நாடு முழுவதும் நாளை 11 மாநிலங்களில் வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. குருநானக் ஜெயந்தி, குர்புரப் என்றும் அழைக்கப்படுகிறது, இது சீக்கிய மதத்தைப் பின்பற்றுபவர்களுக்கு மிக முக்கியமான பண்டிகையாகும். முதல் சீக்கிய குருவான குருநானக் தேவ் அவர்களின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் இது கொண்டாடப்படுகிறது. இந்து நாட்காட்டியின்படி கார்த்திகை மாதத்தில் பதினைந்தாவது சந்திர நாளான கார்த்திக் பூர்ணிமா நாளில் இந்த விழா கொண்டாடப்படுகிறது, மேலும் பொதுவாக கிரிகோரியன் நாட்காட்டியின்படி நாளை இது […]

டெல்லியில் காற்றின் தரம் சற்று மேம்பட்டுள்ளதால் பள்ளிகள் திறப்பது தொடர்பாக இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. தலைநகரில் ஜிஆர்ஏபி ஸ்டேஜ் 4 நடவடிக்கைகளை மத்திய அரசு நீக்கியதால் ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் காற்றின் தரம் சற்று மேம்பட்டது. டெல்லியில் காற்றின் தரம் ‘கடுமையானது’ என்பதில் இருந்து ‘மிகவும் மோசமான’ வகைக்கு மேம்பட்டதால், ஆரம்பப் பள்ளிகளை மூடுவது உட்பட நகரத்தில் விதிக்கப்பட்ட கூடுதல் கட்டுப்பாடுகள் ரத்து செய்யப்படலாம். இது தொடர்பாக மாநிலத்தின் […]

திருப்பதி திருமலை கோயிலுக்கு சொந்தமான பணம், சொத்து, கையிருப்பு மற்றும் தங்க இருப்பு பற்றிய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் பணம் கையிருப்பு மற்றும் எவ்வளவு தங்கம், சொத்து உள்ளது என்பது பற்றிய தகவலை வெள்ளை அறிக்கையாக தேவஸ்தன நிர்வாகம் வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது’’ தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் 10.3 டன் தங்கமும், ரூ.15,938 கோடி பணமும் டெபாசிட் ஆகி உள்ளது. கோயிலின் உபரி வருமானத்தை ஆந்திர அரசு […]

மருத்துவமனைகளில் ஆதார் அட்டை பிரசவத்திற்கு தேவை என்ற கட்டாயம் இனி இருக்காது என்று அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். தமிழகத்தை சேர்ந்த கஸ்தூரி என்ற பெண் கர்நாடகாவில் வசித்து வந்துள்ளார். நிறை மாத கர்ப்பிணியான இவர் அரசு மருத்துவமனைக்கு சென்றிருக்கின்ாறர். ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்காமல் ஆதார் அட்டைகட்டாயம் தேவை என தெரிவித்துள்ளனர். அவர்கள் கேட்ட ஆவணம் இல்லாததால் வீட்டுக்கு திரும்பினார்.அப்போது வலி ஏற்பட்டுள்ளது. அக்கம்பக்கத்தினர் பிரசவம் பார்த்துள்ளனர். இரட்டை குழந்தைகள் […]

விவசாயிகளுக்கு வருடத்திற்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில், பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், கூடுதலாக ரூ.3 ஆயிரம் வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. இமாச்சல் பிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது. தற்போது ஆட்சிக் காலம் முடிந்து, இம்மாதம் 12ஆம் தேதி அனைத்து தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக, அனைத்து கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். […]

நாய்க்கு தாமதமாக சோறு வைத்த காரணத்தினால் உறவுக்கார பையனை அடித்தே கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் பாலக்காடு பகுதியில் மன்னேகோடே பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர்கள் ஹர்ஷத் மற்றும் ஹக்கீம். இன்று காலை ஹக்கீமும் அவரது நண்பர்களும் ஹர்ஷத்தை மயங்கிய நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவர்களிடம் ஹர்ஷத் மாடியில் இருந்து விழுந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். அந்த நபருக்கு சிகிச்சை அளித்த நிலையில் அவன் மரணமடைந்தான். இதையடுத்து […]

உத்தரப்பிரதேசத்தில் 10 வயது சிறுவன், குழந்தைகளின் ஆபாச வீடியோவை பார்த்து 7 வயது பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் பங்கஜ் மிஷ்ரா என்ற காவல் நிலைய அதிகாரி கான்பூர் பகுதியில் நடைபெற்ற இச்சம்பவத்தை பதிவு செய்துள்ளார். அதன்படி, 10 வயது சிறுவன் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதியப்பட்டுள்ளது. சிறுவன் மீது, போக்சோ சட்டத்தின்கீழ் எஃப்.ஐ.ஆர். பதியப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, அச்சிறுவன் அம்மாவட்டத்தின் […]

பாம்பு கடிக்கு பயந்து ஒரு கிராம மக்கள் அசைவ உணவே சாப்பிடுவதில்லை. அதன் பின்னணி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒடிசா மாநிலம் தேன்கனல் மாவட்டத்தில் பென்டசாலியா கிராமத்தில் உள்ள மக்கள் அசைவ உணவே சாப்பிடுவதில்லை. இதுபற்றிய தகவல் வெளியானதும், அந்த கிராம மக்கள் அசைவ உணவை சாப்பிடாதது ஏன்? என்று பலரும் விசாரிக்க தொடங்கினர். இதில் வெளியான தகவல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதற்கு காரணம் இக்கிராம மக்கள் அசைவ […]

தனது மகளிடம் டியூசன் கற்க வந்த சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். சத்தீஸ்கர் மாநிலம் துர்க் மாவட்டத்தில் தனது பெண்ணிடம் டியூசன் கற்க வந்த சிறுமிகளிடம் முதியவர் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக அப்பகுதி காவல்துறையினருக்கு புகார் வந்தது. பாதிக்கப்பட்ட 11 மற்றும் 12 வயதுடைய சிறுமிகள் டியூசன் ஆசிரியையின் தந்தையை அடையாளம் காண்பித்ததை அடுத்து, அந்த நபர் கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் […]

இந்தியாவின் முதல் வாக்காளர் ஷியாம் சரண் நேகி, தனது 106-வது வயதில் காலமானார். 1947ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்று, முதல் பொதுத்தேர்தல் 1951ஆம் ஆண்டு நடைபெற்றது. இந்த முதல் தேர்தலில் வாக்களித்த வாக்காளர் தற்போது 106-வது வயதில் இன்று காலமானார். தனது மரணத்திற்கு 4 நாட்களுக்கு முன்னர் கூட இமாச்சலப் பிரதேச தேர்தலில் வாக்களித்து இவர் தனது ஜனநாயக கடமையை ஆற்றிவிட்டு தான் தற்போது மறைந்துள்ளார். இமாச்சலப் பிரதேசம் […]