புதுச்சேரி அரசு மருத்துவமனையில் தேசிய மருத்துவர் தின விழா இன்று கொண்டாடப்பட்டது. இதில் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்று சிறப்புரையாற்றினார். இதில், சுகாதாரத்துறை செயலர் உதயகுமார், இயக்குனர் ஸ்ரீராமுலு ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர், இந்நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், “மருத்துவர்களுக்கு வேலை நேரத்தை நிர்ணயிக்க வேண்டும். காரணம் தொடர்ச்சியாக 36 மணி நேரம் பணியாற்ற வேண்டியுள்ளது. சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்திருந்தால் நான் டாக்டராகவே இருந்திருப்பேன். கோடி […]

மேகதாது அணை விவகாரம் குறித்து அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக விவாதம் செய்ய உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேகதாது அணை விவகாரம் குறித்து தமிழக அரசு இரட்டை வேடம் போடுவதாக கர்நாடக நீர் பாசனத்துறை அமைச்சர் டி.கே சிவகுமார் குற்றம் சாட்டி இருப்பது அதிர்ச்சி அளிக்கும் விதமாக […]

பரியேறும் பெருமாள், கர்ணன் என அடுத்தடுத்து ஹிட் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ், உதயநிதியை கதாநாயகனாக வைத்து இயக்கி, ஹர்டிக் வெற்றியை திரையுலகில் பதிவு செய்துள்ளார். இதுவரை நடித்திராத கதாபாத்திரத்தில் அனைவரும் சமம் என்கிற கொள்கைக்கு போராடும் துடிப்பான இளைஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் உதயநிதி. உதயநிதிக்கு தந்தையாக வடிவேலுவும், வில்லனாக ஃபகத் பாசிலும், நாயகியாக கீர்த்தி சுரேஷும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரித்துள்ளது. இப்படம் […]

தமிழ்நாட்டில் பொதுவாக சனாதனம் பற்றி திமுகவும், அதன் கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தான் அதிகம் பேசுவது வழக்கம். இன்னும் சொல்லப்போனால் திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட தமிழகத்தைச் சார்ந்த பல கட்சிகள் இந்த சனாதனத்தை வைத்து தான் அரசியல் செய்து வருகிறார்கள் என்பதில் யாருக்கும் எந்தவித மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. அப்படி இருக்கும்போது தமிழக ஆளுநர் ஆரியன் ரவி சனாதன தர்மத்திற்கு ஆதரவாக சமீப […]

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் தயாரித்து, அவரே கதாநாயகனாக நடித்து வெளியான திரைப்படத்தின் உண்மையான மாமன்னன் முன்னாள் சபாநாயகர் தனபால் தான் என்று சமூக வலைதளங்களில் பலரும் பதிவிட்டு வருகிறார்கள். இந்த நிலையில் தான் இது தொடர் உரையாற்றியுள்ள முன்னாள் சபாநாயகர் தனபால், மாமன்னன் திரைப்படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. என்னுடைய உழைப்பிற்கு அமைப்பு செயலாளர், அமைச்சர் மற்றும் சபாநாயகர் என்று பல்வேறு பொறுப்புகளை வழங்கினார் ஜெயலலிதா […]

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில் கோவில்பட்டி அருகே தீப்பெட்டி ஆலை பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் மாரியம்மாள் என்ற பெண் உயிரிழந்த செய்தியை கேட்டு வேதம் அடைந்தேன் என்று குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் அவரது குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல் என்று குறிப்பிட்டதோடு, அவரது குடும்பத்திற்கு 3️ லட்சம் ரூபாயும், காயமடைந்த கனக ராஜேஸ்வரி என்ற பெண்ணுக்கு 50,000 ரூபாய் நிவாரணம் வழங்கவும் உத்தரவு பிறப்பித்து […]

தமிழக அரசு மாணவர்களின் நலனை கருத்தில் வைத்து அவர்களுக்கான பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. அதன் காரணமாக, மாணவர்கள் மிகுந்த பயனடைந்து வருகிறார்கள்இந்த நிலையில் தான் தமிழக அரசு பணியிடங்களில் முதல் பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்கும் விதத்தில், ஒரு சூப்பர் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. நோய் தொற்று காரணமாக, பெற்றோரை இழந்த மாணவர்கள் மற்றும் படித்த இளைஞர்களுக்கும் அரசு பள்ளிகளில் தமிழ் மொழியில் படித்தவர்களுக்கும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கும் விதத்தில், […]

மாநிலப் பேரிடர் மீட்பு நிதியாக ரூ.6,194.40 கோடியை தமிழகம் உள்ளிட்ட 19 மாநிலங்களுக்கு வழங்க மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித் ஷா ஒப்புதல் அளித்துள்ளார். இதில் தமிழ்நாடு, ஆந்திரா, அருணாச்சலப்பிரதேசம், அசாம், பீகார், கோவா, ஹரியானா, இமாச்சலப்பிரதேசம், கேரளா, மகாராஷ்டிரா, மணிப்பூர், மேகாலயா, ஒடிசா, பஞ்சாப், திரிபுரா ஆகிய 15 மாநிலங்களுக்கு 2023-24 நிதியாண்டுக்கான மாநிலப் பேரிடர் மீட்பு நிதியாக ரூ.4,984.80 கோடியை வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. […]

தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்த உத்தரவை ஆளுநர் நிறுத்தி வைத்திருப்பதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். இது குறித்து முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஆளுநர் வழங்கியிருக்கின்ற கடிதத்தில் செந்தில் பாலாஜியின் பதவி நீக்க உத்தரவை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக கூறியிருக்கிறார். அதாவது மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் பேரில் இந்த உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்திருக்கிறார் ஆளுநர். அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்க ஆளுநருக்கு அதிகாரம் […]

பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி நெஞ்சுவலி ஏற்பட்டதால் முதலில் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைகள் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அதன் பிறகு அறுவை சிகிச்சைக்காக காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவருக்கு பைபாஸ் சிகிச்சை செய்யப்பட்டு தற்போது தொடர் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு நடுவே அவர் அமலாக்கத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் தான் மருத்துவமனையில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான உத்தரவை சென்னை மாவட்ட […]