சேலம், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட 13 டெல்டா மாவட்டங்களில் உள்ள சுமார் 16 லட்சம் ஏக்கர் விளைநிலங்களின் பாசன ஆதாரமாகவும், பல்வேறு கூட்டுக் குடிநீர்த் திட்டங்களின் ஜீவநாடியாகவும் மேட்டூர் அணை விளங்கி வருகிறது. வழக்கமாக ஆண்டுதோறும் ஜூன் 12-ஆம் தேதி குறுவை, சம்பா, தாளடி ஆகிய முப்போக சாகுபடிக்காக அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். எனினும், இந்த ஆண்டு தொடக்கத்தில் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் போதிய மழையின்றி […]
அரசியல்
political news | Get all the latest news and updates on Tamil Nadu, National and International Politics news only on 1newsnation.com. Read all news including political news, current affairs and news headlines and more…
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் வெளி ஆதரவுடன் முதல்வர் விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இருப்பினும், ஆட்சி அமைந்த குறுகிய காலத்திலேயே நிர்வாக முடிவுகள் மற்றும் கொள்கை ரீதியாக கூட்டணிக் கட்சிகள் அடுத்தடுத்து வழங்கி வரும் கடும் அழுத்தங்கள், த.வெ.க தலைமைக்குப் […]
தமிழக சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பில் நடைபெற்ற விவாதத்தின் போது, டாஸ்மாக் பணியாளர்களின் 23 ஆண்டுகால சேவையைக் கருத்தில் கொண்டு அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலான அதிரடி ஊதிய உயர்வு மற்றும் பணிச் சலுகைகள் உள்ளிட்ட 6 முக்கிய அறிவிப்புகளை அமைச்சர் விக்னேஷ் வெளியிட்டார். டாஸ்மாக் சில்லறை விற்பனை நிலையங்களில் அரங்கேறும் கூடுதல் கட்டண வசூல் (MRP விதிமீறல்) உள்ளிட்ட முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அதே வேளையில், […]
தனது கல்வி நிறுவனத்திற்கு அனுமதி பெறுவதற்காக முன்னாள் அமைச்சருக்கு லஞ்சம் கொடுத்ததாக சட்டசபையில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்த அமைச்சர் மரிய வில்சன் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்வதுடன், அவரது எம்.எல்.ஏ. வெற்றிச் சான்றிதழைத் திரும்பப் பெற வேண்டும் என தேர்தல் ஆணையம் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சி.ஜெனிபர் சார்பில் அவரது வழக்கறிஞர் பி.விஜயேந்திரன் இந்த […]
தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் நல்லாரி கிரண்குமார் ரெட்டி நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி, அரசியல் மற்றும் சமூக ஊடக வட்டாரங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளன. தற்போது கேரள மாநில ஆளுநராக உள்ள ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர், தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராகக் கூடுதல் பொறுப்புகளைக் கவனித்து வரும் சூழலில், விரைவில் முழுநேர ஆளுநர் ஒருவர் நியமிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அந்த வகையில், ஆந்திர […]
முதல்வர் விஜய்க்கு மாநில மக்கள் ஒரு மிகப்பெரிய அரசியல் வாய்ப்பை வழங்கியுள்ளதாகவும், அந்த வாய்ப்பை அவரும் அவரது கட்சியும் மக்கள் நலனுக்காக முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் பாஜகவின் மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பிரதமர் நரேந்திர மோடியின் அனுபவத்திற்கும் தலைமைப் பண்பிற்கும் இணையாக தற்போதைய சூழலில் வேறு யாரையும் சிந்தித்துக்கூட பார்க்க இயலாது என்று திட்டவட்டமாக குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய […]
இளம் தலைமுறையினர் தங்களது அன்றாட வாழ்க்கையில் விளையாட்டையும் உடற்பயிற்சியையும் ஒரு பிரிக்க முடியாத அங்கமாக மாற்றிக்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தியுள்ளார். இந்திய ஹாக்கி உலகின் ஈடு இணையற்ற சாதனையாளரான மேஜர் தியான் சந்தின் பிறந்தநாளையொட்டி ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்படும் தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு, விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு அவர் தனது வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், விளையாட்டு என்பது போட்டிகளில் […]
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கித் தவிக்கும் தமிழர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை சுமார் 400 ஆக அதிகரித்துள்ளது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். ஆரம்பக்கட்டத்தில் 103 தமிழர்கள் மட்டுமே சிக்கியுள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது கூடுதல் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இது தொடர்பாக அமைச்சர் ராஜ்மோகன் அளித்த விளக்கத்தில், சென்னை மற்றும் கும்பகோணத்தைச் சேர்ந்த தனியார் பயண முகமைகள் மூலம் 103 பேர் […]
தமிழ்நாடு சட்டப்பேரவையில் வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சி துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில், ஓசூர் புதிய சர்வதேச விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓசூர் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ண ரெட்டி ஆவேசமாக பேசினார். அவர் பேசுகையில், “ஓசூரில் புதிய விமான நிலையம் தேவையில்லை என்பது என் தனிப்பட்ட குரல் அல்ல; நிலத்தை இழக்க அஞ்சும் ஓசூர் விவசாயிகளின் ஒட்டுமொத்த குரல். பரந்தூர் […]
சென்னை மற்றும் ராமநாதபுரத்தில் ரூ.258 கோடி மதிப்பிலான போதைப்பொருளை ஜூன் 8ம் தேதி அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது. இந்த கடத்தல் வழக்கில் மூளையாக செயல்பட்ட ஜான் பிரிட்டோ என்பவர், அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் நெருங்கிய உறவினர் என்று திமுக ஐடி விங் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தது. இந்த அவதூறு பதிவை நீக்குவதோடு, தன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அமைச்சர் ஆதவ் நோட்டீஸ் அனுப்பினார். […]

