வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவும் வகையில் சமூக நலத்துறை அமைச்சர் கோட்டா ஸ்ரீனிவாஸ் பூஜாரி புதிய திட்டம் குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். கர்நாடக மாநிலத்தில் இருக்கும் ஒவ்வொரு தொகுதியிலும் 100 இருசக்கர வாகனங்கள் வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 28 ஆயிரம் வேலையில்லா இளைஞர்களுக்கு இருசக்கர வாகனத்தை வழங்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அதற்கு வேலையில்லா தாழ்த்தப்பட்ட சாதி மற்றும் பழங்குடியின இளைஞர்கள் சேவா சிந்து […]

தமிழக பா.ஜ.க.வில் களை எடுக்கும் நடவடிக்கைகள் தொடங்கி உள்ளதாக கூறி உள்ள அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை இது ஆரம்பம்தான் என எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ’’ பா.ஜ.க.வின் லட்சுமண ரேகையை மீறினால் நடவடிக்கை உறுதி.. யாரையும் விடப்போவதில்லை. கட்சியில் களை எடுக்கும் நடவடிக்கை தொடங்கி உள்ளது. தற்போது ஆரம்பக்கட்டம்தான். வரும் காலத்தில் இன்னும் பயங்கரமாக இருக்கும். இன்னும் அதிரடி நடவடிக்கைகள் […]

கேபிள் தொழிலை தனது ஏகபோக உரிமையாக தி.மு.க-வின் குடும்ப நிறுவனம் சுமங்கலி கேபிள் விஷன் மாற்றியதாக அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டது அறிக்கை; தொடர்ந்து ஏழை எளிய பொதுமக்களைப் பாதிக்கும் வகையிலேயே இந்த திறனற்ற தி.மு.க அரசு செயல்பட்டு வருகிறது. சுமார் இருபது லட்சத்துக்கும் அதிகமான, எளிய பொதுமக்களை வாடிக்கையாளர்களாக கொண்ட அரசு கேபிள் நிறுவனத்தின் ஒளிபரப்பில், கடந்த இரண்டு நாள்களாக […]

பா.ஜ.க. தமிழகத்தின் மாநிலத் தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றதில் இருந்தே என்னை கட்சியிலிருந்து வெளியேற்ற கங்கணம் கட்டிக்கொண்டார் என காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார். காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்க தமிழ் வளர்ச்சி பிரிவு தலைவராக உள்ள காயத்ரி ரகுராம் அழைக்கப்படவில்லை. இதனால் உள்கட்சி மோதல் வெடித்தது. நேற்று காயத்ரி ரகுராம் டுவிட்டர் பதிவுகளை அடுக்கடுக்காக அடுக்கினார். இதில் சிலவற்றை உளறிக்கொட்டினார். இந்நிலையில் பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கட்சியில் இருந்து […]

பா.ஜ.க.விலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில் மன அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கடந்த 8 ஆண்டுகளாக கடன் வாங்கில பலருக்கு உதவி செய்திருக்கின்றேன் பா.ஜ.க.வுக்கு களங்கம் ஏற்படுத்தியதாக கூறியது வருத்தம் அளிக்கின்றத. புகார் தொடர்பாக விளக்கம் அளிக்க நேரம் அளிக்காமல் நான் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளேன். என்னிடம் விசாரணை நடத்தாமல் முடிவு எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை கட்சி பொறுப்புகளில் […]

மராட்டிய மாநிலத்தில் தேர்தலை முன்னிட்டு அரசு அதிகாரிகளுக்கு சம்பளத்துடன் கூடிய ஒரு நாள் விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. ‌ பாஜக கட்சி 27 வருடங்களாக ஆட்சி புரியும் குஜராத் மாநிலத்தில் டிசம்பர் 2 மற்றும் 5ஆம் தேதிகளில் தேர்தல் நடைபெற இருக்கிறது. மொத்தம் 182 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறும் நிலையில், முதற்கட்டமாக 89 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்டமாக 93 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், குஜராத் மாநிலத்தின் எல்லையை ஒட்டியுள்ள […]

டெய்சி சரணிடம் வம்பு இழுத்து சண்டை போடும் திருச்சி சூர்யாவின் ஆடியோ தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக எம்பி திருச்சி சிவாவின் மகன்தான் சூர்யா சிவா. இவர், திமுகவில் பதவி கிடைக்காததால், அங்கிருந்து வெளியேறி பாஜகவில் இணைந்து கொண்டார். மேலும் அண்ணாமலைக்கு மிகவும் நெருங்கிய நபராக தன்னை மாற்றிக் கொண்டார். திமுகவில் தான் எந்த ஒரு பதவியும் கிடைக்கவில்லை, பாஜகவில் ஏதேனும் பதவி வழங்கப்படும் என்று எதிர்பார்த்தார். அந்த […]

பாஜகவில் இருந்து காயத்ரி ரகுராமை 6 மாத காலத்திற்கு சஸ்பெண்ட் செய்து மாநில தலைவர் அண்ணாமலை உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாஜக சிறுபான்மையினர் அணி நிர்வாகி டெய்சி சரணிடன், பாஜக ஓபிசி அணி நிர்வாகி திருச்சி சூர்யா தொலைபேசியில் ஆபாசமாக பேசிய விவகாரம் குறித்து விசாரிக்க பாஜக ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கு அண்ணாமலை உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழக பாஜகவின் சிறுபான்மையினர் அணி தலைவர் டெய்சி சரணுக்கும், […]

சமீபத்தில் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த  கார்த்திக் எனும் இளைஞர் இந்திய ஹாக்கி அணியின் சார்பாக விளையாடுவதற்கு கடந்த மே மாதத்தில் தேர்வாகி இருந்தார். இத்தகைய நிலையில், கார்த்திக் உரியமுறையில் பயிற்சி பெறவும், அடுத்தகட்ட நிலைக்கு செல்வதற்கும் தகுந்த வசதிகள் இன்றி தவித்து வந்தார். இவ்வாறு பெற்றோர்களின் வறுமையை அறிந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் உடனே அந்த மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரை அழைத்து ஹாக்கி வீரர் கார்த்திக்கிற்கு தேவையான உதவிகளைச் […]

சென்னையில் உடல்நலக் குறைவால் காலமான தமிழறிஞர் அவ்வை நடராஜன் உடலுக்கு முதலமைச்சர் முக.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினர். தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை செயலாளர், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் அவ்வை நடராஜன். 87 வயதான இவர், அண்மைக் காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், சென்னை செனாய் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்தார். […]