கேரள மாநிலம் திருச்சூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சட்டவிரோதமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு லாரி மீது அதிவேகமாக வந்த கார் மோதிய கோர விபத்தில், காரில் பயணித்த கல்லூரி மாணவர்கள் 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், கேரளா எம்.பி.யும் மத்திய அமைச்சருமான சுரேஷ் கோபி கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். இச்சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், […]
அரசியல்
political news | Get all the latest news and updates on Tamil Nadu, National and International Politics news only on 1newsnation.com. Read all news including political news, current affairs and news headlines and more…
சென்னை அடையாறு அடுத்த வண்ணாந்துறையை சேர்ந்தவர் கண்ணன், வயது 45. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். அதிமுகவில் வட்ட செயலாளர் பொறுப்பில் இருந்த இவர், சில மாதங்களுக்கு முன் தவெகவில் இணைந்தார். சனிக்கிழமை இரவு வெளியே சாப்பிட சென்றவர், அங்கிருந்து ராமசாமி அவின்யூவில் உள்ள அவரது அலுவலகத்துக்கு போனார். அப்போது கண்ணன் செல்லும் வழியை நோட்டமிட்ட கும்பல், அலுவலக வாசலில் சுற்றி வளைத்தது. இரண்டு பைக்குகளில் வந்த 6 […]
குளறுபடிகளுக்கு இடம் தராமல், சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை வெளிப்படைத்தன்மையுடன் நடத்த வேண்டும். ஓபிசி மக்களின் உரிமையை காப்பாற்ற நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே தமிழ்நாடு அரசு சிறப்பு தீர்மானம் இயற்ற வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வலியுறுத்தியுள்ளார். மத்திய அரசு தற்போது இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரை (OBC) கணக்கெடுக்க ‘திறந்தவெளி பதிவு முறையை’ (Open-ended format) பயன்படுத்த திட்டமிட்டுள்ளது ஏமாற்றம் அளிப்பதாக அவர் தெரிவித்தார். […]
டெண்டர் முறைகேடு புகார் தொடர்பாக தன் மீதும், ஒப்பந்ததாரர்கள் மற்றும் சில அதிகாரிகள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது உண்மைதான் என்று திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். திமுக எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான கே.என் நேருவின் திருச்சி தில்லை நகர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். 10 பேர் கொண்ட குழுவினர் வீடு முழுவதும் அதிரடி சோதனை நடத்தினர். நகராட்சி நிர்வாக அமைச்சராக நேரு இருந்தபோது, […]
தவெக ஆதரவு கட்சிகளின் இரண்டாவது ஆலோசனை கூட்டம் வரும் செப்டம்பர் 9-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளனர். இந்த சந்திப்பை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன், கூட்டத்தில் பங்கேற்பது குறித்து கட்சியில் பேசி முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்தார். தங்களை […]
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு பகுதியை சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் மறைந்த வெங்கடாசலத்தின் குடும்பத்தில் சொத்துத் தகராறு முற்றிய நிலையில், அவரது தம்பியைச் சொந்த அண்ணனே விரட்டிச் சென்று கத்தியால் குத்தி, சிலிண்டரை தலையில் போட்டுப் படுகொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் அமைச்சர் வெங்கடாஜலத்தின் முதல் மனைவி மகனான ராஜபாண்டி, அதிமுக அம்மா பேரவையின் மாநில இணைச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வருகிறார். இவரது […]
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நடைபெற்ற காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆற்றிய உரையில் பயன்படுத்திய சொல்லாடல் அவையில் காரசார விவாதத்தை ஏற்படுத்தியது. அதிமுக ஆட்சிக் காலத்தில் சட்டம் – ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்பட்டுப் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டதாக குறிப்பிட்ட அவர், பாலியல் குற்றங்கள் குறித்துப் பேசுகையில் ‘கற்பு’ என்ற வார்த்தையை பயன்படுத்தினார். இதற்கு அவையிலேயே உடனடியாக எழுந்து கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தார் […]
தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், ஆளும் அரசின் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு மற்றும் வாக்குறுதி முரண்பாடுகளைக் கடுமையாக சாடினார். மக்கள் சார்பாக ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை முன்வைக்கவே எதிர்க்கட்சியாகத் தங்களை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளதாகவும், பழிபோடும் தந்திரங்களில் ஈடுபடாமல் எழுப்பப்படும் குற்றச்சாட்டுகளுக்கு முதலமைச்சர் நேரடியாகப் பதிலளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். 2024-ம் ஆண்டை விட 2025-ல் வழிப்பறி, திருட்டு, கொலை, கலவரம், […]
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஐ) தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் தற்போது நலமுடன் இருப்பதாக அக்கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. டெல்லியில் நடைபெற்ற கட்சியின் பேரணி, பொதுக்கூட்டம் மற்றும் தேசியக் குழுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காகக் கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி மாலை அவர் டெல்லி சென்றிருந்தார். அங்கு தங்கியிருந்த சூழலில், நேற்று அதிகாலையில் அவருக்குத் திடீரெனத் தலைச்சுற்றல் […]
தமிழ்நாட்டில் உள்ள 52 திருக்கோயில்களில் பக்தர்கள் அமைதியான சூழலில் மனமுருக இறைவனை தரிசனம் செய்வதை உறுதி செய்யவும், நீதிமன்ற உத்தரவுகளைப் பின்பற்றி கோயில்களின் புனிதத்தன்மையைப் பாதுகாக்கவும் செல்போன்கள் எடுத்துச் செல்வதற்கான தடை அமலுக்கு வந்துள்ளது. ஏற்கனவே பழனி, திருச்செந்தூர், மதுரை மீனாட்சி அம்மன், ராமேஸ்வரம் ஆகிய முக்கிய கோயில்களில் இந்த நடைமுறை செயல்பாட்டில் உள்ள நிலையில், தற்போது மேலும் 52 பெரிய கோயில்களுக்கு இது விரிவாக்கப்பட்டுள்ளது. சுவாமி சிலைகளைப் புகைப்படம் […]

