கிருஷ்ணகிரியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்க கழுத்தில் பாஜக துண்டு அணிந்து பள்ளி மாணவர்கள் நிற்க வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தலையொட்டி ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சார சுற்றுப்பயணத்தை மேட்டுப்பாளையத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கடந்த 7-ம் தேதி தொடங்கினார். இந்நிலையில், 2-ம் கட்ட சுற்றுப்பயண அட்டவணை படி, ஜூலை 27 தொடங்கி இரண்டாம் கட்ட பயணம் […]

ராகுல்காந்தி கைதை கண்டித்து விஜய் அறிக்கை வெளியிட்ட நிலையில், விஜய்யை நெட்டிசன்கள் கடுமையாக ட்ரோல் செய்து வருகின்றனர் பாஜக உடன் இணைந்து தேர்தல் ஆணையம் வாக்கு திருட்டில் ஈடுபட்டதாக எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார். கடந்த மக்களவை தேர்தலில் 1 லட்சம் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.. தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இன்று நாடாளுமன்றத்தில் இருந்து தேர்தல் ஆணையம் நோக்கி […]

2024 மக்களவை தேர்தலில் சுமார் ஒரு லட்சம் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து வாக்கு திருட்டில் ஈடுபட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சி தலைவர் மிகப்பெரிய குற்றச்சாட்டை முன்வைத்தார்.. எனினும் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளை இந்திய தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. எனினும் எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்தை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகின்றன.. இந்த நிலையில் தேர்தல் ஆணையத்தை பாஜக தனது தேர்தல் மோசடி இயந்திரமாக மாற்றிவிட்டது என […]

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நடைபெற்ற அரசு நலத்திட்ட விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டார்.. அப்போது ரூ.1,427 கோடி மதிப்பிலான நலத்திட்ட பணிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.. இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய ஸ்டாலின் திருப்பூர் மாவட்டத்திற்கு செய்யப்பட்ட நலத்திட்டங்களை பட்டியலிட்டார்.. மேலும் பரம்பிக்குளம் ஆழியார் பாசன வாய்க்கால்கள் தூர்வாரும் பணி, மாவட்ட மைய நூலகம், ஊத்துக்குளியில் புதிய வெண்ணெய் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளிட்ட புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.. […]

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக புதிதாக கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளைப் பிரதமர் இன்று திறந்து வைக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக புதிதாக கட்டப்பட்ட 184 குடியிருப்புகளைக் கொண்ட வகை-VII பல மாடி அடுக்குமாடி குடியிருப்பை, புது தில்லியில் உள்ள பாபா கரக் சிங் (பி.கே.எஸ்) மார்க்கில், இன்று திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியின்போது, பிரதமர் குடியிருப்பு வளாகத்தில் ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை நினைவு கூரும் வகையில் மரக்கன்று ஒன்றை நடவுள்ளார். […]