சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை விண்ணைத் தொட்டு வரும் நிலையில், சாமானிய மக்கள் தங்களின் மருத்துவச் செலவுகள், கல்வித் தேவைகள் மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்காக தங்கத்தை அடகு வைப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளை விட, கிராமப்புறங்களில் உள்ள கூட்டுறவு வங்கிகளே மக்களின் முதல் தேர்வாக உள்ளன. இதற்கு முக்கியக் காரணம், அங்குள்ள மிகக்குறைவான வட்டி விகிதமே ஆகும். கடந்த தேர்தலுக்குப் பிறகு குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் நகைக்கடன் […]

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவுக்கு பேரிடியாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. அதிமுகவின் மூத்த தலைவரும், முன்னாள் சபாநாயகருமான தனபாலின் மகன் லோகேஷ் தமிழ்செல்வன், நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகத்தில்’ தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். தற்போது அவினாசி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ-வாக தனபால் பதவி வகித்து வரும் சூழலில், அவரது சொந்த மகனே மாற்றுப் பாதைக்கு சென்றிருப்பது எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுகவின் […]

தமிழக அரசியல் களம் தற்போது யாரும் எதிர்பாராத ஒரு புதிய திருப்பத்தை நோக்கி நகர தொடங்கியுள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசியதுதான் இப்போதைய ‘ஹாட் டாப்பிக்’. இந்தச் சந்திப்பின் போது, முதலமைச்சர் ஸ்டாலினின் கடந்த கால ஆட்சிச் செயல்பாடுகள் மிகவும் சிறப்பாக இருந்ததாக பாராட்டியதுடன், வரும் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகும் மீண்டும் திமுகவே ஆட்சியமைக்கும் என்று ஓபிஎஸ் பேசியுள்ளது அரசியல் வட்டாரங்களில் பெரும் […]

தமிழக சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில், கரூர் மாவட்ட அரசியலில் அதிமுக தனது பலத்தை நிரூபிக்கும் வகையில் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முன்னாள் அமைச்சரும், அதிமுகவின் மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில், மாற்றுக்கட்சிகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொள்ளும் நிகழ்வுகள் தற்போது தீவிரமடைந்துள்ளன. கரூர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்த இணைப்பு நிகழ்வில், ஆளுங்கட்சியான திமுக மற்றும் […]

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21 அன்று உலகம் முழுவதும் உலக தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது. மொழி, கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் பன்மொழித்தன்மையை ஊக்குவிக்க, யுனெஸ்கோ (UNESCO) 1999-ல் இந்த நாளை அறிவித்தது. வங்காள மொழிக்காக போராடிய தியாகிகளை நினைவு கூரும் வகையில், தாய்மொழி உரிமையை வலியுறுத்தி இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. உலகில் அழிந்து வரும் மொழிகளைப் பாதுகாத்தல், தாய்மொழியின் முக்கியத்துவத்தை உணர்த்த வேண்டும் என்பதே இந்த நாள் கொண்டாடுவதன் நோக்கமாகும்.. […]

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு என அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. இந்த தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனைப்போட்டி நிலவுகிறது.. இதில் ஆளுங்கட்சியான திமுக ஆட்சியை தக்க வேண்டும் என்ற முனைப்பில் தீவிர தேர்தல் பணியாற்றி வருகிறது.. திமுக கூட்டணி ஏற்கனவே வலுவாக இருந்த நிலையில், மேலும் கூட்டணியை வலுப்படுத்தி […]

தமிழக நகராட்சி நிர்வாகத்துறையில் பணி நியமனங்களுக்கு லஞ்சம் பெற்ற விவகாரம் தொடர்பாகவும், டெண்டர் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் தொடர்பாகவும் அமைச்சர் கே.என். நேரு மீது வழக்குப்பதிவு செய்யக் கூறி அமலாக்கத்துறை சார்பில் தமிழக டிஜிபிக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. இந்த நிலையில் இது தொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், நகராட்சி நிர்வாக துறை நியமன முறைகேடு, டெண்டர் முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை வழங்கிய ஆதாராங்களில் முகாந்திரம் உள்ளது என்பதால் அதன் அடிப்படையில் […]

தமிழக சட்டமன்ற தேர்தல் களம் அனல் பறக்க தொடங்கியுள்ள நிலையில், திமுக கூட்டணியில் தனது கட்சியின் செல்வாக்கை நிலைநாட்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளார். தொகுதிப் பங்கீடு மற்றும் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளை முறையாக கையாள்வதற்காக, அக்கட்சியின் அவைத்தலைவர் அர்ஜுனராஜ் தலைமையில் 4 பேர் கொண்ட உயர்மட்டக் குழுவை வைகோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்தக் குழுவில் செந்திலதிபன், சு.ஜீவன் மற்றும் வி.சேஷன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். கடந்த தேர்தல்களில் இருந்த […]

தமிழக அரசியலில் ஒரு காலத்தில் மூன்றாவது சக்தியாக உருவெடுத்த தேமுதிக, தற்போது அதன் அடையாளமான ‘முரசு’ சின்னத்தை தக்கவைத்துக் கொள்ளவே பெரும் போராட்டத்தை நடத்தி வருகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலில் முரசு சின்னம் இன்னும் ஒதுக்கப்படாதது, அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்துக்கு எதிர்பாராத நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த காலத் தேர்தல்களில் போதிய வாக்கு சதவீதத்தை எட்டத் தவறியதால், தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி தேமுதிக தனது ‘அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சி’ என்ற […]

சென்னை நந்தனத்தில் நடைபெறும் திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் நிர்வாகிகள் மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.. எஸ்.ஐ.ஆர் பணிகளின் போது திமுக ஐடி விங்கின் பங்கு அளப்பரியது.. களத்தில் கழகத்திற்காக உழைப்பவர்கள் போர் வாள், இணையத்தில் களமாடுபவர்கள் ஃபயர் வாள்.. நாம் தான் கண்டண்ட்-இல் கிங். 75 ஆண்டுகளை கடந்து இன்றும் ஆட்சியில் இருக்கும் மிகப்பெரிய கட்சி தான்.. நாம் செய்துள்ள திட்டங்கள் தான் இந்தியாவிற்கே வழிகாட்டியாக […]