கோவையில் ஒரு வாரத்திற்குள் சாலைகள் சீரமைக்கப்படவில்லை என்றால் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய எஸ்.பி.வேலுமணி, சென்னையில் நான் செய்த பணிகளுக்கு பின்னர் இதுவரை வேலையும் பார்க்கவில்லை. கோவை மாவட்ட மக்களை இந்த அரசு புறக்கணிக்கின்றது.ஆய்வு செய்த பின்னர் அதிகாரிகளிடம் மனுவாக கொடுக்க போகின்றேன். ஒரு வாரத்தில் சாலையை சீரமைக்கவில்லை என்றால் மிகப்பெரிய உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும். 2011 ஆண்டுகளுக்கு பின் திருச்சி, பாலக்காடு […]

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதானவர்களை வெளியே நடமாட விடுவது தவறு என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருந்த பேரறிவாளன் முன்னரே விடுவிக்கப்பட்ட நிலையில், மீதமிருந்த 6 பேரையும் விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த 6 பேரும் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில், இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறுகையில், […]

தமிழகத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் நிவாரணம் அறிவிக்கப்படும் என்று தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ”மயிலாடுதுறை மாவட்டம், கடலூர் கடலோர பகுதிகளில் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளது. மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் நிவாரணம் அறிவிக்கப்படும். முதலமைச்சர் முக.ஸ்டாலின் ஆய்வு செய்து முடித்தபின் நிவாரண தொகை விவரம் அறிவிக்கப்படும். வீடுகளில் தண்ணீர் புகுந்தால் ரூ.4800 வழங்கப்படும் […]

ஒவ்வொரு வருடமும் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளை குழந்தைகள் தினமாக கொண்டாடி வருகின்றோம். அந்த வகையில் இந்த வருடமும் நவம்பர் 14ஆம் தேதியான இன்று நாடு முழுவதும் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. இதற்கு பல அரசியல் தலைவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அனைத்து பள்ளிகளிலும் இன்று குழந்தைகள் தின போட்டிகள் நடைபெறும். மேலும், அவர்களுக்கு சிறப்பு பரிசுகளும் அளிக்கப்படும். அந்த வகையில் தற்போது தமிழக முதல்வர் […]

சீர்காழி அருகே வாய்க்காலில் தவறி விழுந்து உயிரிழந்த அக்‌ஷிதா என்ற சிறுமியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து, ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார் . இது குறித்து அவர் தனது அறிக்கையில்; மயிலாடுதுறை மாவட்டம்‌, சீர்காழி வட்டம்‌, எருக்கூர்‌ கிராமம்‌, வடக்கு தெருவில்‌ வசித்து வரும்‌ திருராமன்‌ எண்பணின்‌ மகள்‌ அக்‌ ஷிதா என்ற ஐந்து வயது சிறுமி விட்டிற்கு அருகில்‌ விளையாடிக்‌ கொண்டிருந்த போது அருகில்‌ […]

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு பதிலாக ரூ.1,000 வழங்குவது குறித்து அரசு ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் வெகு விமரிசையாக கொண்டாடும் நோக்கில், அரசு சார்பில், ரேஷன் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு, பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். மேலும், அதனுடன் ரொக்கப் பணமும் வழங்கப்படும். ஆனால், கடந்த முறை முதலமைச்சர் முக.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு […]

பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டிற்கு பெயர் பெற்ற ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி மீண்டும் பாஜக மீது கடுமையான விமர்சனங்களை வைக்க தொடங்கியுள்ளார். பாஜக காஷ்மீரி பண்டிட்களை தங்கள் வாக்கு வங்கிக்காக மட்டுமே பயன்படுத்துகிறது என்று கூறினார். பிடிபி கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி தெற்கு காஷ்மீரில் உள்ள அனந்த்நாக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்பொழுது, “இந்திய தேர்தல் ஆணையம் சுதந்திரமான அமைப்பாக இல்லாமல் வெறும் […]

நேற்று பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்தபோது ஒரு மணி நேரம் என்ன பேசினோம் என்பதை பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராமத்திற்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு மாநிலத் தலைவர் அண்ணாமலை, முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு அளித்தனர். மாநிலத் தலைவர் என்ற முறையில் காரில் பயணித்த அண்ணாமலை தன்னுடன் மோடி என்ன பேசினார் என்பதை பகிர்ந்துகொண்டுள்ளார். மாநிலத் தலைவர் என்ற முறையில் என்னை வாகனத்தில் […]

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு குறித்து சர்ச்சையான வகையில் கருத்து தெரிவித்ததாக கூறி மேற்கு வங்க அமைச்சருக்கு பாரதிய ஜனதா கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவர் , மேற்கு வங்க அமைச்சர் அகில் கிரி. இவர் குடியரசுத் தலைவர் பற்றி கருத்து கூறியது சர்ச்சையாகி வீடியோ வைரலாகி வருகின்றது. நந்தி கிராமத்தில் பா.ஜ.க. தலைவர் சுவெந்து அதிகாரி பேரணியை தாக்கி பேசினார்.இதற்கு […]

குஜராத், இமாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேர்தல் பின்னணியில் மிக அதிகமான பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் அதிக அளவிலான பணத்தை தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்துள்ளது. தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியான ஒரு சில நாட்களிலேயே குஜராத்தில் ரூ. 71.88 கோடி மதிப்பிலான பணமும், பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இது கடந்த 2017 சட்டமன்ற தேர்தலில் நடத்தை விதிகள் அமலில் இருந்தபோது […]