர மோடி இங்கிலாந்து மற்றும் மாலத்தீவு பயணங்களிலிருந்து திரும்பியதும், புதிய துணைத் தலைவர் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படலாம் என்று […]
இந்தியாவிலேயே கள்ளக்காதல் அதிகமாக இருக்கும் நகரம் எது தெரியுமா? இந்தியாவில், திருமணம் என்பது இரண்டு நபர்களுக்கு இடையிலான பிணைப்பாக மட்டுமல்லாமல், இரண்டு குடும்பங்களுக்கு இடையிலான பிணைப்பாகவும் பார்க்கப்படுகிறது.. மாறிவரும் வாழ்க்கை முறைகள் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களுடன், திருமணம் தொடர்பான வடிவங்களும் மாறி வருகின்றன. தற்போதைய இந்த நவீன காலக்கட்டத்தில் ஆச்சரியப்படுத்தும் ஒரு போக்கு என்னவென்றால், கள்ளக்காதல் எண்ணிக்கை விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருவது தான்.. திருமணமானவர்களின் டேட்டிங் பயன்பாடான ஆஷ்லே […]
2023-24 நிதியாண்டில் இந்தியாவின் ஏழை, பணக்கார மாநிலங்கள் அடங்கிய பட்டியலை மக்களவையில் நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார். அதில், 2023-24 நிதியாண்டில் இந்தியாவில் அதிகபட்ச தனிநபர் நிகர மாநில உள்நாட்டு உற்பத்தியை (NSDP) கோவா மாநிலம், ரூ.3.57 லட்சமாகப் பதிவு செய்துள்ளதாக உறுதிப்படுத்தினார். அதே நேரத்தில் பீகார் ரூ.32,227 உடன் கடைசி இடத்தில் உள்ளது என்று தேசிய புள்ளியியல் அலுவலகம் (NSO) வெளியிட்ட தற்காலிக தரவுகள் தெரிவிக்கின்றன. […]
இந்தியா பல்வேறு மரபுகள் மற்றும் பல்வேறு கலாச்சாரங்களின் நிலமாக உள்ளது.. ஆனால் சில மர்மமான கிராமங்களும் இந்தியாவில் உள்ளன.. இந்தியாவின் சில கிராமங்கள் இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகள், பில்லி, சூனியம், செய்வினை பற்றிய கதைகளால் சூழப்பட்டுள்ளன. அத்தகைய ஒரு கிராமம் தான் அசாமில் உள்ள மாயோங் என்ற கிராம்… இந்த கிராமம் “இந்தியாவின் பில்லி சூனிய தலைநகரம்” என்று அழைக்கப்படுகிறது.. பல நூற்றாண்டுகளாக, மாயோங் கிராமம் அமானுஷ்ய நடைமுறைகள் மற்றும் […]
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் நிதியாண்டு 2024-25 இல் 74.34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைத்துள்ளன. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் நிதியாண்டு 2024-25 இல் 74.34 லட்சம் பேர் வேலைவாய்ப்புகளைப் பெற்றுள்ளார்கள். நிதியாண்டு 2023-24 இல் இந்த எண்ணிக்கை 79.39 லட்சமாகவும், நிதியாண்டு 2022-23 இல் 75.79 லட்சமாகவும் இருந்தது.இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக மத்திய […]
இமாச்சலப் பிரதேசத்தில் தொடர் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 135 ஆக உயர்ந்துள்ளது. இமாச்சலப் பிரதேசத்தில் தொடர் மழையால் பல மாவட்டங்களில் சாலை இணைப்பு, மின்சாரம் மற்றும் அத்தியாவசிய சேவைகள் முடங்கியுள்ளன. மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (SDMA)படி, 432 சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. 534 மின் விநியோக மின்மாற்றிகள் செயல்படவில்லை, மேலும் 197 நீர் வழங்கல் திட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதேபோல், வெள்ளப்பெருக்கு சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை […]
நாட்டில் வெப்பத்தால் ஏற்படும் இறப்புகள் 2050க்குள் ஆண்டுக்கு 1.44 லட்சத்தில் இருந்து 3.28 லட்சத்திற்கும் மேல் உயரக்கூடும் என்றும் உலக வங்கி அதிர்ச்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்திய நகரங்கள் வெள்ளம், வெப்ப அலைகள் போன்ற காலநிலை ஆபத்துகளால் அதிக பாதிக்கப்படும் சூழலில் உள்ளன என உலக வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. இதை தடுக்க 2050 ஆம் ஆண்டுக்குள் வலுவான உள்கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்றும் இதற்கு 2.4 டிரில்லியன் டாலர் […]
மஹாராஷ்ட்ரா மாநிலம் புனேயில் காதலிக்க மறுத்த 10ம் வகுப்பு மாணவியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டிய இளைஞரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்த வீடியோ வைரலாகி வருகிறது. மகாராஷ்டிராவின் சதாராவில் 10 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியை 18 வயது இளைஞர் ஆர்யன் வாக்மலே என்பவர் கத்தியை காட்டி மிரட்டியுள்ளார். சிறிது காலமாக, இந்த இளைஞர் சிறுமியை பின்தொடர்ந்து தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளார். சிறுமி காதலை நிராகரித்ததால், பள்ளியிலிருந்து […]
ஆதார், வாக்காளர் அடையாள அட்டை அல்லது ரேஷன் கார்டுகளை வாக்காளர் தகுதிக்கான சான்றாக ஏற்றுக்கொள்ள முடியாது என்று தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.. குடியுரிமைக்கான சான்றைக் கோருவதற்கான அதன் அரசியலமைப்பு அதிகாரத்தை உறுதிப்படுத்துகிறது என்றும் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான விரிவான பிரமாணப் பத்திரத்தையும் தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.. அரசியலமைப்பின் 324வது பிரிவு, வாக்காளர் பட்டியல்களைத் தயாரிப்பது உட்பட, தேர்தல்களின் அனைத்து அம்சங்களையும் மேற்பார்வையிடவும் இயக்கவும் முழுமையான […]

