fbpx

பெண்கள் குறித்து அமைச்சர் பொன்முடி பேசியது தொடர்பாக உடனடியாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.. இல்லாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறியுள்ளார்.

அமைச்சர் பொன்முடி அண்மையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசும்போது, பெண்கள் குறித்தும், சைவ மற்றும் வைணவ மதங்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில், …

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் விரைவில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என அமைச்சர் கயல்விழி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்கள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் தான், விரைவில் 1.55 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும் என அமைச்சர் கயவிழி சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். சட்டசபையில் மனிதவள …

“தெய்வங்களுக்கு வாக்குரிமை இருந்தால், அந்த வாக்கும் எங்கள் முதலமைச்சருக்கு தான் கிடைக்கும்” என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின்போது பேசிய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, “இந்து சமய அறநிலையத்துறை மூலம் 1,800 திருமணங்கள் நடத்தப்பட்டுள்ளது. திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை 2,820 கோயில்களில் குடமுழுக்குகள் நடத்தப்பட்டுள்ளன. …

வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிரான வழக்கில், உச்சநீதிமன்றம் அதிரடியாக இடைக்கால உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை வரவேற்பதாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “வக்ஃபு திருத்தச் சட்டப்படி எந்தப் புதிய உறுப்பினர் நியமனமும் மேற்கொள்ளக் கூடாது என்றும், ஏற்கெனவே …

மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி காஞ்சனா இருவரும் மே 6 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

சென்னை கிண்டி சிட்கோ பகுதியில் எஸ்.கே.கண்ணன் என்பவருக்கு ஒதுக்கப்பட்ட குடியிருப்பு மனையிடத்தை, அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை மாநகராட்சி மேயராக பதவி வகித்தபோது போலி ஆவணங்கள் மூலம் தனது மனைவி காஞ்சனாவின் பெயருக்கு மாற்றியதாக …

அர்ச்சகர்களுக்கான ஊக்கத்தொகை ரூ.1,000இல் இருந்து ரூ.1,500ஆக உயர்த்தப்படுவதாக அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் ஆரணி எம்.எல்.ஏ. சேவூர் ராமசந்திரன் பேசினார். அப்போது, “மீட்கப்பட்ட திருக்கோவில் நிலங்கள், இன்றும் கோவில் பெயரில் பட்டா மாற்றம் செய்யப்படாமல் இருப்பதாக தெரிவித்தார். இதற்கு பதிலளித்து பேசிய அறநிலையத்துறை அமைச்சர் …

சுதந்திரமான வாழ்க்கை என்பது இந்திய மக்களுக்கு அவ்வளவு எளிதில் கிடைத்துவிடவில்லை. பலரது ரத்தம் தான் இப்போது நாம் சுவைத்துக் கொண்டிருக்கும் சுதந்திரம். பல போராட்ட வீரர்களில் ஒரு சிலரின் வரலாறுகளை நாம் தெரிந்து கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அப்படிப்பட்ட போராட்டக்காரர்களில் ஒருவர்தான் தீரன் சின்னமலை. ஈரோடு மாவட்டத்தில் உள்ள காங்கேயம் அருகே மேலப்பாளையம் என்று …

வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் 2 ஆயிரம் பேருக்கு உலர், ஈரமாவு அரைக்கும் கிரைண்டர் வாங்க ரூ.1 கோடி மானியம் வழங்கப்படும் என அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வரும் நிலையில், சமூக நலன் – மகளிர் உரிமைத் …

அதிமுக கூட்டணியில் இருந்து புதிய தமிழகம் வெளியேறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 13ஆம் தேதி சென்னை வந்திருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, “பாஜக, அதிமுக தலைவர்கள் ஒன்றாக இணைந்து வரும் சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்துள்ளோம் என்றும் தேசிய அளவில் பிரதமர் மோடி தலைமையிலும், எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழ்நாட்டிலும் …

மகாராஷ்டிர மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 3-வது மொழியாக இந்தி கற்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கையின் புதிய பாடத்திட்ட அமலாக்கத்தின் ஒரு பகுதியாக மும்மொழி கல்வி, அமல்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அம்மாநில பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய கல்விக் கொள்கையின் பரிந்துரைகளை ஏற்று புதிய பாடத்திட்டம் …