திமுக-காங்கிரஸ் கூட்டணி நாடாளுமன்ற தேர்தலிலும் தொடரும் என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தெரிவித்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் கூறியதாவது “மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத்தில் தாலுக்கா மருத்துவமனைகளில் டயலாசிஸ் வசதி அதேபோல் கேன்சர் […]

பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ், 2026 ஆம் ஆண்டு பாமக தலைமையில் நாங்கள் ஆட்சி அமைப்போம், அதற்கான யூகங்களை 2024 ஆம் ஆண்டு அமைப்போம் என்று கூறினார். தென்னக ரயில்வே மேலாளர் அலுவலகத்தில் தமிழக ரயில்வே திட்டங்கள் தொடர்பாக தென்னக ரயில்வே மேலாளர் ஆர்.என்.சிங்-ஐ நேரில் சந்தித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பாட்டாளி […]

முருகன், சாந்தன் உள்ளிட்ட 4 பேரையும் அகதிகள் முகாமில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று சீமான் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்குண்டு, 31 ஆண்டுக்காலத்திற்கும் மேலாக கொடுஞ்சிறைதண்டனைக்கு ஆளாகி, நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு விடுதலை பெற்றுள்ள தம்பி இராபர்ட் பயஸ், அண்ணன் ஜெயக்குமார், தம்பி சாந்தன், தம்பி முருகன் ஆகியோர் திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள செய்தியையும், […]

தமிழகம் முழுவதும் நாள் ஒன்றுக்கு மெட்ராஸ் ஐ பாதிக்கப்பட்டு 4000 முதல் 4500 வரை சிகிச்சைக்கு வருகிறார்கள். மேலும் இந்த நோயின் அறிகுறிகள் என்ன என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் மெட்ராஸ் ஐ பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் எழும்பூரில் உள்ள அரசு கண் மருத்துவமனையில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள மெட்ராஸ் ஐ குறித்த விழிப்புணர்வு கண்காட்சியை பார்வையிட்ட பின் […]

தமிழகத்தில் ஆளும் கட்சியை விமர்சித்து வரும் பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை தற்போது புதிய பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். அவர் கூறுகையில், ’’ திமுகவில் தான் தனிப்பட்ட முறையில் அண்ணாமலையை அதிக அளவில் விமர்சித்து வருகின்றார்கள். அநாகரீகமாக பேசி வன்மத்தை கக்குவது அவர்கள்தான். அநாகரீகமாக பேசுவதற்காகவே திமுக அமைச்சர்கள், எம்எல்ஏ.க்கள், சமூக ஊடக பிரிவினர் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். ஆனால், நான் தமிழக அரசை தனி மனிதனாக இருந்து எதிர்க்கின்றேன். திமுக ஆட்சிக்கு […]

தமிழகத்தில் தினசரி 4,500 பேர் வரை மெட்ராஸ் ஐ நோயால் பாதிக்கப்படுவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ”மெட்ராஸ் ஐ நோய்க்கு இதுவரை 1.50 லட்சம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மெட்ராஸ் ஐ நோயால் பாதிக்கப்பட்டவர்கள் முறையாக மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மெட்ராஸ் ஐ விரைந்து பரவும் தன்மையுடைய நோய் என்பதால் மருத்துவர்களின் ஆலோசனை இல்லாமல் […]

நீங்கள் நினைக்கும் மாதிரி எடப்பாடி பழனிசாமி ஆட்சியோ, ஓ.பன்னீர்செல்வம் ஆட்சியோ கிடையாது. இது திராவிட மாடல் ஆட்சி என உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார். சென்னை ஆலந்தூரில் நடைபெற்ற திராவிட மாடல் பயிற்சி பாசறைக் கூட்டத்தில் திமுக எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ”இங்கே பேசியவர்கள் சொன்னார்கள், தேர்தலில் நான் பிரச்சாரம் செய்ததால் வெற்றி பெற்றோம் என்று. மன்னிக்கவும் அதற்கு நான் காரணம் அல்ல, வெற்றிக்கெல்லாம் […]

தனித் தமிழ்நாடு கேட்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா வலியுறுத்தி உள்ளார். சென்னையில் திருமாவின் சிந்தனை கோட்பாடுகள் என்ற நூல் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. இதில், திருமாவளவன் பங்கேற்று பேசிய பேச்சுதான் பெரும் சர்ச்சையாகி உள்ளது. இந்நிகழ்ச்சியில் பேசிய திருமாவளவன், ”பதவி, அதிகாரம், பொருள் ஈட்டுதலுக்கான வாய்ப்புதான் அரசியல் என்கிற உணர்வை கட்டமைத்துள்ளனர். […]

அரசியல் விமர்சகர் கிஷோர் கே சுவாமியை போலீசார் கைது செய்துள்ளனர். தொலைக்காட்சி விவாதங்கள் மூலம் அறிமுகமாகிய கிஷோர் கே ஸ்வாமி சமூகவலைதளங்களில் திமுக-விற்கு எதிரான கருத்துக்களை பதிவிடுவதில் மிக முக்கியமான நபர். இவர் பெரும்பாலும் பாஜகவின் ஆதரவு நிலைப்பாட்டை முன்னிறுத்தி வந்திருக்கிறார். அதுமட்டுமின்றி இவர் மாற்று சிந்தனைக் கொண்ட அரசியல் பிரமுகர்களையும் விமர்சிப்பதை வழக்கம் உடைவர். இந்த நிலையில் தான் சமூக வலைதளத்தில், முதல்வர் குறித்து அவதுாறாக கருத்து பதிவிட்ட, […]

தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் தேர்தலை நியாயமாக நடத்த நடவடிக்கை எடுக்க பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது அறிக்கையில் தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் தேர்தல் 2023-ம் ஆண்டு ஜனவரி 19-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தேர்தல் நடத்தப்படும் விதம் குறித்து மருத்துவர்கள் மத்தியில் பல்வேறு ஐயங்கள் எழுந்துள்ள நிலையில், அவற்றை போக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் இன்று வரை […]