இனி அரசாங்கத்திற்கு இடம் ஏதும் தேவை என்றால், ஜி ஸ்கொயர் நிறுவனத்திடம் இருந்துதான் வாங்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”புதிய கல்விக் கொள்கையால் அனைத்து தேசிய இனங்களின் மொழிகளும் அழியும். அவர்களின் நோக்கம் இந்தி, சமஸ்கிருதத்தை வளர்ப்பது தான். புதிய கொள்கை குழந்தைகளுக்கான மரண சாசனம். நீட் தேர்வுக்கு முன்பாகவே நல்ல மருத்துவர்கள் உருவாகி இருக்கிறார்கள். பிரதமர் […]
அரசியல்
political news | Get all the latest news and updates on Tamil Nadu, National and International Politics news only on 1newsnation.com. Read all news including political news, current affairs and news headlines and more…
நடிகை ஜெயக்குமாரிக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தனது சிறந்த நடிப்பால் 80-களின் ரசிகர்களை கவர்ந்த நடிகை ஜெயக்குமாரி, பெரும்பாலும் வில்லி மற்றும் கவர்ச்சியான வேடங்களில் நடித்துள்ளார். பழம்பெரும் நடிகை ஜெயக்குமாரிக்கு வயது 70. இவர் தனது மகனுடன் சென்னை வேளச்சேரியில் வசித்து வருகிறார். 25 வயதில் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த அப்துல்லா என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு சஜிதா, பானு என்ற இரண்டு […]
காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என ராஜஸ்தான் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநில நிர்வாகிகள் கூட்டம், அம்மாநில முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான அசோக் கெலாத் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், முக்கியமான தீர்மானங்கள் முன்மொழியப்பட்டு அவை நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில், முக்கிய முடிவாக காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றும், காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் […]
உத்தரபிரதேச மாநில காவல்துறையை சீரமைக்கும் திட்டத்தின் கீழ் 56 மாவட்டங்களுக்கு நவீன சிறை வாகனங்களை அறிமுகப்படுத்தும் விழாவை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், உத்தரபிரதேசத்தில் இருக்கும் சட்டம் ஒழுங்கு நிலவரம் நாட்டிற்கு மட்டுமின்றி, உலகத்திற்கே உதாரணமாக உள்ளது. 2017-ஆம் வருடத்திற்கு முன்பு வன்முறை, அராஜகம் மற்றும் போக்கிரித்தனம் பற்றி விவாதிக்க மக்கள் உத்தரபிரதேசத்தை உதாரணமாக பார்த்தனர். ஆனால், தற்போது மாநிலத்தில் சட்டம் […]
உக்ரைனில் இருந்து திரும்பிய இந்திய மருத்துவ மாணவர்களுக்கு இந்தியாவில் படிப்பை தொடர அவர்களுக்கு மருத்துவ சீட்டு வழங்கப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில்….’’ வெளியுறவு கொள்கை தொடர்பான மக்களவை குழு , இவர்களுக்கு இந்தியாவில் மருத்துவப்படிப்பை மேற்கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என பரிந்துரைத்திருந்த நிலையில் மத்திய அரசின் நிலைப்பாடு மாணவர்களின் நம்பிக்கையை சிதைத்துள்ளது… அரசு […]
டெல்லி, ஆம் ஆத்மி எம்.எல்.ஏ அமனதுல்லா கானின் வீட்டிற்கு நேற்று முன்தினம் சோதனை செய்ய சென்ற லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரியை அமனதுல்லா கானின் வீட்டில் இருந்தவர்கள் தாக்கும் வீடியோ தற்போது வெளியாகி இருக்கிறது. வக்பு வாரிய வழக்கு தொடர்பாக ஜாமியா நகரில் இருக்கும் அமனதுல்லா கானின் வீட்டில் சோதனை செய்ய போன போது, எம்.எல்.ஏவின் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அதிகாரியை தாக்கியதாக, வீடியோ ஆதாரங்களுடன் கோர்ட்டில் தகவல் அளிக்கப்பட்டது. இதுகுறித்து […]
சென்னை, தீண்டாமையைப் போலவே மத வெறுப்பும் மோசமானது என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் டிடிவி தினகரன் கூறியிருப்பதாவது;- தீண்டாமையைப் போலவே மத வெறுப்பும் மிகவும் மோசமானது. சென்னையில், தலையில் தொப்பி அணிந்த இஸ்லாமிய சிறுவனைக் கேலி செய்யும் விதமாக நிகழ்ந்த செயலை ஏற்க முடியாது. நல்லிணக்கத்தை குலைக்கும் இத்தகையை செயல்களை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய வேண்டும் என்று கூறியுள்ளார். அதேபோல், […]
தமிழகத்தில் ’ப்ளூ’ காய்ச்சல் பரவுவதைத் தடுக்கும் விதமாக, சிறிது காலத்திற்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டுமென முதலமைச்சர் முக.ஸ்டாலினுக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் கொரோனா தாக்கம் சற்று அதிகரிக்க துவங்கியுள்ள நிலையில், ’ப்ளூ’ வகை வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த காய்ச்சல் காரணமாக நாளுக்கு நாள் மருத்துவமனைகளுக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. குறிப்பாக, குழந்தைகளிடையே இந்தக் காய்ச்சல் […]
கமல்ஹாசனுக்கு இப்போதுதான் கோவை தெற்கு தொகுதி ஞாபகம் வந்துள்ளதாகவும், தொகுதி மக்களின் மனுக்களை வாங்கிக் கொண்டு அதனை பிக்பாஸில் வைத்து தீர்க்கலாம் என நினைக்க கூடாது என்றும் வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார். கோவை மாவட்டம் சிவனந்தகாலனி பகுதியில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன், பிரதமர் மோடியின் 72-வது பிறந்த நாளை முன்னிட்டு மரக்கன்று நடுதல் மற்றும் தூய்மை பணியில் […]
தமிழக அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு இல்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக பல்வேறு புகார்கள் எழுந்தன. இந்த சூழ்நிலையில் தமிழகத்தில் மருந்துகள் கையிருப்பு மற்றும் கொள்முதல் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழக அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்திற்கு […]