ஓ.பன்னீர்செல்வத்துக்கு மரியாதை குறைவு ஏற்படக்கூடாது என்பதற்காக இணை பொதுச்செயலாளர் பதவி வழங்க எடப்பாடி பழனிசாமி முடிவு செய்ததாக முன்னாள் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் அதிமுக செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான தங்கமணி பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், ”உச்சநீதிமன்றத்தில் நாம்தான் பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தவில்லை வழக்குகள் முடிந்த பிறகு நடத்துகிறோம் என தெரிவித்திருக்கிறோம். ஆனால் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு […]
அரசியல்
political news | Get all the latest news and updates on Tamil Nadu, National and International Politics news only on 1newsnation.com. Read all news including political news, current affairs and news headlines and more…
உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ் ஐசியு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சமாஜ்வாதி கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவ், குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் உள்ள ஐசியு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் வயது மூப்பின் காரணமாகவும் உடல் நல குறைவால் கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இருப்பினும், ஞாயிற்றுக்கிழமை அவரது உடல்நிலை மோசமடைந்ததையடுத்து அவர் ஐசியுவுக்கு மாற்றப்பட்டார். அவரது உடல்நிலை […]
எடப்பாடி பழனிசாமி துணிச்சல் இல்லாதவர் என்றும் தானும் சசிகலாவும் ஓ.பன்னீர்செல்வமும் நேரம் வரும்போது ஒன்றிணைவோம் என்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தஞ்சையில் மகாத்மா காந்தி பிறந்தநாள் மற்றும் காமராஜர் நினைவுநாளை முன்னிட்டு அவர்களது படத்திற்கு டிடிவி தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”தமிழகத்தில் நவம்பர் 6ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. நீதிமன்றம் உத்தரவிட்டதால் நான் அதை […]
தமிழகத்தில் உள்ள ஒட்டு மொத்த பெண்களும் , இலவச பேருந்து பயணத்தை புறக்கணிக்க வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் , ’’ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் பண்டிகை காலத்தில் வருமானம் பார்க்க அதிக விலை அறிவித்துள்ளார்கள். வசதியானவர்கள் ஆம்னி பேருந்தில் செல்லட்டும் ஏழை மக்கள் அரசு பேருந்தில் பயணிக்கலாம் என அமைச்சர் கூறுகின்றார். இதை கூறுவதற்கு அவர் ஏன் அமைச்சராக இருக்க வேண்டும். ஒரு […]
”ஓபிஎஸ், சசிகலா, தினகரன் மூவரும் பாதிக்கப்பட்டுள்ளதாலும், அவர்கள் இணைந்து செயல்பட விரும்புவதாலும் அவர்களுக்கு ஆதரவளிக்கிறேன் என தனியரசு தெரிவித்துள்ளார். கரூரில் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை அமைப்பின் மாநில பொதுக்குழுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த பொதுக்குழுக்கூட்டத்தில் அந்த அமைப்பின் நிறுவனத் தலைவர் முன்னாள் எம்எல்ஏ தனியரசு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில், ”தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு ஓயாது உழைக்கும் முதலமைச்சர் முக.ஸ்டாலினுக்கும், தமிழக அரசுக்கும் இந்த பொதுக்குழு நன்றி பாராட்டுகிறது. மத்திய […]
வீரபாண்டி கிராம சபை கூட்டத்தில் இருந்து அமைச்சர் பொன்முடி பாதியிலேயே வெளியேறியதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டம் வீரபாண்டி கிராமத்தில் இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டார். அப்போது அவரிடம் குடிநீர், கழிவு நீர் கால்வாய் வசதிகள் குறித்து கிராம மக்கள் கேள்வி எழுப்பினர். குடிநீருக்காக தாங்கள் மிக நீண்ட தூரம் செல்வதாகவும் வேதனை தெரிவித்தனர். […]
காந்தி ஜெயந்தியான இன்று பிரசாந்த கிஷோர் தனது நடைபயணத்தை துவங்கியுள்ளார். வருகிற 2024-இல் மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் பாஜகவை வீழ்த்த பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரின் எதிர்க்கட்சி சார்பில் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் அரசியல் வியூக நிபுணராக உள்ள பிரசாந்த் கிஷோரை சந்தித்து நிதீஷ் குமார் ஆலோசனை மேற்கொண்டார். இதன் காரணமாக மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகளுக்கு பிரசாந்த் கிஷோர் வெற்றி வியூகம் […]
‘தனிமனிதர்களால் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை ஒழிக்க முடியாது’ என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். காமராஜரின் 48-வது நினைவு தினத்தையொட்டி சென்னை கிண்டியில் உள்ள அவரது நினைவகத்தில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”காமராஜர் காலம் தமிழகத்தின் பொற்காலம் ஆகும். ஏழை, எளிய குழந்தைகள் கல்வி கற்பதற்கு மதிய உணவை அமல்படுத்தியவர். காமராஜர் ஆட்சி காலத்தில் தான் மிக பெரிய […]
”ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்கள் யாரும் சசிகலா பக்கம் செல்லமாட்டார்கள்” என்று முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். காமராஜரின் 48-வது நினைவு தினத்தையொட்டி சென்னையில் உள்ள காமராஜர் நினைவகத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”கிங் மேக்கராக இருந்தது பல தலைவர்களை உருவாக்கிய பெருமை காமராஜருக்கு உண்டு. தற்போது குழப்பத்தின் உட்சத்தில் திமுக அரசு உள்ளது. திமுக அமைச்சர்களுக்கும் தெளிவு இல்லை. […]
புதுச்சேரியில் மின்வாரிய ஊழியர்கள் பணிக்கு திரும்பாவிட்டால், அத்தியாவசிய சேவைகள் பராமரிப்பு சட்டம் அமல்படுத்தப்படும் என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் நினைவுத் தினத்தையொட்டி, புதுச்சேரியில் உள்ள காமராஜர் சிலைக்கு புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தினர். அப்போது, மனித சங்கிலி போராட்டம் நடத்திக் கொண்டிருந்த திமுக, காங்கிரஸ் கட்சியினர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு எதிர்ப்பு […]