அமைச்சர் துரைமுருகனுக்கு எதிராக நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், தமிழக சட்டத்துறை அமைச்சருமான துரைமுருகன், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அடுத்த நிலையில் மிக முக்கியமான பதவியை வகித்து வருகிறார். கட்சியின் பொதுச்செயலாளர் பொறுப்பில் இருக்கும் இவர், கடந்த 2006 முதல் 2011 வரையிலான கருணாநிதி தலைமையிலான தி.மு.க. ஆட்சியில் பொதுப்பணித் துறை அமைச்சராகப் பதவி வகித்தார். 2007 முதல் 2009 வரையிலான […]

பாஜக தலைமை மீது அதிருப்தியில் இல்லை. தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள சிறு சிறு பிரச்சனைகள் களையப்படும். டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்க இயலாது என அமித் ஷாவிடம் தெரிவித்துவிட்டேன் என அண்ணாமலை கூறியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை; தமிழகத்தில் 2026-ம் ஆண்டு மக்களுக்கு நல்ல வித்தியாசமான ஆட்சியை கொடுக்க வேண்டும் என்பதே தேசிய ஜனநாயக கூட்டணியின் இலக்கு என டிடிவி […]

அதிமுக ஆட்சி அமைந்ததும் திமுக ஆட்சியில் நடைபெற்ற ஊழல் குறித்து விசாரிக்கப்படும் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சாரப்பயணத்தில் நேற்று மதுரை மேற்கு தொகுதியில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி: மதுரை மாவட்டம் அதிமுக கோட்டை. கடந்த தேர்தலில் சூழ்ச்சி செய்து சில தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. அடுத்த ஆண்டு தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றிபெறும். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு […]

திருநெல்வேலியில் செப்டம்பர் 7-ல் மாநில மாநாட்டில் பங்கேற்க கட்சி நிர்வாகிகளுக்கு காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்ட அறிக்கையில்: சமீபத்தில் பிஹாரில் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் 65 லட்சம் வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கியிருக்கிறது. இதை எதிர்த்து சமீபத்தில் வாக்காளர் உரிமை பயணத்தை பிஹார் மாநிலத்தில் மக்களின் பேராதரவோடு ராகுல்காந்தி நடத்தியிருக்கிறார். வாக்கு திருட்டு […]

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் பரப்புரையை முன்னெடுத்து வருகிறது.. அதே போல் அதிமுகவும் மக்களை மீட்போம் தமிழகத்தை காப்போம் என்ற பெயரில் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளது. ஒருபுறம் கூட்டணி பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகின்றன. மறுபுறம் கூட்டணியில் இருந்து சிலர் வெளியேறி வருகின்றனர்.. குறிப்பாக பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியில் […]

2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. கடந்த சில மாதங்களாக தமிழக அரசியலில் அடுத்தடுத்து நிகழும் சில நிகழ்வுகள் பேசு பொருளாக மாறி உள்ளன.. முதலில் மோடி, அமித்ஷாவை சந்திக்க முடியாத்தால் பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியில் ஓபிஎஸ் வெளியேறினார்.. ஒன்றுபட்ட அதிமுக என்பதே தனது நோக்கம் என அவர் தொடர்ந்து கூறி வருகிறார்.. ஓபிஎஸ் வெளியேறிய […]

மத்திய அரசின் சமீபத்திய ஜிஎஸ்டி விகிதக் குறைப்புகளை காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான பி. சிதம்பரம் வரவேற்றுள்ளார், ஆனால் இந்த நடவடிக்கை “8 ஆண்டுகள் தாமதமானது” என்று விமர்சித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் தற்போதைய ஜிஎஸ்டி வடிவமைப்பு மற்றும் விகிதங்களை முதலில் அறிமுகப்படுத்தியிருக்கக்கூடாது என்றும், எதிர்க்கட்சிகள் பல ஆண்டுகளாக இந்தப் பிரச்சினைகளுக்கு எதிராக பலமுறை எச்சரித்து வந்தாலும், அவர்களின் வேண்டுகோள்கள் புறக்கணிக்கப்பட்டன என்றும் கூறினார். […]

திண்டுக்கலை சேர்ந்த சூரிய மூர்த்தி என்பவர் பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும், எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வானது உள்ளிட்டவற்றை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.. இந்த தேர்வு முறை தவறானது என்றும், கட்சி விதிமுறைகளுக்கு எதிரானது என்றும் அவர் மனுவில் கோரியிருந்தார்.. இதையடுத்து அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கை நிராகரிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி மனு தாக்கல் செய்திருந்தார்.. இந்த வழக்கை சென்னை உரிமையியல் நீதிமன்றம் தள்ளுபடி […]