தமிழ்நாட்டில் அரசுப் பேருந்துகளுக்கான கட்டணம் உயர்த்தப்படாது என அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் மூலம் தினசரி 20,508 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில், சுமார் 1.85 கோடி பேர் பயணம் செய்கின்றனர். மேலும், இந்த பேருந்துகளுக்கு தினமும் 17 லட்சம் லிட்டர் டீசல் போடப்படுகிறது. ஆனால் டீசல் விலை, சுங்கச்சாவடி கட்டணம் உயர்வால் செலவு அதிகரித்துள்ளது. தினசரி வருவாய் ரூ.39 கோடியாக உள்ள நிலையில், செலவு […]
அரசியல்
political news | Get all the latest news and updates on Tamil Nadu, National and International Politics news only on 1newsnation.com. Read all news including political news, current affairs and news headlines and more…
கோடை விடுமுறை முடிந்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. இதனால், மாணவர்கள் நீண்ட நாட்களுக்கு பிறகு ஆர்வமுடன் பள்ளிக்கு சென்றனர். புதிய கல்வியாண்டை தொடங்கும் உற்சாகத்துடன் மாணவர்கள் வகுப்பறைக்குச் சென்றனர். அனைத்து பள்ளிகளிலும் புதிய மாணவர்களை வரவேற்கும் விதமாக ஆசிரியர்கள் இனிப்பு வழங்கினர். பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளே அரசுப் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச பாடப்புத்தகங்கள் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டது. அதேபோல் பள்ளி வேலை நாட்கள், விடுமுறைகள், […]
மணிப்பூர் மாநிலத்தில் தற்போது ஜனாதிபதி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆனால், இங்கு மீண்டும் ஆட்சி அமைக்க பாஜக முயற்சித்து வருகிறது. தற்போதைக்கு தனக்கு 44 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாக ஆளுநா் அஜய்குமாா் பல்லாவை சந்தித்து பாஜக எம்எல்ஏ தோக்சோம் ராதேஷாம் சிங் கூறியுள்ளார். இந்த சூழலில் தான், மணிப்பூரில் மீண்டும் ஒரு பூகம்பம் வெடித்துள்ளது. அதாவது, பாரதிய ஜனதா கட்சியின் பெண் தலைவரின் மகனின் 130 ஆபாச வீடியோக்கள் தொடர்பான […]
புகைப் பிடிப்பதற்கான குறைந்தபட்ச வயதை 21 ஆக உயர்த்தும் சட்டத்தை மத்திய அரசும், தமிழக அரசும் உடனடியாக கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் தனது அறிக்கையில்; கர்நாடகத்தில் சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருள்களை பயன்படுத்துவதற்கான குறைந்தபட்ச வயது 21 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கே வழிகாட்டும் வகையில் கர்நாடக அரசு இயற்றியுள்ள இந்தச் சட்டம் வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் […]
நாம் தமிழர் கட்சியில் இருந்து சேலம் மாநகர் மாவட்ட தலைவர் கண்ணன் விலகுவதாக அறிவித்துள்ளார். சமீபகாலமாக நாம் தமிழர் கட்சியில் இருந்து மாநில பொறுப்பு முதல் ஒன்றியம் வரை பல்வேறு நிர்வாகிகள் தொடர்ந்து விலகி வருகின்றனர். கடந்த ஜனவரி மாதம் 3 ஆயிரம் பேர் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இதில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் 8 பேர் இருந்தனர். அதைத்தொடர்ந்து மாநில கொள்கை பரப்புச் செயலாளராகப் பணியாற்றி […]
டெல்லி “மதராசி கேம்ப் குடியிருப்பாளர்களின் வாழ்வாதாரம் மற்றும் தேவையான பிற அடிப்படை உதவிகளும் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. “மதராசி கேம்ப்” என்பது தெற்கு டெல்லி, நிஜாமுதீன் ரயில்வே நிலையத்துக்கு அருகிலுள்ள பராப்புல்லா ஜங்க்புரா வடிகாலின் கரையில் அமைந்துள்ள ஓரங்கட்டப்பட்ட குடிசை பகுதியாகும். இக்குடிசைப் பகுதியிலுள்ள 370 குடிசை வீடுகளில் பெரும்பாலானோர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். டெல்லி உயர்நீதிமன்றம், “மதராசி கேம்ப்” என்பது பராப்புல்லா வடிகாலின் கரையில் கட்டப்பட்ட […]
அதிமுக மூத்த நிர்வாகிகளை கட்சியில் இருந்து நீக்க எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலா ஆதரவில் முதலமைச்சராக்கப்பட்ட பழனிசாமி, சசிகலா சிறைக்கு சென்றதும் அவரையும் கட்சியின் துணைப் பொதுசெயலாளராக நியமிக்கப்பட்ட டிடிவி தினகரன் உள்ளிட்ட அவர் குடும்பத்தினரையும் கட்சியை விட்டே ஒதுக்கினார். பின்னர், அதிமுக ஒருங்கிணைப்பாளராக இருந்த ஒ.பன்னீர்செல்வம், மூத்த நிர்வாகிகளான வைத்திலிங்கம், கு.ப.கிருஷ்ணன், மனோஜ்பாண்டியன், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோரையும் கட்சியை விட்டு பொதுக்குழு மூலம் நீக்கி, […]
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால், அவர் கலந்து கொள்ள இருந்த நிகழ்ச்சிகள் அனைத்து ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. துணை முதல்வர் உதயநிதிக்கு காய்ச்சல் மற்றும் தொடர் இருமல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதனால், அவர் சில நாட்கள் ஓய்வில் இருக்க வேண்டுமென அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார். இதற்கிடையே, அவர் பல்வேறு அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருந்த […]
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொள்ள இருந்த அரசு மற்றும் கழக நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சார்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 48 ஆண்டுகளுக்கு பின் மதுரையில் திமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான கூட்டத்தில் சுமார் 10 ஆயிரம் திமுகவினர் பங்கேற்கின்றனர். இந்த பொதுக்குழு கூட்டத்தில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேடையில் முக்கிய நிர்வாகிகள், துணை பொதுச்செயலாளர் இடம்பெற்று இருந்தனர். அமைச்சர்கள் பலரும் […]
“தற்போது பரவும் கொரோனா வீரியம் இல்லாதவை என்பதால், மாணவர்கள் முகக்கவசம் அணிய தேவையில்லை” என்று அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 300-ஐ தாண்டியுள்ளது. கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கோடை விடுமுறை முடிந்து இன்று அனைத்துப் பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ளன. ஆனால், தற்போது கொரோனா தீவிரமாக பரவி வரும் நிலையில், பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால், மாணவர்களின் பெற்றோர்கள் அச்சமடைந்துள்ளனர். இருப்பினும், இந்த வகையான […]