தேசிய நெடுஞ்சாலைகள் ஆண்டுதோறும் 50,000 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழக்கின்றனர், 2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில் சராசரியாக தினமும் 147 பேர் இறக்கின்றனர் என்று புள்ளிவிவரங்களை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் சமர்பித்துள்ளது. இதுதொடர்பாக எதிர்க்கட்சி எம்.பி.க்களின் கேள்விகளுக்கு பதிலளித்த மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சர் நிதின் கட்கரி, இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரை தேசிய நெடுஞ்சாலைகளில் 26,770 பேர் இறந்துள்ளனர் என்பதை மின்னணு விரிவான […]

இந்திய அரசு 15-6-1999ல் பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் பட்டியல்கள் தொடர்பான ஆணைகளில் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்துதல் ஆகியவற்றிற்கான கோரிக்கைகளை முடிவு செய்வதற்கான வழிமுறைகளை வகுத்துத் தந்துள்ளது (இது மேலும் 25-6-2002 மற்றும் 14-9-2022ல் திருத்தப்பட்டது). இந்த வழிமுறைகளின்படி சம்பந்தப்பட்ட மாநில அரசு / யூனியன் பிரதேச நிர்வாகம் நியாயப்படுத்தி பரிந்துரைத்துள்ள மற்றும் இந்திய பதிவாளர் ஜெனரல் மற்றும் பழங்குடியினருக்கான தேசிய ஆணையம் ஆகியவற்றால் ஒப்புக்கொள்ளப்பட்ட முன்மொழிவுகள் மட்டுமே பரிசீலிக்கப்பட்டு […]

தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது.. கச்சா எண்ணெய் விலைகள் கூட உச்சத்தை தொட்டு வருகிறது.. தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவை எப்போதும் விலை உயர்ந்த உலோகங்களாக உள்ளன.. அதே போல் வைரங்களுக்கும் எப்போதும் தேவை உள்ளது.. வைரங்களின் விலை எப்போதுமே அதிகமாக தான் இருக்கும்.. தங்கம், வெள்ளி, வைரம் ஆகியவை விலை உயர்ந்த ஆபரணங்கள் என்பது நம் அனைவருக்கும் தெரியும்.. ஆனால் தங்கம் மற்றும் […]

கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தோஹாவுக்கு சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இருந்து 188 பயணிகளுடன் கத்தார் தலைநகர் தோஹாவுக்கு நேற்று காலை 9 மணிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட்டது. அந்த விமானம் புறப்பட்டுச்சென்ற 2 மணி நேரத்தில் நடுவானில் பறந்தபோது அதில் திடீரென்று தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து […]

ரூ. 2000க்கு மேல் செய்யப்படும் பணப்பரிவர்த்தனைக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பது தொடர்பாக தற்போது வரை எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று நிதியமைச்சகம் விளக்கமளித்துள்ளது. இந்தியாவிலும் உலக அளவிலும் UPI பயன்பாடு வேகமாக அதிகரித்து வருகிறது. காய்கறி விற்பனையாளருக்கு பணம் செலுத்துவதற்கோ அல்லது ஆன்லைனில் ஷாப்பிங் செய்வதற்கோ, பெரும்பாலான மக்கள் இப்போது UPI ஐப் பயன்படுத்துகின்றனர். இந்தநிலையில் UPI வழியாக ரூ.2000க்கு மேல் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு வரி விதிக்கப்படும் என்று செய்திகள் […]

அதிகரித்து வரும் டிஜிட்டல் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், முக்கிய அமைப்புகள் மற்றும் குடிமக்களின் தரவைப் பாதுகாக்க ஒவ்வொரு இந்திய நகரமும் ஒரு தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரியை (CISO) நியமிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக டெல்லியில் நடைபெற்ற சைபர் பாதுகாப்பு தயார்நிலை குறித்த உயர்மட்டக் கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை செயலாளர் கோவிந்த் மோகன், ஒவ்வொரு இந்திய நகரத்திற்கும் ஒரு நியமிக்கப்பட்ட தலைமை […]