தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கட்டியிருந்த ரபேல் வாட்ச் விலை தான் இப்போது ட்ரெண்டிங்கில் உள்ளது அதெற்கேற்றார் போல் திமுகவினரும் இதை விடுவதாக தெரியவில்லை, அதிலும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அந்த ரபேல் வாட்ச்சின் பில் இருக்கா இல்லையா என்று கேட்டு நாளுக்கு நாள் கலாய்த்து வருகிறார். தூத்துக்குடியில், பாஜக தெற்கு மாவட்ட சிறுபான்மை அணி சார்பில் கிறிஸ்துமஸ் விழா, மாபெரும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தனியார் […]

திமுகவின் ஊழலை புகார் செய்ய புதிய இணையதளம் ஒன்றை தயாரிக்க உள்ளோம்-பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேச்சு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கட்டியிருந்த ரபேல் வாட்ச் விலை தான் இப்போது ட்ரெண்டிங்கில் உள்ளது அதெற்கேற்றார் போல் திமுகவினரும் இதை விடுவதாக தெரியவில்லை, அதிலும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அந்த ரபேல் வாட்ச்சின் விலை ரசிதை கேட்டு நாளுக்கு நாள் ட்விட்டரில் கலாய்த்து வருகிறார். இந்நிலையில் இன்று கோவை […]

தமிழகத்தின் அறிவிக்கப்படாத முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்று இருக்கிறார் என முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி பேச்சு.. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சி அலுவலகம் எதிரே திமுக அரசின் சட்ட ஒழுங்கு சீர்கேட்டினையும், சொத்துவரி, வீட்டு வரி, மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வை கண்டித்து அதிமுகவினரின் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அதிமுக அமைச்சர் கே.சி.வீரமணி “இந்தியாவிலேயே 520 வாக்குறுதிகளை கொடுத்தது திமுகதான் ஆனால் […]

’தைரியம் இருந்தால் தனிக் கட்சி தொடங்கி பாருங்கள்’ என எடப்பாடி பழனிசாமிக்கு ஓ.பன்னீர்செல்வம் சவால் விடுத்துள்ளார். சென்னையில் தனது ஆதரவு மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஓ.பன்னீர்செல்வம் இன்று ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய அவர், ”ஜெயலலிதாவுக்கு நிரந்தர பொதுச்செயலாளர் என்ற அங்கீகாரம் வழங்கப்பட்டதை ரத்து செய்பவர்களை இந்த நாடு மன்னிக்குமா? எப்போதுமே அதிமுகவின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா தான் என்று கூறினார். எடப்பாடி பழனிசாமியிடம் மாவட்ட செயலாளர்கள் இருக்கிறார்கள் என்றால் […]

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை தேர்தல் ஆணையம் ஏற்காமல் இருந்து வரும் சூழலில், அதிமுகவின் வரவு – செலவு குறித்து எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த 29.09.2022 தேதியிட்ட, 03.10.2022 அன்று தாக்கல் செய்யப்பட்ட, “Audited Annual Accounts FY 2021-22”, தேர்தல் ஆணைய பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இதனால், எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்துவிட்டதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக கையெழுத்திட்டு, இதை […]

ராகுல்காந்தி மேற்கொண்டு வரும் ஒற்றுமை யாத்திரையில் கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைப்பயணமாக பாரத ஒற்றுமை யாத்திரையை மேற்கொண்டு வருகிறார். தற்போது இந்த நடைபயணம் ராஜஸ்தானில் நடைபெற்று வருகிறது. அண்டை நாடுகளில் கொரோனாவின் தாக்கம் உருவெடுத்து வருவதன் காரணமாக மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்ற கேட்டுக்கொண்டது. தற்போது […]

பாஜக தலைவர் அண்ணாமலையின் கைக்கடிகார சர்ச்சை எழுந்துள்ள நிலையில் அதன் பில்லை கேட்டு செந்தில் பாலாஜி ஒரு பதிவை போட்டுள்ளார். கடந்த மாதம் விவசாய பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட 50000 இலவச மின் இணைப்புகளின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் நேற்று சென்னை அண்ணாசாலையில் உள்ள தலைமை மின் வாரிய அலுவலகத்தில் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, […]

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் ஆட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்புடன் 2500 ரூபாய் பணமும் வழங்கப்பட்டது. ஆனால் திமுக ஆட்சிப் பொறுப்பு ஏற்ற பிறகு பொங்கல் பரிசு தொகுப்பு என்று சொல்லி 21பொருட்களை மட்டுமே வழங்கிவிட்டு அத்துடன் வழங்கப்பட்ட 1000 ரூபாய் பணத்தை நிறுத்தி விட்டார்கள். இந்த சூழ்நிலையில், எதிர்வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசின் பரிசுத்தொகுப்பில் பணம் இடம்பெறுமா? என்ற எதிர்பார்ப்பு […]

மாவட்ட செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகள் கூட்டத்தை வருகிற 21-ந்தேதி நடத்த முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் முடிவு செய்துள்ளார். இதற்கான அறிவிப்பையும் அவர் வெளியிட்டார். இந்நிலையில் டிசம்பர் 27ஆம் தேதி எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சார்பில் ஆலோசானை கூட்டம் நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதிமுக தலைமை கழக செயலாளர்கள், மாவட்ட கழக செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் என அனைத்து நிர்வாகிகளும், டிசம்பர்-27ஆம் தேதி எம்ஜிஆர் […]

பொங்கலுக்கு முன் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”விவசாய பயன்பாட்டிற்காக கடந்த மாதம் 50,000 இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டது. அதில், தற்போது 34 ஆயிரத்து 134 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 15 ஆயிரத்து 866 விவசாயிகளுக்கு பொங்கல் பண்டிகைக்கு முன் மின் இணைப்பு வழங்கப்பட்டுவிடும். ஒன்றரை ஆண்டுகளில் […]