மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த தம்பதியினர் மீது மிளகாய் பொடி தூவி கொலை செய்துவிட்டு வழிப்பறி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் நெக்குண்டி என்ற கிராமம் உள்ளது. இக்கிரமாத்தைச் சேர்ந்த தாமு(25) என்பவர் அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த அனுராதா (23) என்பவரை திருமணம் செய்து கொண்டார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் ஆன நிலையில் தன் அம்மாவீட்டுக்கு சென்றுவிட்டு மாமியார் […]

கேரளாவில் காதலன் கொலை செய்யப்பட்ட வழக்கில் அடுத்த அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் பாறசாலை மூறியங்கரை பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராஜன். இவரது மகன் ஷாரோன் ராஜ் (23). இவர் குமரி மாவட்டம் நெய்யூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிஎஸ்சி இறுதியாண்டு ரேடியாலஜி படித்து வந்தார். கல்லூரிக்கு செல்லும் பேருந்தில் களியக்காவிளை அருகே ராமவர்மன்சிறை பகுதியைச் சேர்ந்த கிரீஷ்மா (22) என்ற கல்லூரி மாணவியுடன் […]

நம்ம மெட்ரோ எனப்படும் பெங்களூரு மெட்ரோ ரயில்களில் பயணிக்க வாட்ஸ் ஆப் பயன்படுத்தி டிக்கெட் பெறும் புதிய முறையை நம்ம மெட்ரோ அறிமுகப்படுத்தியுள்ளது. பெங்களூரு மெட்ரோ ரயில் கார்பரேஷன் வெளியிட்டுள்ள தகவலில் ’’வாட்ஸ் ஆப்பில் டிக்கெட் பெறும்  வகையிலும் சேட் பாக்ஸ்-ல் இந்த வசதியை பெற முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நம்மெட்ரோ பயனர்கள் இனி டோக்கன்களையோ, அட்டைகளையோ கொண்டு செல்ல வேண்டிய அவசியம் இருக்கது. இந்த சேட்பாட் மூலம் டிக்கெட் […]

குஜராத்தில் பிரதமர் நரேந்திரமோடி வருகையை ஒட்டி மருத்துவமனையில் ஒரே ராத்திரியில் மருத்துவமனையை பராமரிப்பு பணிகள் மேற்கொண்டு பளபளவென மாற்றியுள்ளனர். குஜராத்தின் மோர்பி பகுதியில் பாலம் இடிந்து விபத்து ஏற்பட்டதில் 141 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் பா.ஜ.க. எம்.பி.யின் உறவினர்கள் 12 பேர் உயிரிழந்தனர். 170க்கும் மேற்பட்டவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி குஜராத் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை நேரில்சந்திக்க வருகை தருகின்றார். […]

ரெப்போ ரேட் உயர்வால் வாடிக்கையாளர்கள் பெற்ற வீட்டுக்கடன், வாகன கடன், தனிநபர் கடன் ஆகியவற்றுக்கான வட்டி உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரிசர்வ் வங்கி கடந்த சில மாதங்களாக பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக வங்கிகளுக்கு அளிக்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டியை உயர்த்தி வருகிறது. இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை குழு கூட்டம் வரும் 3ஆம் தேதி நடைபெறவுள்ளது. அந்த கூட்டத்தில் மீண்டும் ரெப்போ வட்டி உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அறிவிப்பு […]

மகாராஷ்டிரா பகுதியில் நடந்த இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில காமக்கொடூரர்கள் வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகளையும் விட்டு வைப்பதில்லை. சில நாட்களாக தொடர்ந்து வளர்ப்பு பிராணிகளுக்கு பாலியல் தொல்லை சம்பவங்கள் குறித்து செய்திகள் வெளிவந்த வண்ணமாக உள்ளன. மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பை, பவாய் பகுதியில் 25 வயது இளைஞர் ஒருவர் நாய்க்குட்டிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பவாய் ஹிரா பென்னா என்ற வணிக […]

ICICI வங்கியில் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Relationship Manager பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 12 ஆண்டு முன் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் பட்ட படிப்பு முடித்தவராக இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு பணிக்கு ஏற்றபடி […]

திருப்பதியில் பக்தர்களுக்கு ’டைம் ஸ்லாட் டோக்கன்’ வழங்கும் நடைமுறை மீண்டும் நடைமுறைப்படுத்த தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது. திருப்பதியில் தினம்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதனால், பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்ய வேண்டி உள்ளது. இதனை தவிர்க்கும் வகையில், பக்தர்களுக்கான டோக்கன் வழங்கப்படாமல் நேரடியாக சுவாமி தரிசனம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டார்கள். அதனால், இலவச தரிசனத்தில் செல்லும் பக்தர்கள் தேதி மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும் […]

சில வாரங்களுக்கு முன்பு இந்திய ரிசர்வ் வங்கி, மத்திய வங்கி டிஜிட்டல் நாணயம் (CBDC) வெளியிடுவது பற்றிய செய்திக் குறிப்பை வெளியிட்டது. இந்நிலையில், நாடு முழுவதும் நடந்த சோதனை முயற்சியின் அடிப்படையில், டிஜிட்டல் நாணயம் இன்று (நவம்பர் 1) அறிமுகப்படுத்த உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில் சோதனை முறையில் டிஜிட்டல் கரன்சி இன்று முதல் ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதை முதற்கட்டமாக e₹-W என்ற டிஜிட்டல் கரன்சியை மொத்த […]

குழந்தைகளை பாரபட்சமின்றி, உணர்வுடன் நடத்துமாறு பள்ளி ஆசிரியர்களுக்கு கர்நாடகா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெங்களூருவில் உள்ள செயின்ட் ஜோசப் கான்வென்ட் சகோதரி கிளாரா இரண்டு மாணவிகள் காணாமல் போய்விட்டனர்.‌ இதனால் தலைமை ஆசிரியை தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனோன்ரி தாக்கல் செய்தார். மனுவை, விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி பி.வீரப்பா தலைமையிலான உயர் நீதிமன்ற அமர்வு, மாணவர்களை மனிதாபிமானத்துடன் நடத்த வேண்டும் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். மாணவர்களின் வாழ்க்கையை வடிவமைக்க ஆசிரியர்களும், பெற்றோர்களும் […]