2024-ம் ஆண்டு நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 5,068 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்தன் மூலம் 1,02,061 நபர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறியுள்ளார். குறு, சிறு மற்றும் நடுத்தர துறையின் மூலம் 6 வகையான சுய வேலை வாய்ப்புத் திட்டங்கள் முதலீட்டு மானியம் உள்ளிட்ட 10 வகையான மானியத் திட்டங்கள், உலக முதலீட்டார் மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குறித்து மாவட்டம் வாரியாக அமைச்சர் அவர்கள் […]

விஞ்ஞான முறையில் ஊழலுக்கு வித்திடும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள திட்டத்தை மறு ஆய்வு செய்து புதிய கோயமுத்தூர் மாஸ்டர் பிளான் 2041-ஐ வெளியிட வேண்டும்” என அரசுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக அரசு அண்மையில் அறிவித்துள்ள கோயம்புத்தூர் மாஸ்டர் பிளான் 2041-ல் நிலப் பரப்புகளை வேறு வகைப்பாட்டுக்கு மாற்ற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இது கோவை மக்களிடையே பரபரப்பையும், அதிர்ச்சியையும் […]

தவெக மாநாட்டில் தூக்கி வீசப்பட்ட சரத்குமார், விஜய் பவுன்சர்கள் மீது காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார் பெரம்பலூர் மாவட்டம் பெரியம்மாபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சரத்குமார்.. இவர் கடந்த 21-ம் தேதி மதுரையில் நடந்த தவெகவின் 2-வது மாநில மாநாட்டில் பங்கேற்றார்.. இந்த மாநாட்டில் விஜய்யை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில், விஜய் ரேம்ப் வாக் செய்த போது அந்த மேடையில் எகிறி குதித்து உள்ளே செல்ல முயன்றார்.. ஆனால் விஜய் உடன் […]

அமித்ஷா ஆலோசனைப்படி, பாஜக போட்டியிட விரும்பும் 16 தொகுதிகளை அதிமுகவிடம் பாஜக கொடுத்துள்ளது. நெல்லையில் நேற்று பாஜகவின் பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது.. மத்திய உள்துறை அமித்ஷா இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்.. அப்போது பேசிய அவர் 2026 தேர்தல் தமிழ்நாட்டில் அதிமுக – பாஜக கூட்டணி ஆட்சி தான் அமையும் என்று கூறினார். மேலும் ராகுல்காந்தி ஒரு நாளும் பிரதமராக முடியாது எனவும், உதயநிதி ஸ்டாலின் எப்போது முதல்வராக […]

காலையுணவின் தரத்தை உயர்த்தாது திட்டத்தை மட்டும் விரிவுபடுத்துவது பெரிதாக பலனளிக்காது! என்று தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் முதல்வரின் காலை உணவு திட்டத்தை நாட்டிலேயே முதல்முறையாக, மதுரை ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2022 செப்டம்பர் 15-ம் தேதி தொடங்கி வைத்தார். மாணவர்கள், பெற்றோரிடம் இந்த திட்டம் பெரும் வரவேற்பை பெற்றதை தொடர்ந்து […]

விஜய் இன்னும் 2, 3 மாநாடு நடத்தினாலே அவர் பெருங்காய டப்பா போல் காலி டப்பா ஆகி விடுவார் என்று அமைச்சர் சேகர் பாபு விமர்சித்துள்ளார். அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது தவெக மாநாட்டில் விஜய் பேசியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.. அதற்கு பதிலளித்த அமைச்சர் “ விஜய் இப்போது 2 மாநாடுகளை நடத்தி முடித்திருக்கிறார்.. இப்போதே நரியின் சாயம் வெளுத்துப் […]

பாமக நிறுவனர் ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.. இருவருக்கும் இடையேயான மோதலை முடிவுக்கு கொண்டு வர பாமக நிர்வாகிகள் சார்பில் பல சமசர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.. ஆனால் இந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது.. ஆனால், என் மூச்சிருக்கும் வரை நான் தான் தலைவர் என்று திட்டவட்டமாக ராமதாஸ் கூறி வருகிறார்.. மேலும் அன்புமணி மீது ராமதாஸ் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை […]

காதலர்களுக்காக எங்கள் கட்சி அலவலகங்கள் திறந்தே இருக்கும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ. சண்முகம் தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து பேசிய போது “ தமிழகத்தில் சாதி மறுப்பு திருமணங்கள் தனி ஏற்பாடு இல்லை.. எனவே தமிழ்நாடு முழுவதும் இருக்கக்கூடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட குழு அலுவலகமாக இருந்தாலும் சரி, இடை கமிட்டி அலுவலகமாக இருந்தாலும் சரி, சாதி மறுப்பு திருமணங்களை நடத்திக் கொள்வதற்கான இடமாக யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக் […]