குழந்தையை தத்தெடுக்க அளித்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து திருநங்கை பிரித்திகா யாஷினி தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் குடியேற்றத்துறை அதிகாரியாக பணிபுரிபவர் தான் திருநங்கை பிரித்திகா யாஷினி. இவர், ஏற்கனவே தமிழக காவல்துறையில் எஸ்.ஐ.யாக பணிபுரிந்து வந்தவர். தற்போது குடியேற்றத்துறை அதிகாரியாக செயல்பட்டு வருகிறார். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றினை தொடர்ந்திருந்தார். அதில், “பெற்றோரை பிரிந்து தனியாக வாழ்வதால் ஏற்படும் வெறுமையை […]

கடைசி நிமிட சிரமத்தைத் தவிர்க்க வங்கி விடுமுறை நாட்களை முன்கூட்டியே சரிபார்ப்பது எப்போதும் நல்லது. விடுமுறை நாட்களில் வங்கிக்குச் செல்ல வேண்டியிருந்தால், அது மூடப்பட்டிருப்பதைக் கண்டு நீங்கள் ஏமாற்றமடையலாம். இது உங்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தலாம், ஏனெனில் உங்கள் பரிவர்த்தனையை முடிக்க அடுத்த நாள் வரை காத்திருக்க வேண்டியிருக்கும். மேலும், வங்கி விடுமுறைக்கு நீங்கள் ஒரு பெரிய நிதி பரிவர்த்தனை திட்டமிடப்பட்டிருந்தால், நீங்கள் அதை மீண்டும் திட்டமிட வேண்டியிருக்கும். விடுமுறை நாட்களில் […]

ஆதார் அட்டை என்பது ஒவ்வொரு குடிமகனின் முக்கிய அடையாள ஆவணமாக பார்க்கப்படுகிறது. நாட்டில் நடைபெறும் பல்வேறு மோசடிகளில் இருந்து தப்பிப்பதற்கு ஆதார் கார்டுடன் பான் கார்டு, ரேஷன் கார்டு, வங்கிக் கணக்கு என அனைத்து முக்கிய ஆவணங்களையும் இணைத்திருக்க வேண்டும் அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி ரேஷன் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க பல மாதங்களாகவே கால அவகாசம் வழங்கப்பட்டு வரும் நிலையில், இன்னும் பலரும் இணைக்காமலேயே கிடப்பில் […]

கேரளா மாநிலத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மேற்கு கடற்கரை பகுதிகளில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலவி வருகிறது. எனவே, கேரளாவின் பெரும்பாலான மாவட்டங்களில் ஜூலை 3ஆம் தேதி வரை மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் […]

மகாராஷ்டிராவில் பேருந்து தீப்பிடித்து 25பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவின் புல்தானாவில் உள்ள சம்ருத்தி மகாமார்க் விரைவு சாலையில் 32 பயணிகளுடன் சென்ற பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் குறைந்தது 25 பேர் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்கள் புல்தானா சிவில் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு வருவதாக துணை எஸ்பி பாபுராவ் மகாமுனி தெரிவித்தார். இச்சம்பவம் இன்று அதிகாலை 2 மணியளவில் ஏற்பட்டது. பேருந்தில் இருந்து 25 உடல்கள் சடலமாக […]

ரூ.20 க்கு குறைவான விலை கொண்ட சிகரெட் லைட்டர்களின் இறக்குமதியை மத்திய அரசு தடை செய்துள்ளது. இது குறித்து வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் (டிஜிஎஃப்டி) வெளியிட்ட அறிவிப்பில் சிகரெட் லைட்டர்களின் இறக்குமதிக் கொள்கை விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இதுவரை இறக்குமதி இலவசம் என்ற கொள்கை மாற்றியமைக்கப்பட்டு, ரூ.20 க்கு குறைவான விலை கொண்ட சிகரெட் லைட்டர்களின் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஒரு லைட்டரின் சிஐஎஃப் […]

தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றம் கண்டுள்ளதால் நடுத்தர வாசிகள் அவதியடைந்துள்ளனர். நாடு முழுவதும் தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு போன்ற அத்தியாவசிய காய்கறிகளின் விலையும் அரிசி, கோதுமை, துவரம் பருப்பு ஆகியவற்றின் விலையும் கடந்த ஒரு மாதத்தில் கடுமையாக உயர்ந்துள்ளன. இதனால் ஏழை மக்கள் மற்றும் நடுத்தர குடும்ப மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கொள்முதல் விலை உயர்ந்துள்ளதால் சிறிய அளவிலான டீக்கடைகள் மற்றும் சிறு அளவிலான உணவகங்கள் நடத்துபவர்கள் […]

ரயில்களில் ஒவ்வொரு பயணியும் 2 சீல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை எடுத்துச் செல்ல டெல்லி மெட்ரோ நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. டெல்லி மெட்ரோ ரயில் 20 ஆண்டுகளில் நகரத்தின் உயிர்நாடியாக மாறியுள்ளது , போக்குவரத்துக்கு மிகவும் வசதியான வழிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்நிலையில், ஒரு நபர் 2 சீல் வைக்கப்பட்ட மது பாட்டில்களை ரயிலில் எடுத்து செல்லலாம் என்று டெல்லி மெட்ரோ நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. ஆனால், பயணத்தின்போது பயணிகளின் ஆவணங்களை […]

மத்திய அரசின் உத்தரவை பின்பற்றாத ட்விட்டருக்கு ரூ.50 லட்சம் அபராதம் விதித்து கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் தடை உத்தரவுகளை எதிர்த்து மைக்ரோ பிளாக்கிங் தளமான ட்விட்டர் தாக்கல் செய்த மனுவை கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கடந்த 2021-2022ம் ஆண்டுக்கு இடையில் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY), சில ட்வீட்கள் மற்றும் கணக்குகளை முடக்குவதற்கு ட்விட்டருக்கு உத்தரவிட்டது. ஆனால், நிறுவனம் மத்திய அரசின் […]

ஆதாருடன் பான் கார்டை இணைப்பதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்தது. இணைக்காத பான் கார்டுகள் இன்றுமுதல் செல்லாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியர்களின் தனிப்பட்ட அடையாளமாக இருக்கும் ஆதார் எண்ணை குடிமக்களின் முக்கியமான ஆவணங்களுடன் இணைப்பதை கட்டாயமாக்கியுள்ளது மத்திய அரசு. அதன்படி குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பான் கார்டு உள்ளிட்ட அனைத்து ஆவணங்களுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். இந்தியாவில் வரி ஏய்ப்பை தடுக்கும் விதமாக பான் கார்டுடன் […]