திருமலை திருப்பதி தேவஸ்தான கோவில்களில் பணப் பரிவர்த்தனைக்கு பதில், ‘டிஜிட்டல்’ பரிவர்த்தனையை அதிகரிக்க தேவஸ்தானம் முடிவு எடுத்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். அதனால் பக்தர்களின் வசதிக்கு ஏற்றவாறு கோவில் நிர்வாகம் அவ்வப்போது புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. தற்போது திருமலை திருப்பதி தேவஸ்தான கோவில்களில் பணப்பரிவர்த்தனைகளுக்கு பதில், டிஜிட்டல் பரிவர்த்தனையை அதிகரிக்க தேவஸ்தான முடிவு செய்துள்ளது. அதன்படி கோவில்களில் […]

பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய நபரின் அந்தரங்க உறுப்பை பெண் ஒருவர் பிளேடால் அறுத்த சம்பவம் பீகாரில் அரங்கேறியுள்ளது. பீகார் மாநிலம் பங்கா மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயது பெண் ஒருவருக்கு சமீபத்தில் திருமணமாகியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று இந்த இளம்பெண்ணின் கணவர் வெளியே சென்ற நிலையில், இவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இரவு சுமார் 10 மணியான நிலையில், வீட்டின் கதவை பெண் தாழிட மறந்து உள்ளே இருந்துள்ளார். […]

ஜூன் மாதத்துக்கான மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.1.61 லட்சம் கோடியை தாண்டியுள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 11.7 சதவீதம் வரை அதிகளவில் ஜிஎஸ்டி வரி வசூல் கிடைத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.   இந்தியாவில் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை நடைமுறையில் உள்ளது. கடந்த 2017 ம் ஆண்டு நாடு முழுவதும் இந்த ஜிஎஸ்டி வரி அறிமுகம் செய்யப்பட்டது. பல வரி விதிப்பு முறைகளை ஒருங்கிணைத்து ஜிஎஸ்டி […]

கடந்த வாரம் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த ஒரு டெலிவரிபாய், பெண் ஒருவருக்கு பீட்சா டெலிவரி செய்துள்ளார். டெலிவரி செய்யப்பட்ட மறுநாள் அப்பெண்ணின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் தன்னை அப்பெண்ணிடம் அறிமுகப்படுத்திக்கொண்ட அந்த இளைஞர், “நேற்று உங்களுக்கு பீட்சா கொடுக்க வந்தது நான் தான். உங்களை நான் விரும்புகிறேன்” என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த இளைஞரின் குறுஞ்செய்தியை ஸ்கிரீன்ஷாட் எடுத்து அந்த பெண் இணையத்தில் […]

மணிப்பூரில் கடந்த இரண்டு மாதங்களாக இனக்கலவரமும் போராட்டமும் தொடர்ந்து வருகிறது. கலவரத்தை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், எதுவும் பயன் தந்ததாக தெரியவில்லை. கலவரத்தை கட்டுப்படுத்த முடியாமல் மத்திய, மாநில அரசுகள் திணறி வருகிறது.  மாநில காவல்துறை ஒரு தலைபட்சமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ராணுவம் அனுப்பப்பட்டது. ஆனால், வன்முறையால் பெரிதும் பாதிக்கப்பட்ட […]

ஓடும் பேருந்தில் பெண் பயணியுடன் நடத்துனர் உடலுறவில் ஈடுபட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இதுதொடர்பான வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்தராஸ் டிப்போவைச் சேர்ந்த அரசுப் பேருந்து ஒன்று கடந்த சில தினங்களுக்கு முன்பு லக்னோவை நோக்கிச் சென்றுள்ளது. ஹாத்தராஸ் பகுதியிலிருந்து லக்னோ சுமார் 378 கி.மீ தூரத்தில் இருக்கிறது. பேருந்தில் பயணிக்க சுமார் 6 மணி நேரம் வரை ஆகும். […]

பசுமை போக்குவரத்தை ஊக்குவிக்க இந்தியாவில் மின்சார வாகன கலாச்சாரத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகிறார் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி. சமீபத்தில் நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற இவர், எத்தனால் எரிபொருளில் இயங்கும் வாகனங்கள் குறித்த எதிர்கால திட்டங்களை பகிர்ந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், ”விரைவிலேயே நம் நாடு முழுவதும் எத்தனாலில் இயங்கும் வாகனங்களை நீங்கள் பார்க்கப் போகிறீர்கள். முன்னனி கார் உற்பத்தியாளரான […]

ஜூலை 8 ஆம் தேதி வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து மணிப்பூர் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் மெய்தெய் சமூகத்தினர் மற்றும் பழங்குடியின சமூகத்தினரிடையே கடந்த மே 3 ஆம் தேதி ஏற்பட்ட மோதல் 2 மாதங்கள் தாண்டி தற்போது வரை நடைபெற்று வருகிறது. இந்த கலவரத்தை தடுக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் மெய்தெய் சமூகத்தினர் தங்களது உரிமைக்காக தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர். அதாவது, மெய்தெய் […]

நாடு முழுவதும் கொரோனா சிகிச்சைகள் இருப்பவர்களின் எண்ணிக்கை 1490 ஆக குறைந்திருக்கிறது. நோய்த்தொற்று பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. அதன் அடிப்படையில், இன்று புதிதாக 53 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் இதனை தொடர்ந்து, ஒட்டுமொத்த பாதிப்பு 4.49 கோடி என்று கூறப்படுகிறது. இன்று காலை 8 மணி அளவில் வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில், நோய் தொற்று பாதிப்பு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒட்டுமொத்தமாக 5,31,907 […]

மத்திய பிரதேச மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சியின் நடத்திய பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுக் கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இன்று நாட்டில் பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களில் மன நிறைவான ஆட்சி நடைபெறுகிறது. மன நிறைவு திட்டங்கள் அனைத்து மக்களையும் சென்றடைகிறது. யாரிடமும் பாகுபாடு காட்டப்படுவதில்லை. மின்சார திட்டம் என்றால் எல்லோருக்கும் மின்சாரம் கிடைக்கிறது. குடிநீர் திட்டத்தில் எல்லோருக்கும் குடிநீர் வழங்கப்படுகிறது. இதில் யாரிடமும் பாகுபாடு காட்டப்படாது. ஜாதி, […]