2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றிருந்தன.. ஆனால் தேர்தல் முடிவுகளுக்கு பின் முதல் ஆளாக காங்கிரஸ் திமுக கூட்டணியை முறித்துக் கொண்டு தவெகவுக்கு ஆதரவு வழங்கியது.. மேலும் அடுத்து நடைபெற உள்ள உள்ளாட்சி நாடாளுமன்ற தேர்தலிலும் தவெக உடன் கூட்டணி தொடரும் என்று காங்கிரஸ் அறிவித்தது.. இதையடுத்து விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய […]

முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக கடந்த மாதம் 27-ம் தேதி டெல்லி சென்ற விஜய் பிரதமர் மோடி மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்து பேசினார்.. தொடர்ந்து கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் தலைவர்களை விஜய் சந்திப்பார் என்று கூறப்பட்ட நிலையில் சந்திக்காமலேயே தமிழ்நாடு திரும்பினார்.. இந்த நிலையில் 3 நாள் அரசு முறை பயணமாக முதல்வர் விஜய் 2-வது முறையாக நேற்று டெல்லி சென்றார்.. பிரதமர் மோடி […]

தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் அதிமுகவில் பிளவு ஏற்பட்டது.. இபிஎஸ் தலைமையில் ஒரு குழுவாகவும், எஸ்.பி. வேலுமணி, சி.வி சண்முகம் உள்ளிட்டோர் ஒரு குழுவாகவும் பிரிந்தனர்.. இபிஎஸ் தலைமையில் தொடர் தோல்விகளை சந்தித்த நிலையில் அவருக்கு எதிராக முன்னாள் அமைச்சர்கள் போர்க்கொடி தூக்கினர்.. மேலும் எஸ்.பி. வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின் போது தவெகவுக்கு ஆதரவு வழங்கினார்கள்.. ஆனால் பதவி ஆசைக்காக அவர்கள் இப்படி செய்கிறார்கள் […]

தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்தது முதலே அறிவிக்கப்படாத மின் வெட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் மின் வாரிய அதிகாரிகள் இதனை மறுத்து வருகின்றனர்.. ஊரக பகுதிகளில் மின் தேவை அதிகரிப்பு, நிலத்தடி மின்கம்பிகள் பழுது ஆகியவற்றால் மின் தடை ஏற்படுகிறது.. அதனை சரி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மின்வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.. இந்த நிலையில் மின் வெட்டு தொடர் பிரச்சனையாக மாறி உள்ளது.. […]

இலங்கைக்கு 258 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்தியதாகக் கூறப்படும் ஒரு போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடைய பணமோசடி விசாரணை தொடர்பாக, அமலாக்க இயக்குநரகம் (ED) சென்னை மற்றும் இராமநாதபுரம் முழுவதும் 5 இடங்களில் சோதனை மேற்கொண்டது இந்த கடத்தல் நடவடிக்கையின் பின்னணியில் உள்ள முக்கிய சூத்திரதாரி ஜான் பிரிட்டோ எனத் தனது விசாரணையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. பிரிட்டோ போதைப்பொருட்களைப் பெற்று, இலங்கை கடல் மார்க்கமாக இயங்கும் […]

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் உத்தரவு பிறப்பித்தார்.. ஆனால் அந்த உத்தரவின் படி தீபம் ஏற்றாததால் பதியப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழ்நாடு அரசு தன் நிலைபாட்டை தெரிவிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.. இந்த சூழலில் இதுகுறித்து பேசிய அமைச்சர் நிர்மல் குமார் “ திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மக்கள் அனைவரும் அமைதியை விரும்புகிறார்கள்.. […]

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியா கூட்டணியின் ஆலோசனை இன்று நடைபெறுகிறது.. டெல்லியில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் 2029 மக்களவை தேர்தலை கருத்தில் கொண்டு, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.. நீட் வினாத்தாள் கசிவு, எரிபொருள் விலை உயர்வு போன்ற தேசிய பிரச்சனைகளில் மத்திய பாஜக அரசுக்கு நெருக்கடியை உருவாக்குவது உள்ளிட்ட யூகங்கள் குறித்தும் ஆலோசிக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இந்த கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்க உள்ளதாக காங்கிரஸ் […]

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தவெகவில் இணையும் நிகழ்ச்சி இன்று சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலுகத்தில் நடைபெற்றது.. அப்போது பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா “ அதிமுக நிர்வாகிகள் 90% பேர் தவெகவுக்கு வருவார்கள்.. கட்சியில் சேர்ந்தவர்களுக்கு உள்ளாட்சி தேர்தலில் சமமான பணி வழங்கப்படும்.. எம்.ஜி.ஆருடன் பணியாற்றியவர்கள் தவெகவுக்கு வந்ததில் மகிழ்ச்சி.. ஜெயலலிதாவை தவிர வேறு யாரையும் அதிமுக பொதுச்செயலாளராக அக்கட்சி தொண்டர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை..” என்று தெரிவித்தார்.. இந்த […]

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுக்கு பின்னர் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும், எஸ்.பி. வேலுமணி – சி.வி சண்முகம் தலைமையில் மற்றொரு அணியும் செயல்பட்டது.. இதையடுத்து நடைபெற்ற பேச்சுவார்த்தை சுமூக முடிவு எட்டப்பட்ட நிலையில் எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அணி இபிஎஸ் அணியில் இணைந்து ஒரே அணியாக செயல்பட தொடங்கி உள்ளனர்.. எனினும் சி.வி. சண்முகம் மட்டும் இபிஎஸ் உடன் இணையவில்லை.. அவருடன் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் நடத்திய பேச்சுவார்த்தையும் […]

சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் திமுக கூட்டணியில் இருந்து தவெகவுக்கு மாறியது காங்கிரஸ்.. இதனால் திமுக கடும் விமர்சனங்களை முன் வைத்து வருகிறது.. இந்த சூழலில் திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் ராகுல்காந்தியை கடுமையாக விமர்சித்து ஒரு கட்டுரை வெளியாகி இருந்தது.. அதில் “ தனது தலையில் தானே மண் அள்ளிப்போட்டுக் கொண்டுள்ளார் ராகுல். காங்கிரச் கட்சியை ஆழக் குழி தோண்டி ஒவ்வொரு மாநிலத்திலும் புதைக்கும் செயலை அவர் செய்து வருகிறார். […]