டிஎன்பிஎஸ்சி வினாத்தாளில் ஐயா வைகுண்டர் குறித்த பதிவுக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: கலியுகத்தை அழித்து உலகில் தர்மயுகத்தை ஸ்தாபிக்க அவதார மெடுத்த ஐயா வைகுண்டரை பற்றி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) ஆங்கிலக் கேள்வியில், ‘God of hair cutting’ என்று இழிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது கடும் கண்டனத்துக்குரியது. தென்தமிழகத்தில் லட்சக்கணக்கான மக்களால் போற்றப்படுபவரும், தெய்வீக நிலையை அடைந்தவருமான […]

தமிழ்நாட்டில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு தற்போதே தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் தொடங்கவுள்ள நிலையில், ஏற்கனவே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். மேலும், அதிமுக ஆட்சிக்கு வந்தால், என்னென்ன திட்டங்களை கொண்டு வருவோம் என்பது குறித்தும் அறிவிப்பு வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், மேலூர் பேருந்து நிலையத்தில் […]

தொடக்க பால் கூட்டுறவு சங்க ஊழியர்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் திமுக அரசு நடத்துவதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் தொடக்க பால் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரிந்து, ஓய்வு பெற்ற பணியாளர்கள் சுமார் 2,000 பேர் உள்ளனர். இவர்களுக்கு தமிழக அரசு ஓய்வூதியம் வழங்குவதில்லை. விவசாயிகளிடம் நேரடியாக பால் கொள்முதல் செய்யும் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்காமல், கொள்முதல் செய்த பாலை, […]

பத்திரப்பதிவு எங்கு நடந்தாலும் அமைச்சருக்கு 10 % கமிஷன் கொடுக்க வேண்டும். அதிமுக ஆட்சிக்கு வந்ததும் இந்த ஊழலை தோண்டி நடவடிக்கை எடுக்கப்படும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பிரச்சாரப் பயணத்தில் நேற்று மதுரை ஒத்தக்கடையில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி: அதிமுக ஆட்சியில் தான் அதிக போராட்டங்கள் நடைபெற்றது. அதற்கு அனுமதி வழங்கினோம். போராட்டங்களை சந்திக்கும் தில், […]

தனது தாயார் ஹீராபென்னை அவதூறாக பேசிய எதிர்க்கட்சிகளை பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை கடுமையாகக் கண்டித்தார். பிரதமர் மோடி உரையின் போது, ​​பீகார் பாஜக தலைவர் திலீப் ஜெய்ஸ்வால் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டு அழுத்ஹார்.. அவரின் இந்த செயல் சமூக வலைதளங்களில் விமர்சனங்களை தூண்டி உள்ளது.. பிரதமர் மோடி என்ன சொன்னார்? பீகாரில் உள்ள மகா கூட்டணியை பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக சாடினார். எதிர்க்கட்சித் தலைவர்கள் இப்போது தனது […]

பாமக நிறுவனர் ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் சில நாட்களுக்கு முன்பு ராமதாஸ் தனது 2வது மனைவி உடன் சுசீலாவுடன் இருக்கும் போட்டோ இணையத்தில் வெளியானது.. ராமதாஸ் உடன் பல ஆண்டுகளாகவே இணைத்து பேசப்பட்டவர் தான் சுசீலா. இவர் செவிலியர் என்று கூறப்படுகிறது.. இவர் பல ஆண்டுகளாக ராமதாஸை கவனித்துக் கொள்ளும் நர்சாக இருந்தார்.. அதாவது அன்புமணி […]

அதிமுக முன்னாள் அமைச்சரும், மூத்த தலைவருமான செங்கோட்டையன், ஈரோடு கோபிச்செட்டிபாளையம் அருகே தனது ஆதரவாளர்களுடன் செங்கோட்டையன் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ வரும் 5-ம் தேதி அன்று கோபிச்செட்டிப்பாளையம் கழக அலுவலகத்தில் நான் மனம் திறந்து பேசப் போகிறேன்.. அப்போது என்ன கருத்துகளை சொல்கிறேன் என்பதை தெரிந்து கொள்ளலாம்.. அதுவரை பொறுத்திருங்கள்..” என்று தெரிவித்தார். இதனால் அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் விலக இருப்பதாக தகவல்கள் […]