பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் இன்று 13 வார்டுகளில் நடைபெறவுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் இன்று திருவொற்றியூர் மண்டலம் (மண்டலம்–1), வார்டு-14ல் திருவொற்றியூர் நெடுங்சாலை, சி.எஸ்.ஐ. தேவாலயத்திற்கு அருகிலுள்ள திறந்தவெளி மைதானத்தில் நடைபெற உள்ளது. மாதவரம் மண்டலம் (மண்டலம்–3), வார்டு-32ல் சூரப்பட்டு, சண்முகபுரத்தில் உள்ள சமூதாய நலக்கூடம். தண்டையார்பேட்டை மண்டலம் (மண்டலம்–4), வார்டு-44ல் பெரம்பூர், துளசிங்கம் தெருவில் […]

அ​தி​முக வாக்​குச்​சாவடி கிளை நிர்வாகிகளை தேர்​தல் பணி​யில் ஈடுபடுத்த மாவட்​ட​வாரி​யாக பொறுப்பாளர்​கள் நியமனம் செய்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் 2026 சட்டப் பேரவை தேர்தலில், அதிமுக அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும்வகையில், சட்டப்பேரவை தொகுதிகளுக்கு உட்பட்ட ஒன்றிய, நகர, பேரூராட்சி மற்றும் மாநகராட்சிப் பகுதிகளில், வாக்குச்சாவடி (பாகம்) கிளைகள் முழுமையாக அமைக்கப்பட்டுள்ளன. இதன் நிர்வாகிகள் […]

ஒரே நாளில், முதல்வர் அறையிலேயே முடித்திருக்கக் கூடிய காரியத்திற்கு பத்து நாள் ஐரோப்பிய பயணம் எதற்கு..? என பாஜக மாநில தலைவர் கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில்; ஜெர்மனி நாட்டுக்குச் சுற்றுலா சென்றிருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள், கொலோன் பல்கலைக்கழக தமிழ்த் துறை நூலகத்தைப் பார்வையிட்டதாகத் தெரிவித்துள்ளார். இந்தப் பல்கலைக்கழக தமிழ்த் துறை, கடந்த ஆண்டு அக்டோபர் […]

தூய்மைப் பணியாளர்களின் மாத ஊதியத்தில் மோசடி செய்வதை மன்னிக்க முடியாது என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னையில் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்ட ராயபுரம், திருவிக நகர் மண்டலங்களில் தூய்மைப் பணி செய்வதற்காக மாதம் ரூ.23,000 ஊதியம் தருவதாக வாக்குறுதி அளித்து, தூய்மைப் பணியாளர்களை மாநகராட்சி அதிகாரிகளும், திமுக மாநாகராட்சி மன்ற உறுப்பினர்களும் அழைத்துச் சென்று தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ய வைத்த நிலையில், […]

திமுக ஆட்சியில் ஊழல்கள் நடந்துள்ளது. அதிமுக ஆட்சி அமைந்ததும் முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பிரச்சாரப் பயணத்தின் நான்காம் கட்டத்தின் முதல் நாளான நேற்று திருப்பரங்குன்றத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி; “மதுரை மாநகராட்சியில் 200 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. குடிநீர் வரி, கடை வரி, குப்பை வரியிலும் முறைகேடு செய்திருக்கிறார்கள். இதை நாம் சொல்லவில்லை. அரசு நடத்திய […]

தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதகற்காக அரசு முறை பயணமாக முதல்வர் ஸ்டாலின், ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு சென்றுள்ளார்.. அவருக்கு ஜெர்மனி வாழ் தமிழர்களும், இந்திய தூதரக அலுவலர்களும் உற்சாகமாக வரவேற்றனர்.. ஜெர்மனி நாட்டின் கொலோன் நகரில் நேற்று நடந்த தமிழ் கனவு – ஜெர்மனி வாழ் தமிழர்கள் நிகழ்ச்சியில் முதலமைச்சர் கலந்து கொண்டு உரையாற்றினார்.. இன்று கொலோன் பல்கலைக்கழக தமிழ்த்துறை நூலகத்தை பார்வையிட்டார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் முதலமைச்சர் […]

கடந்த ஜூன் மாதம் தமிழ்நாடு அரசு தேர்வு பணியாளர் ஆணையமான டிஎன்பிஎஸ்சி (TNPSC) ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வு அறிவிப்பை வெளியிட்டது.. 1910 காலியிடங்களுக்கு சுமார் 76000 பேர் விண்ணப்பித்திருந்தனர்.. நேற்று இந்த பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி தாள் 1 நடைபெற்றது.. சுமார் 51,000 பேர் இந்த தேர்வை எழுதினர்.. இந்த நிலையில் இந்த தேர்தலில் தவறான மொழிபெயர்ப்பு இடம்பெற்றிருப்பதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து […]