சரோஜா பாலசுப்ரமணியன் மறைவிற்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியை தெரிவித்துள்ளார். ஆனந்த விகடன் குழுமத்தின் தலைவரான காலம் சென்ற எஸ்.பாலசுப்ரமணியன் அவர்களின் மனைவியும், ஆனந்த விகடன் குழுமத்தின் மேலாண் இயக்குநர் பா.சீனிவாசன் அவர்களின் தாயாருமான சரோஜா பாலசுப்ரமணியன் காலமானார். இவருக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் செய்தியை தெரிவித்து வருகின்றனர். தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள தனது இரங்கல் செய்தியில்; விகடன் குழுமத்தின் மேலாண் இயக்குநர் திரு.சீனிவாசன் அவர்களின் […]

பிரதமர் மோடி முன்னிலையில் நடிகர் விஷால் பாரதிய ஜனதாவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகின் ஆக்‌ஷன் ஹீரோவான நடிகர் விஷால் அரசியலுக்கு வருவாரா? என்ற எதிர்பார்ப்பு நீண்ட காலமாக இருந்து வருகிறது. இதுபற்றி கடந்த மாதம் ஆந்திராவில் நடந்த ஒரு நிகழ்ச்சியின் போது விஷாலிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த விஷால், ஒருவர் 100 ரூபாய் செலவு செய்து சேவை செய்தாலே அவர் அரசியலுக்கு வந்து […]

விவசாயிகளுக்கு வருடத்திற்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில், பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், கூடுதலாக ரூ.3 ஆயிரம் வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. இமாச்சல் பிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது. தற்போது ஆட்சிக் காலம் முடிந்து, இம்மாதம் 12ஆம் தேதி அனைத்து தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக, அனைத்து கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். […]

பருவமழையால் பள்ளிகளில் பழுதடைந்த கட்டடங்களை இடிக்க உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். திருவையாறு தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளான, கல்லணை புதிய பாலம் வழியாக, போக்குவரத்து புதிய வழித்தடங்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். பின்னர், திருவையாறு புறவழிச் சாலை திட்டப்பணிகளையும் அவர் தொடங்கி வைத்தார். இதற்கிடையே, செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”திருக்காட்டுப்பள்ளியில் இருந்து கல்லணை வழியாக திருச்சிக்கு போக்குவரத்து வழிதடங்களை திறந்து […]

கரூர் மாவட்ட பகுதியில் குளித்தலைக்கு அருகே பாலசமுத்திரப்பட்டியை சேர்ந்த அதிமுக மாவட்ட கவுன்சிலராக இருப்பவர் வசந்தா. இவரது கணவர் பழனிச்சாமி. கணவர் தோகைமலை கிழக்கு ஒன்றிய அதிமுக ஜெ.பேரவையில் செயலாளராக இருந்து வருகிறார். மருதைவீரன் என்பவர் குளித்தலையில் இருக்கும் டிஎஸ்பியிடம் பழனிச்சாமியின் பேரில் புகார் கொடுத்துள்ளார். அந்த மனுவில், பழனிச்சாமியிடம் ரூ.2 லட்சம் கடன் பெற்று வந்த நிலையில் சில நாட்களாக கந்துவட்டியை கேட்டு மிரட்டியுள்ளார். இதையடுத்து, ஆபாச வார்த்தைகளால் […]

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றிருப்பதாகதகவல்கள் வைரலாகி வருகின்றது. தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா 1974ல் பிறந்தார். ஆதர்ஷ் வித்தியாலயாவில் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்தார். பின்னர் சென்னைபல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றார். மதுரை காமராஜர் பல்கலையில் ஆங்கிலப் பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றார். டைம்ஸ் பத்திரிகையில் சில காலம் பணியாற்றினர். பின்னர் வெளிநாட்டிற்கு சென்றார். […]

ராசிபுரம் அருகே தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்த புகழேந்தி, ” சென்னையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மழை நீர் வடிகால் வாரியம் அமைக்க ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டன. அந்த நிதியை பற்றி திமுக தலைவர் ஸ்டாலின் விசாரிப்பாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் கன மழையால் சென்னை பெருநகரம் முழுவதும் வெள்ளதில் மூழ்கி, மழை நீரால் அனைத்து பகுதியும் சூழ்ந்தது. சென்னை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் […]

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியை அடுத்த பாதிரிவேடு கிராமத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அதிமுக முன்னாள் அமைச்சரான டி.ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். செய்தியாளர்களிடம் சந்தித்து பேசிய அவர், “சசிகலாவை எதிர்த்து தர்மயுத்தம் செய்த ஓபிஎஸ் அவரிடமே சரணடைந்துள்ளார். இது தர்ம யுத்தம் 2.0 அல்ல, கர்ம யுத்தம். ஓபிஎஸ் அதிமுக அரசையே எதிர்த்து வாக்களித்துள்ளார். மேலும், புரட்சி தலைவர் எம்ஜிஆர் மாளிகையை உடைத்து மற்றும் ஜெயலலிதாவின் அறையையும் […]

எடப்பாடி ஆதரவாளர்கள் பாஜகவில் இணைவார்கள் என புகழேந்தி தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான புகழேந்தி; அதிமுகவின் பொது செயலாளர் பதவி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை தவிர வேறு யாருக்கும் கிடையாது. எடப்பாடி பழனிச்சாமி, தங்கமணி, வேலுமணி இவர்களில் யார் நினைத்தாலும் அவர்களின் கனவு ஒரு நாளும் நிறைவேறாது. தங்கமணி திருந்த வேண்டும் இல்லையென்றால் களத்தில் இறங்க வேண்டி […]

தமிழறிஞரும் திராவிட இயக்க பேச்சாளருமான நெடுஞ்செழியன் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 70. சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த தமிழறிஞரும் திராவிட இயக்க பேச்சாளருமான நெடுஞ்செழியன் காலமானார். பல்வேறு உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டிருந்த தமிழறிஞர் நெடுஞ்செழியன் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், இன்று காலை சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. இதனைத் தொடர்ந்து […]