fbpx

”நீட் தேர்வு எழுத செல்லும் மாணவிகளை தலை முடியை அவிழ்க்க சொல்வது தேவையில்லாத விஷயம்” என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டபாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், “இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, ஏற்பட்ட சந்தோசத்தை விட இன்று அதைவிட மகிழ்ச்சியான நாளாக உள்ளது. பஹல்காமில் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட …

‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதல் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, விண்வெளி மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, “விண்வெளித்துறையில் இந்தியா வரலாறு படைத்துள்ளது. விண்வெளித்துறையில் இந்தியாவின் பயணம் மற்ற நாடுகளுடன் போட்டி போடுவதற்கு அல்ல. வளரும் நாடுகளுக்கான தொழில்நுட்ப உதவிகளை இந்தியா தொடர்ந்து வழங்கி வருகிறது. …

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்கு ஒரு ராயல் சல்யூட் என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

”ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் பாகிஸ்தான் முகாம்கள் மீது இன்று அதிகாலை இந்திய ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சுமார் 100 பேர் வரை உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்த தாக்குதல் …

அரசியல் மற்றும் சினிமாவில் பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய், தற்போது சிறிய ரக தனி விமானத்தை அதிகம் பயன்படுத்தி வருகிறார். அந்த வகையில், இந்த விமானத்தின் வாடகை குறித்த தகவல்கள் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக வெற்றிக் கழக தலைவரும், நடிகருமான விஜய், தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜன நாயகன்’ படத்தில் …

ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் திடீர் திருப்பமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரபல ரவுடி நாகேந்திரனின் 2-வது மகனை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னையில் கடந்தாண்டு ஜூலை மாதம் 5ஆம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் நாகேந்திரன், மறைந்த ரவுடி ஆற்காடு சுரேஷ் சகோதரர் …

செந்தில் பாலாஜி, போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்த காலத்தில் நியமிக்கப்பட்ட இளநிலை பொறியாளர்கள் நியமனத்தை செல்லாது என அறிவிக்கக் கோரிய மேல் முறையீட்டு மனு மீது இன்று காலை 10.30 மணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்த செந்தில் பாலாஜி மீது …

அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.10,000-இல் இருந்து ரூ.20,000 ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு பண்டிகை கால முன்பணம் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2019ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சியின் போது அப்போது துணை முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர் செல்வம் அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணத்தை ரூ.5 ஆயிரத்தில் …

பிரபல நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் மனைவி நேற்று காலமான நிலையில், அவரது உடலுக்கு நடிகர் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது, துக்க வீட்டில் இருந்து விஜய் புறப்பட்டபோது சிரித்ததாக சமூக வலைதளங்களில் கண்டனங்கள் குவிந்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் பல தசாப்தங்களாக காமெடியில் கலக்கி வருபவர் கவுண்டமணி. நொடிக்கு நொடி கவுண்டர் கொடுக்கும் …

பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதிகள் தமிழ்நாட்டில் பதுங்கியிருக்கலாம் என்று பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பரபரப்பை கிளப்பியுள்ளார்.

ஜம்மு – காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கடந்த 22ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பதாக …

பட்டுக்கோட்டை அருகே பாஜக பெண் பிரமுகர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் மீன் மார்க்கெட் சந்து, பகுதியில் வசித்து வருபவர் பாலன் (45). இவரது மனைவி சரண்யா (35). இவர் பாஜக பிரமுகராக இருந்தார். இவருக்கும் மதுரையைச் சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவருக்கும் ஏற்கனவே திருமணமாகி …