கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 24 பேர் காவல்துறை விசாரணையில் மரணமடைந்துள்ளனர். இது பொதுமக்களின் சீற்றத்தையும், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நடைமுறைகள் குறித்து மீண்டும் ஆய்வு செய்யப்படுவதையும் தூண்டுகிறது. சமீபத்தில் சிவகங்கை மாவட்டத்தில் காவல் துறை விசாரணையின்போது மரணமடைந்த அஜித் குமார் என்ற 27 வயது நபர் தொடர்பான வழக்கு, இந்திய அளவில் கடுமையான விமர்சனங்களை பெற்றது. இது போன்ற காவல் நிலைய மரணங்கள் நடப்பது முதன் முறையல்ல. இந்த […]

துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் உடல்நலக்குறைவை காரணம் காட்டி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரின் இந்த ராஜினாமா தேசிய அரசியலில் பேசு பொருளாக மாறியது. இதனையடுத்து துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் செப்டம்பர் 9-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், துணை ஜனாதிபதி வேட்பாளராக கூட்டணி சார்பில் சிபி. ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார் என்று நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. […]

அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்து, திண்டுக்கலைச் சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை நிறைவு செய்ய கோரி எடப்பாடி பழனிசாமி சார்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது . வழக்கில், சூரியமூர்த்தி தரப்பு, கட்சி விதிகளின் அடிப்படையில் பொதுச்செயலாளர் தேர்வு நேர்மையாக நடைபெறவில்லை என வாதிட்டது. அதே நேரத்தில், எடப்பாடி தரப்பில், சூரியமூர்த்தி கட்சியின் உறுப்பினர் அல்லாததால் அவரால் இத்தகைய கேள்வி […]

2026 சட்டமன்ற தேர்தலுக்கு தமிழ்நாடு தயாராகி வருகிறது. அரசியல் கட்சியினரும் தங்களது தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். திமுக கூட்டணி பலத்தோடு தேர்தலை சந்திக்கவுள்ள நிலையில், அதிமுகவும் பாஜகவும் கூட்டணி அமைத்து இந்த தேர்தலை சந்திக்கின்றன. நாம் தமிழர் கட்சி எப்போதும் போல் தனித்தே போட்டியிடும் என சீமான் தெரிவித்திருக்கிறார். இந்நிலையில், தமிழக அரசியலில் புது என்ட்ரி கொடுத்துள்ள விஜய், தனது தவெகவுடன் முதல் தேர்தலை சந்திக்கிறார். கடந்தாண்டு தான் விஜய் […]

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்” குறித்து மக்களின் மனநிலையை அறியும் விதமாக மாணாக்கர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ளும் வகையில், உங்களுடன் ஸ்டாலின் என்னும் தலைப்பில் அறிவுசார் போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. உங்களுடன் ஸ்டாலின் திட்டம்” 15.7.2025 அன்று முதலமைச்சர் அவர்களால் தொடங்கிவைக்கப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது.இந்தத் திட்டம் மக்கள் வாழ்வில் ஏற்படுத்தியுள்ள சிந்தனைகள், மாற்றங்கள் குறித்து, மக்களின் உணர்வுகளை அறிந்துகொள்ளும் வகையில், “உங்களுடன் ஸ்டாலின்” என்னும் தலைப்பில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் ஊடக […]

வீட்டுவசதி வாரியத்தால் நோட்டீஸ் கொடுக்கப்பட்ட நிலத்தை வாங்கியவர்களுக்கு, விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்; வீட்டுவசதி வாரியத்தால் நீண்ட நாட்களுக்கு முன் கையகப்படுத்த முயற்சி எடுக்கப்பட்டு அது முழுமையாக நிறைவேறாத சூழலில் அந்த நிலங்களை வாரியம் பயன்படுத்த முடியவில்லை. அதேநேரம் அதன் உரிமையாளர்களும் முழு உரிமை எடுக்க முடியவில்லை என்ற சூழல் இருந்தது. இது முதல்வர் முதல்வர் கவனத்துக்குச் சென்றதும், […]

மதுக் கடைகளில் இருந்து மட்டும் 22,000 கோடி ரூபாய்முறைகேடு செய்த ஊழல் பணம் மேலிடத்துக்கு சென்றுள்ளது என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் பயணத்தில் திருவண்ணாமலையில் பேசிய எடப்பாடி பழனிசாமி; தமிழகத்தில 6000 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த மதுக் கடைகளில் நாள் ஒன்றுக்கு 1.50 கோடி மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகமாக வைத்து விற்பனை செய்யப்படுகிறது. இதன்மூலம் […]