fbpx

சட்டப்பேரவை மற்றும் மேலவையின் முன்னாள் உறுப்பினர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ. 30,000-இல் இருந்து ரூ. 35,000 ஆக உயர்த்தப்படும் என்றும் முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

சட்டப்பேரவையில் முதலமைச்சர் முக.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுடைய ஓய்வூதியத்தையும், மருத்துவப் படியையும் உயர்த்த வேண்டுமென உறுப்பினர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். அந்த வகையில், சட்டமன்ற …

கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை. பிணையில் வெளிவர முடியாது. புதிய மசோதாவை சட்ட பேரவையில் தாக்கல் செய்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

தனிநபர்கள், சுய உதவிக்குழுக்கள் உள்ளிட்டவற்றிற்கு கடன் வழங்கும் நிறுவனங்கள் வலுக்கட்டாயமாக வசூலிப்பதைத் தடுக்க வகை செய்யும் புதிய சட்டத் திருத்த மசோதாவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார் …

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி, அடுத்தாண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான முன்னேற்பாடு பணிகளை செய்து வருகிறார். இதற்காக, தற்போது பூத் கமிட்டி மாநாட்டை நடத்த உள்ளார். வாக்குச்சாவடி முகவர்களுக்கான கருத்தரங்கு கோவையில் இன்றும், நாளையும் நடைபெறவுள்ளது. இதில், கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம் ஆகிய …

எத்தனை தடைகள் வந்தாலும், கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் முக.ஸ்டாலின், “கடந்த காலங்களில் யுபிஎஸ்சி தேர்வுகளில் தமிழர்கள் குறைவாகவே தேர்ச்சி பெற்றிருந்தனர். …

நிலத்தடி நீரில் 115 மடங்கு அதிக பாதரசம் உள்ளது. எனவே என்.எல்.சி-யை உடனடியாக மூட ஆணையிட வேண்டும் என பாமக செயல் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி நிறுவனத்தின் நிலக்கரி சுரங்கங்கள் மற்றும் மின் நிலையங்கள் அமைந்துள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் மற்றும் நீர் நிலைகளில் உள்ள தண்ணீரில் இயல்பை விட …

தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ள நிலையில், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் இருக்கும் மின்சாரத்துறை, நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்குத்துறை அமைச்சர் முத்துச்சாமி, வெள்ளக்கோவில் மு.பெ சாமிநாதன் ஆகிய இருவரில் ஒருவருக்கு கொடுக்கப்படலாம் என கூறப்படுகிறது. அதேபோல், அமைச்சர் பிடிஆர் பழனிவேல் …

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி வட்டம், கஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தில் பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவியாக அறிவித்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; சேலம் மாவட்டம், காடையாம்பட்டி வட்டம், கஞ்சநாயக்கன்பட்டி கிராமம், பூசாரிப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகில் நேற்று (25.4.2025) இரவு சுமார் 8.50 …

தமிழக வெற்றிக் கழகத்தின் பூத் கமிட்டி மாநாடு இன்று மற்றும் நாளை நடைபெறவுள்ளது.

தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், 2ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்து பயணித்து வருகிறார். விக்கிரவாண்டியில் முதல் மாநாட்டை நடத்தி முடித்த நிலையில், சமீபத்தில் பொதுக்குழு கூட்டத்தை நடத்தினார். இதனைத் தொடர்ந்து, பூத் கமிட்டி மாநாடு நடைபெறவுள்ளது. …

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அந்நிறுவனம் சார்பில் மேல்முறையீடு. சோதனைக்கு எதிரான மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மார்ச் 6-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை 60 மணி நேரம் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். …

அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு பயிலும் 13 லட்சம் மாணவர்களின் தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதத் திறன்களை மேம்படுத்தும் வகையில் திறன் என்னும் முனைப்பு இயக்கம் ரூ.19 கோடியில் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

சட்ட மன்றத்தில் நேற்று நடைபெற்ற மானிய கோரிக்கையின் போது பேசிய அமைச்சர் அன்பில் …