மிகக் குறைந்த விலையில் ஜியோ லேப்டாப் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக ஜியோ நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மிகக் குறைந்த விலையில் 4 ஜி ஜியோ ஸ்மார்ட் போன் வெளியிட்டது. இதுமிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதனிடையே அடுத்த திட்டமாக ரூ.15000 மதிப்பில் பிரத்யேக ஜியோ ஓ.எஸ்.உடன் மடிக்கணினி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜி யோ நிறுவனம் உலக நிறுவனங்களான குவால்காம் மைக்ரோசாப்ட் போன்ற […]

மகளிர் ஆசிய கோப்பைக்கான டி.20 போட்டியில் மலேசிய அணியுடன் மோதி இந்திய அணி வெற்றி பெற்றது. மகளிர் ஆசியக்கோப்பைக்கான டி.20 போட்டிகள் நடைபெற்றுவருகின்றது. முதல் போட்டியில் இந்திய அணி இலங்கையுடன் மோதி வெற்றி பெற்ற நிலையில் இன்று மலேசிய அணியுடன் மோதியது. முதல்போட்டியில் மந்தனா , பூஜா, ஸ்னேக் ராணா , ரேணுகா சிங் ஆகிய நான்கு வீராங்கனைகள் விளையாடவில்லை. பதிலாக மேகனா , கிரண் , மேக்னா , […]

புதுச்சேரியில் ராணுவத்தை இறக்கி அறிவிக்கப்படாத அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார். புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, தனது இல்லத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், ”கடந்த காங்கிரஸ் ஆட்சியில், மின்துறையை தனியார் மயமாக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்ட போதும் அதை எதிர்த்து சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றப்பட்டது. மின்துறை தனியார் மையம் ஆக்கினால் பல கோடி ரூபாய் சொத்து தனியாரிடம் ஒப்படைக்கப்படும். மின்சார […]

மாத தவணைத் தொகைக்கான வட்டி விகிதமும் உயர வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் தான் செயல்பட்டு வருகிறது. இதனால், அனைத்து வங்கிகளுக்குமான சேவை கட்டணம் முதல் மாத தவணை வரை அனைத்து கட்டணங்களும் ரிசர்வ் வங்கியால் தான் நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்நிலையில், ரிசர்வ் வங்கியானது தற்போது ரெப்போ வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது. அதன்படி 50 சதவீதம் ரெப்போ வட்டி விகிதமானது […]

மேற்குவங்க மாநிலத்தில் துர்காதேவி சிலைக்கு கீழே மகிஷாசூரன் சிலையை வைப்பதற்கு பதில் மகாத்மா காந்தியின் சிலை வைக்கப்பட்டதால் சர்ச்சை கிளம்பியுள்ளது. மேற்கு வங்க மாநில் கல்கத்தாவில் இந்திய இந்து மகாசபைசார்பில் துர்கா பூஜை கொண்டாடப்பட்டது. இதற்காக துர்கா சிலை அலங்காரம் செய்யப்பட்டு அழகான அமைப்பில் வைக்கப்பட்டது. சிலையின் காலுக்கு கீழே மகிஷாசூரன் சிலைக்கு பதிலாக மகாத்மா காந்தி சிலை வைக்கப்பட்டிருந்தது. இதனால் சர்ச்சை வெடித்தது. இது தொடர்பாக சமூக ஆர்வலர்கள் […]

வடகிழக்கு பருவமழை வரும் 20ஆம் தேதி தொடங்கும் என வெளியான தகவல் உண்மையில்லை என இந்திய வானிலை ஆய்வு மையம் விளக்கமளித்துள்ளது. இந்தாண்டு வடகிழக்கு பருவமழைக்கான நீண்ட கால வானிலை முன்னறிவிப்பினை கடந்த 30ஆம் தேதி இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருந்தது. இதற்கிடையே, வடகிழக்கு பருவமழை வரும் 20ஆம் தேதி தொடங்கும் என தகவல் ஒன்று கசிந்தது. இது தவறான தகவல் என இந்திய வானிலை ஆய்வு மைய […]

ஒரு கோடி இந்தியர்களின் வாட்ஸ் அப் கணக்குகளை அந்நிறுவனம் முடக்கியுள்ளது. வாட்ஸ்அப் நிறுவனத்தை பேஸ்புக் நிறுவனம் வாங்கிய பின்னர் அது பல மாற்றங்களுக்கு உட்பட்டுள்ளது. அதே நேரம் போலி கணக்குகள், தவறான செய்திகளை பரப்புதல் போன்ற சர்ச்சைகளில் அடிக்கடி சிக்கி வருகிறது. இதனால், வாட்ஸ்அப் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளிலும் இறங்கியுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகப்படுத்திய அந்நிறுவனம், பல்வேறு கணக்குகளையும் அதிரடியாக முடக்கி வருகிறது. அரசின் புதிய விதிகள் காரணமாகவும் இந்த […]

தகவல் அறியும் சட்டத்தின் மூலம் விவாகரத்து கோரிய கணவரின் மாத சம்பளத்தை பெண் ஒருவர் அறிந்துகொண்ட சம்பவம் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. ‘உங்களது வருமானம் எவ்வளவு’?… பலருக்கும் சங்கடத்தை அளிக்கும் கேள்வி இதுதான் என்பதில் சந்தேகம் இல்லை.. ஏனென்றால், தங்கள் சொந்த விஷயங்களை கூட பகிர்ந்து கொள்ளும் பலரும் தங்களின் வருமானம் குறித்து அவ்வளவு எளிதில் வாய் திறக்க மாட்டார்கள் என்பது உண்மைதான். குடும்பத்தினருடன் மட்டுமே பகிர்ந்து […]

பெங்களூருவில் ஆட்டோ ஓட்டுனர்கள் குறுகிய தூரத்திற்கே அதிக அளவு கட்டணம் கேட்பார்கள் அவ்வாறு கேட்டால் ,இந்த எண்ணை தொடர்பு கொண்டு புகார் செய்யுங்கள் . பெங்களூருவில் புதிதாக பயணம் செய்பவர்கள் மற்றும் குறுகிய தூரத்திற்கு பயணம் செய்யும் பெங்களூருவாசிகளுக்கு ஆட்டோ கட்டணம் கூடுதலாக கேட்டால் என்ன செய்ய வேண்டும் என்பது பலருக்கும் தெரியாது. ஆட்டோவில் பயணம் செய்பவர்கள் இறங்கியதும் கூடுதலாக கட்டணம் செலுத்த கட்டாயப்படுத்தப்படுவார்கள். குறுகிய தூரத்திற்கே அதிக அளவில் […]

மைசூருவில் காங்கிரஸ் கட்சி எம்.பி. ராகுல்காந்தி 2-வது நாளாக கொட்டும் மழையிலும் ’பாரத் ஜோடோ யாத்திரை ’யில் பங்கேற்றார். மைசூருவில் 2-வது நாளாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஜோடோ யாத்திரை நடத்தினார். கடந்த செப்டம்பர் 7ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து ஜோடோ யாத்திரையை தொடங்கினார். கேரளாவில் 19 நாட்கள் யாத்திரை முடிந்தது. கர்நாடகாவின் சாம்ராஜ் நகர் மற்றும் குண்டலுபேட்டையில் ராகுல்காந்திக்கு வரவேற்புஅளிக்கப்பட்டது. இதைடுத்து நேற்று மைசூருவில் […]