திருவண்ணாமலை மலப்பம்பாடி ஏரியில் இருந்து ரூ.8 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள மண் சட்டவிரோதமாக எடுக்கப்பட்டதாக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, அவரது மகன் எ.வ.குமரன் உள்ளிட்டோர் மீது அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்துள்ளது. அறப்போர் இயக்கம் அளித்துள்ள புகாரில், 2025 டிசம்பர் 14ம் தேதி மலப்பம்பாடியில் திமுக வடமண்டல இளைஞரணி மாநாடு நடந்தது. இந்த மாநாடு நடைபெற்ற 124 ஏக்கர் நிலம், முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் எ.வ.குமரனுக்கு […]
அரசியல்
political news | Get all the latest news and updates on Tamil Nadu, National and International Politics news only on 1newsnation.com. Read all news including political news, current affairs and news headlines and more…
தமிழ்நாட்டின் தொழில் துறை வளர்ச்சிக்கு புதிய வேகம் கொடுக்கும் நோக்கில், மாநில அரசு ஒருங்கிணைக்கும் பிரம்மாண்ட முதலீட்டாளர்கள் மாநாடு நாளை சென்னையில் நடைபெறுகிறது. சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் நடைபெறவுள்ள இந்த முக்கிய நிகழ்விற்கு முதலமைச்சர் விஜய் தலைமை தாங்குகிறார். இதில் நாட்டின் முன்னணித் தொழில் அதிபர்கள், பன்னாட்டு நிறுவனங்களின் முதன்மை செயல் அதிகாரிகள் மற்றும் உலகளாவிய முதலீட்டாளர்கள் பெருந்திரளாகக் கலந்துகொள்ள உள்ளனர். மாநிலத்தில் தொழிற்கட்டமைப்பை […]
முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் சுயசரிதை புத்தகத்தை பிரதமர் மோடி வெளியிட்டார். நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், ராம்நாத் கோவிந்த வாழ்க்கையில் நடந்த மறக்க முடியாத ஒரு சம்பவம் பற்றி கூறினார். ராம்நாத் கோவிந்த் இப்போது ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்தார். அது பற்றி சுயசரிதையிலும் எழுதி இருக்கிறார். கோவிந்த் சிறுவனாக இருந்தபோது, ஒரு கோடை காலத்தில் அவரது வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. அவரது தாயார் தமது உயிரை பற்றிக்கூட […]
முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் சுயசரிதை புத்தகத்தை டெல்லியில் பிரதமர் மோடி வெளியிட்டார். நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றும்போது, ராம்நாத் கோவிந்தின் சுயசரிதை புத்தகம், இந்திய ஜனநாயகத்தின் பாரம்பரிய அடையாளமாக மாறும் எனக்கூறினார். இளைய தலைமுறையினர் இந்த புத்தகத்தில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. இது ரீல்ஸ் காலம். சோஷியல் மீடியா பிரபலங்கள் இளைஞர்களை வேறு திசையில் ஈர்க்ககூடும். குறுக்கு வழியில் செல்ல நினைப்பவர்கள், ரயில் நிலையங்களில் […]
அரசியல் களத்தில் இறங்க தீவிர ஆர்வம் காட்டி வரும் நடிகர் தனுஷின் நகர்வுகளையும், அவரது ரசிகர் மன்ற செயல்பாடுகளையும் உளவுத்துறை மூலம் தீவிரமாக முதல்வர் விஜய் ரகசியமாக உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. நடிகர் தனுஷ் கடந்த ஓராண்டாகவே அரசியல் பிரவேசம் குறித்து யோசித்து வருவதாகவும், அதன் தொடர்ச்சியாக தனது ரசிகர் மன்றத்தை முழுமையான அரசியல் இயக்கமாக மாற்றும் முயற்சிகளில் இறங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. தனது பிறந்த நாள் விழாவில் பிரத்யேக கொடியை […]
தொகுதி மறுவரையறை நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழகச் சட்டமன்றத்தில் நாளை தனித் தீர்மானம் கொண்டு வரப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு மேற்கொள்ள திட்டமிட்டுள்ள தொகுதி மறுவரையறை விவகாரம் குறித்து ஆலோசிப்பதற்காக, தமிழகத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தை முதலமைச்சர் விஜய் கூட்டியிருந்தார். அக்கூட்டத்தில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்ட கருத்துகள் மற்றும் ஆலோசனைகளின் அடிப்படையில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில், தொகுதி மறுவரையறை […]
தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனத்திற்கு பால் விநியோகம் செய்யும் பால் உற்பத்தியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை கருத்தில் கொண்டு, பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்குவது குறித்து தமிழக முதலமைச்சர் விஜய் தீவிரமாக பரிசீலித்து வருவதாக சட்டசபையில் அமைச்சர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் விவாதத்தின் போது பேசிய அவர், ஆவின் நிறுவனத்தின் செயல்பாடுகளை மேம்படுத்தவும், கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் பால் வழங்கும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து […]
முதல்வர் விஜய், அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து வழக்கு திரும்பப் பெறப்பட்டது தொடர்பான பல்வேறு தகவல்களும் கேள்விகளும் இணையத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் பரவலாக பேசப்பட்டு வருகின்றன. முன்னதாக, செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் சங்கீதா தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த விவாகரத்து மனுவை, கடந்த வாரம் வழக்கு விசாரணைக்கு வந்தபோது திரும்பப் பெறுவதாகத் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அம்மனு முடித்து வைக்கப்பட்டதாக நீதிமன்றம் அறிவித்தது. கணவருடன் இணைந்து வாழ முடியாது என்ற […]
தமிழகத்தில் ஆட்சியமைத்துள்ள புதிய அரசின் வருகைக்கு பிறகு, மாநில அரசியல் களம் பல்வேறு மாற்றங்களை கண்டு வருகிறது. அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் சிலர் தவெகவில் இணைந்துள்ளனர். இதனிடையே, திமுக மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளுக்கும் இடையே எதிர்காலத்தில் கூட்டணி உருவாக வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்களில் கருத்துகள் உலா வந்தன. இது தொடர்பான கேள்விக்கு அண்மையில் பதிலளித்த திமுக எம்பி கனிமொழி சோமு, “அரசியலில் […]
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தனித் தீர்மானம் முன்வைக்கப்பட்டது. இந்தத் தீர்மானத்தை அமைச்சர் அருண் முன்மொழிந்தார். நீட் தேர்வை ரத்து செய்யும் தீர்மானத்துக்கு திமுக, அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்து பேசினார்கள். அப்போது, நீட் தேர்வு முறைக்கு எதிரான இந்தத் தீர்மானத்தில் பாஜக எம்.எல்.ஏ. போஜராஜன் தனது எதிர்ப்பை பதிவு செய்தார். மேலும், மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் அரசு […]

