தனது நடைப்பயணத்திற்கு முன்பு ரஃபேல் வாட்ச் வாங்கிய ரசீது உள்ளிட்ட சொத்து விவரங்கள் முழுவதையும் வெளியிட உள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். ரஃபேல் வாட்ச் கட்டியிருக்கும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அவரது வாட்ச் வாங்கியதற்கான ரசீதை வெளியிட முடியுமா? என அமைச்சர் செந்தில்பாலாஜி ட்விட்டரில் கேள்வி எழுப்பியிருந்தார். பிரான்ஸ் நிறுவனத்திற்காக உலகில் 500 வாட்ச்சுகள் மட்டுமே தயாரிக்கப்பட்டு, அவை ஒவ்வொன்றும் தலா ரூ.5 லட்சத்திற்கும் மேல் விற்கப்பட்ட நிலையில், ரஃபேல் […]

ஆந்திராவில் ஒருவர் உயிருடன் இருக்கும் போதே தனது மரண நாளை கொண்டாடும் சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கு தேசம் கட்சியின் முன்னாள் அமைச்சர் பாலேட்டி ராமராவ் (63) தன்னுடைய 75 வயதில் அதாவது 2034ஆம் ஆண்டில் உயிரிழந்துவிடுவேன் என எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார். அதோடு நான் இறப்பதற்கு இன்னும் 12 ஆண்டுகளே உள்ளதால், இந்தாண்டு முதல் தனது மரண நாளை கொண்டாட உள்ளதாக அழைப்பிதழ் வழங்கி வருகிறார். இந்த சம்பவம் பலரையும் […]

தமிழ்நாடு அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்புமாறு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; அரசு துறைகள், கல்வி நிலையங்களில் காலியாக உள்ள 3.5 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்’, புதிதாக 2 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும், இரண்டு வாக்குறுதிகள் திமுகவின் தேர்தல் என் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. திமுகவின் கணக்குப்படி பார்த்தால், 2021-ம் ஆண்டே அரசுத் துறைகள் மற்றும் கல்வி நிலையங்களில் 3.5 லட்சம் […]

பிரதமர் மோடி குறித்து தரக்குறைவாக பேசிய பாகிஸ்தான் அமைச்சர் பிலாவல் பூட்டோவின் தலையை கொண்டு வந்தால் ரூ.2 கோடி பரிசு என்று பா.ஜக நிர்வாகி அறிவித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்திய பிரதமர் மோடி குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோவுக்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், இதற்கு எதிராக நாடு முழுவதும் பாஜகவினர் போராட்டங்களில் குதித்துள்ளனர். இந்நிலையில், உத்தரப்பிரதேச […]

மிசோரமில் அரசியல் ரீதியாக நிலையற்ற பழங்குடியினர் கவுன்சிலில் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டதற்கு சக்மா சமூகத்தின் ஒரு அமைப்பு அதிருப்தி தெரிவித்துள்ளது. டிசம்பர் 16 அன்று, மிசோரமின் மாவட்ட கவுன்சில் மற்றும் சிறுபான்மையினர் விவகாரத் துறையின் அறிவிப்பில், சக்மா தன்னாட்சி மாவட்ட கவுன்சில் வழங்கப்பட்ட அல்லது செயல்படுத்தக்கூடிய அனைத்து செயல்பாடுகள் அல்லது அதிகாரங்களை அடுத்த உத்தரவு வரும் வரை ஆறு மாதங்களுக்கு மாநில ஆளுநர் ஏற்றுக்கொண்டார். அரசியல் சூழ்ச்சியால் தொடர்ந்து ஏற்படும் […]

நேற்று சென்னை சேத்துப்பட்டில் உள்ள கிறிஸ்தவ கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர்,“நான் படித்த பள்ளிக்கு போகப்போகிறேன் என்று நேற்றிரவு முதலே மகிழ்ச்சியில் இருந்தேன் தூக்கம் வரவில்லை, வழக்கமாக 2-3 மணிக்குதான் தூங்குவேன், அந்த தூக்கமும் நேற்று வரவில்லை. மாணவப் பருவம் என்பது திரும்ப கிடைக்காத காலம். இங்க இருக்கும் சில முகங்களை பார்க்கும்போது குறிப்பாக என்னுடைய தமிழ் […]

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோவையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கோவை கிணத்துக்கடவு பகுதிகளில் கனிமவள கொள்ளை அதிகரித்துள்ளது.. இந்த விவகாரத்தில் பாஜக தொடர் போராட்டங்களைக் கையில் எடுக்கும். அமுல் நிறுவனத்தில் வரும் லாபத்தில் 82 சதவிகிதம் விவசாயிகளுக்குச் செல்கிறது. ஆவின் நிறுவனம் அப்படி நடந்துகொள்ளவில்லை, ஆவின் நிறுவனம் தொடர்ந்து நஷ்டத்தில் சென்று கொண்டிருக்கிறது. திமுக அமைச்சர் ஒருவருக்குச் சாதமாக இருக்கவே இப்படிச் செய்கிறார்கள். கோவை […]

நெய்வேலி என்எல்சிக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க கோரி அதிமுக சார்பில் நெய்வேலி சுரங்கம் முன்பு என்எல்சி நிறுவனத்தை கண்டித்தும், மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் தமிழக அரசுசைகண்டித்தும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.சண்முகம், “மத்திய பாஜக அரசு சொல்லும் பணிகளை வாயை மூடி தன் தலையில் தூக்கிவைத்து திமுக ஸ்டாலின் அரசு செய்து வருகிறது. குறிப்பாக என்எல்சி விவகாரத்தில் ஆண்டுக்கு 2 […]

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு வருடம் தோறும் வேஷ்டி, சேலை, பணம் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்படும். அத்துடன் பொங்கல் வைப்பதற்கு தேவையான அரிசி , முந்திரி, திராட்சை போன்ற பொருட்களுடன் கரும்பு உள்ளிட்டவையும் வழங்கப்படும். இந்த நிலையில் தான் சென்று வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திமுக தலைமையிலான அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் ரொக்கத்தை தவிர்த்து 21 வகையான பொருட்கள் அடங்கிய […]

புதுச்சேரியில் கடந்த சில ஆண்டுகளாக மாநில அந்தஸ்து கோரிக்கை வலுத்து வருகிறது. புதுச்சேரி யூனியன் பிரதேசமாக இருப்பதால் ஆளுநரின் ஒப்புதல் பெற்றே முக்கிய முடிவுகளை எடுக்கும் சூழல் நிலவி வருகிறது. இந்த சூழலில்தான் புதுச்சேரிக்கு அந்தஸ்து கோரி போராடும் குழுவினர் முதலமைச்சர் ரங்சாமியை சந்தித்து, இந்த கோரிக்கை தொடர்பாக மீண்டும் வலியுறுத்தினர். அப்போது, அந்த குழுவினர் முன்பாக பேசிய முதலமைச்சர் ரங்கசாமி “கடந்த ஆட்சியில் உச்சநீதிமன்ற உத்தரவு தெளிவாக சொன்னபிறகு […]