”சமூக நீதி என்ற வார்த்தை செத்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவம் குறித்து முழுமையாக அறிய, சீமான் இன்று நேரில் சென்றார். அங்கு மக்களை சந்தித்து நடந்த விவரங்களை கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ”வேங்கைவயல் […]

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் நீதி மய்யம் ஆதரவளிக்கும் என்று அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. இந்த நிலையில் இந்த இடைத்தேர்தலில் ஆதரவு தரக்கோரி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் இளங்கோவன் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை சந்தித்து ஆதரவு கோரினார்.. கமல்ஹாசன் கட்சியினருடன் ஆலோசித்து தனது முடிவை அறிவிப்பதாக கூறியிருந்தார்.. […]

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இங்கிலாந்து நாட்டில் உள்ள பார்க்லே வங்கியில் 1,04,93,000 அமெரிக்க டாலரை முறையீடாக முதலீடு செய்திருக்கிறார் என்று புகார் எழுந்தது இது குறித்து அவர் மீது அமலாகத் துறை வழக்குப் பதிவு செய்தது. இதுகுறித்து டிடிவி தினகரன் மீது மேலும் 7 வழக்குகள் தொடரப்பட்டனர். இதனை அடுத்து அன்னிய செலாவணி மோசடி வழக்கு குறித்த ஆவணங்களை தனக்கு வழங்க வேண்டும் என்று […]

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை 1996ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து நடைபெற்ற அதிரடி சோதனையில் 11,344 புடவைகள், காலணிகள் 750, கைக்கடி காரங்கள் 91, அலங்கரிக்கப்பட்ட நாற்காலிகள் 146, ஏசி 44, 700 கிலோ வெள்ளி பொருட்கள், 468 வகையான தங்கம், வைரம், ரூபி, […]

அரசியல் தலைவரும் திராவிட இயக்க பேச்சாளருமான நாஞ்சில் சம்பத் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மதிமுகவில் தனது அரசியல் பயணத்தை தொடங்கிய நாஞ்சில் சம்பத், 2012 ஆம் வருடம் அதிமுகவில் இணைந்தார்.. அப்போது அவருக்கு அதிமுகவில் கொள்கை பரப்பு செயலாளர் பதவி வழங்கப்படது.. மேலும் அதிமுகவின் நட்சத்திர பேச்சாளராகவும் அவர் இருந்து வந்தார்.. ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர், 2017-ல் சசிகலா ஆதரவு நிலைப்பாட்டில் இருந்த அவர் , 2019-ல் அவர் திமுகவில் […]

அதிமுக ஒன்றிய கவுன்சிலர் மற்றும் அவரது மகன் ஆகியோர் கடத்தப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த பல்லவாடா கிராமத்தை சேர்ந்தவர் அதிமுக பிரமுகர் ரமேஷ். இவருக்கு ரோஜா என்ற மனைவியும், ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். இவரது மனைவி ரோஜா, கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்தின் 1வது வார்டு கவுன்சிலராக பதவி வகித்து வருகிறார். இவர்களது மகன் ஜேக்கப் […]

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் பாஜக தங்கள் பலத்தை நிரூபிக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை என அண்ணாமலை தெரிவித்துள்ளார். நாமக்கல்லில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய தமிழக அமைச்சக தலைவர் அண்ணாமலை; ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் காலம் உள்ளது. சுதந்திரத்திற்கு பிறகான இடைத்தேர்தல்களில் 80% ஆளும்கட்சி தான் வென்றுள்ளது. ஆனால் பொதுத்தேர்தலில் தோற்றிருப்பார்கள்‌. இந்த ஒரு இடைத்தேர்தலால் எதுவும் மாறப்போவது இல்லை. […]

கட்சி நிர்வாகிகள் விரும்பினால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தனித்துப் போட்டியிட தயார் என சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கு பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி அனைத்து கட்சிகளும் தேர்தலை சந்திக்க சுறுசுறுப்பாகி வருகிறது. திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியே இந்த தேர்தலில் போட்டியிடும் என திமுக அறிவித்தது. இதனால், காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் […]

நாற்காலி எடுத்து வர தாமதம் ஆனதால் கோபமடைந்த அமைச்சர் நாசர், திடீரென கல்லை எடுத்து எறிந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. திருவள்ளூர் அருகே முதலமைச்சர் முக.ஸ்டாலின் கலந்துகொள்ளும் மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் நாளை நடைபெற இருக்கிறது. இந்தப் பொதுக்கூட்டத்தில் பல்வேறு அமைச்சர்களும் பங்கேற்கின்றனர். இதற்காக பொதுக்கூட்டம் நடைபெறவுள்ள இடத்தில் இன்று காலை பால்வளத்துறை அமைச்சர் ஆவடி எஸ்.எம். நாசர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, […]

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு அதிமுக இணைப்பு நடக்கும் என்று சசிகலா தெரிவித்துள்ளார்.. மன்னார்குடியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய சசிகலா “ ஒரு கட்சியில் 2, 3 பேர் சேர்ந்து முடிவெடுக்க முடியாது.. திமுகவில் அப்படி முடிவெடுக்கலாம்.. ஆனால் அதிமுக மிகப்பெரிய கட்சி.. பாஜக அலுவலகம் செல்லும் நிலையில் அதிமுக இல்லை.. இதை புரிந்துகொள்ள வேண்டியவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.. எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை நேரில் சந்திக்க […]