வரும் 14ஆம் தேதி தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும், அப்போது உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.  திமுக இளைஞரணிச் செயலாளரும், திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என திமுகவினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், வரும் 14ஆம் தேதி அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலமைச்சராக முக.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு ஏற்கனவே ஒரு […]

அம்பேத்கரின் நினைவு நாளை முன்னிட்டு நேற்றைய முன்தினம் கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சியினர் ஒட்டிய சுவரொட்டிகலில் அம்பேத்கருக்கு காவி சட்டை அணிவித்து, திருநீறு பட்டையை போட்டுவிட்டு இந்துவாக அடையாளப்படுத்தி இருந்தது. இந்த போஸ்டருக்கு தமிழகம் முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்தன. கும்பகோணத்தில் இந்த போஸ்டர்கள் நீக்கப்பட்டன. மேலும் அம்பேத்கரை இழிவுபடுத்தும் வகையிலான இந்த போஸ்டர்களை வெளியிட்ட 2 இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் கைதும் செய்யப்பட்டனர். இந்நிலையில், ராஜா அண்ணாமலைபுரத்தில் […]

குஜராத்தில் 182 தொகுதிகள் உள்ளன, இதில் 92 இடங்களை கைப்பற்றும் கட்சியே பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும். அதன்படி 89 தொகுதிகளில் டிசம்பர் 1ஆம் தேதி முதற்கட்ட தேர்தல் நடைபெற்றது. இரண்டாம் கட்ட தேர்தல் அகமதாபாத் உள்பட 14 மாவட்டங்களில் உள்ள 93 தொகுதிகளில் நேற்று நடைபெற்றுது. நேற்றை தினம் பிரதமர் மோடி அமித்ஷா உள்ளிட்டோர் தங்களுடைய வாக்குகளை செலுத்தினர். இந்நிலையில் நேற்றைய தினம் முன்னதாக, காந்திநகரில் உள்ள இல்லத்துக்கு […]

குஜராத் மற்றும் இமாச்சல் பிரதேசத்தில் மீண்டும் பாஜகவை ஆட்சி அமைக்கும். குஜராத் மற்றும் இமாச்சல் பிரதேஷ் மாநிலத்திற்கான சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று முடிந்தது. இந்த தேர்தலில் பாஜக களத்தில் இறங்கி தீவிரமாக பிரச்சாரம் செய்து வாக்குகளை சேகரித்தது. தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்த நிலையில், வரும் 8-ம் ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில், ஹிமாச்சல் பிரதேசம், குஜராத்தில் பாஜக மீண்டும் ஆட்சியை […]

குஜராத்தில் 27 ஆண்டுகள் பாஜக ஆட்சி மட்டுமே இருந்து வருகிறது. மேலும் இது பாஜகவின் கோட்டையாகவே திகழ்ந்து வருகிறது. குஜராத்தில் 182 தொகுதிகள் உள்ளன, இதில் 92 இடங்களை கைப்பற்றும் கட்சியே பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும்.அதன்படி 89 தொகுதிகளில் டிசம்பர் 1ஆம் தேதி முதற்கட்ட தேர்தல் நடைபெற்றது. இரண்டாம் கட்ட தேர்தல் அகமதாபாத் உள்பட 14 மாவட்டங்களில் உள்ள 93 தொகுதிகளில் இன்று நடைபெற்று மாலை 5.30 மணியுடன் […]

இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்., சசிகலா, தினகரன் ஆகிய யாருமே அதிமுகவை வழிநடத்த தகுதியானவர்கள் இல்லை என ஜெ.தீபா தெரிவித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி அதிமுகவில் இருந்த மூத்த நிர்வாகிகள் தனித்தனியாக சென்று ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். காலை 10 மணிக்கு எடப்பாடி பழனிசாமி அணியும், 10.30 மணிக்கு ஓ.பன்னீர்செல்வம், 11 மணிக்கு டிடிவி தினகரன், 11.30 மணிக்கு சசிகலாவும் தனித்தனியாக மரியாதை செலுத்தினர். இதற்கிடையே, […]

தமிழகத்தின் மறைந்த முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016 இல் டிசம்பர் 5ஆம் தேதி உடல் நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 5ஆம் தேதி ஜெயலலிதாவின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில், இன்றும் ஆறாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த நினைவு நாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சியினர் அதிமுக தொண்டர்கள் மற்றும் ஜெயலலிதாவின் விசுவாசிகள் அனைவரும் […]

ஆவினில் பால் தட்டுப்பாடு என்பது தவறான தகவல் என பால்வளத்துறை அமைச்சர் நாசர் விளக்கம் அளித்துள்ளார். அண்மையில் ஆவின் பால் குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ட்வீட் ஒன்று செய்திருந்தார். அதில், ஆவின் பச்சை நிற பால் தட்டுப்பாடு எனவும் தட்டுப்பாடு ஏற்படும் பட்சத்தில் ஆரஞ்சு நிற பாலின் விலையை குறைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தார். இதுகுறித்து பதிலளித்த அமைச்சர் நாசர், ”ஆவின் பச்சை நிற பால் தட்டுப்பாடு […]

தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கும் திட்டத்தினையும், மின்கட்டண உயர்வினையும் வாபஸ் பெறாவிட்டால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டத்தை நடத்துவோம் என்று அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். பெரம்பலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்; தமிழகத்தில் மின்கட்டணம் உயர்த்தப்பட்டதிலிருந்து மின் கட்டண உயர்வுக்குத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. ஆதார் இணைப்பு மூலம் எந்த விதமானப் பாதிப்பும் இல்லை என்று அரசு தெரிவித்தாலும், […]

விரைவில் ஆர்.எஸ்.பாரதி கட்சியிலிருந்து நீக்கப்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. கட்சிக்கு விசுவாசமாக இருந்தால் எளிதில் பதவி கிடைக்காது என திமுக எம்பி ஆர்.எஸ். பாரதி தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார். உழைத்தவர்களுக்கு பதவி கிடைக்கவில்லை. உழைக்காதவர்கள் பதவியில் உட்கார்ந்துள்ளனர். கட்சிக்காக அரும்பாடு பட்ட தனக்கு 60 வயது கடந்தவுடன்தான் எம்.பி பதவியே வழங்கப்பட்டது என்று அவர் குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில், இதற்கு பதிலடி கொடுத்துள்ள முதலமைச்சர் முக.ஸ்டாலின், பதவி வரும் போகும், கழகமே நம் […]