தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக்கில் எம்ஆர்பியை விட கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில், அமைச்சர் முத்துசாமி எச்சரிக்கையோடு அதிரடியாக வாய்மொழி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, தற்போது அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் உள்ளார். இதையடுத்து அவரிடம் இருந்த துறைகள் மற்றவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்படி மின்சாரத்துறை […]

பெட்ரோல், டீசல் விலையை குறைப்பது தொடர்பாக மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்து வருகின்றன. அதன்படி, சென்னையில், 401-வது நாளாக இன்று பெட்ரோல், டீசல் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. ஆண்டுக்கும் மேலாக பெட்ரோல் லிட்டருக்கு […]

கோவை காந்திபுரம் – சோமனூர் வழித்தடத்தில் ஓடும் தனியார் பேருந்து ஓட்டுநராக ஷர்மிளா என்பவர் பணியாற்றி வந்தார். கோவையில் பயணிகள் பேருந்தை இயக்கும் முதல் பெண் ஓட்டுநர் என்ற பெருமையையும் ஷர்மிளா பெற்றுள்ளார். தொடர்ந்து, அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் ஷர்மிளா பணியில் இருக்கும் போதே அங்கு சென்று அவருக்கு பாராட்டுக்களை தெரிவித்து வந்தனர். இதற்கிடையே, பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக கோவை வந்த நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, ஷர்மிளா […]

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் விரைவில் மாற்றப்படலாம் என கூறப்படும் நிலையில், கே.எஸ்.அழகிரி டெல்லியில் முகாமிட்டுள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.எஸ். அழகிரி 2019 ஆம் ஆண்டு பொறுப்பேற்றார். அவரது தலைமையின் கீழ் நாடாளுமன்ற தேர்தலில் 8 இடங்களிலும், சட்டமன்ற தேர்தலில் 18 இடங்களிலும் அக்கட்சி வெற்றி பெற்றது. அவர் நியமிக்கப்பட்டு 5 ஆண்டுகள் ஆகவுள்ள நிலையில், புதிய தலைவர் நியமிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. புதிய தலைவர் […]

கடந்த 2011ம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரையில் அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி சட்ட விரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாகவும் பலரிடம் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பணம் வாங்கி மோசடி செய்ததாகவும் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை பொறுத்தவரையில் தற்போது திமுகவில் செந்தில் பாலாஜி இணைந்து அமைச்சராக பொறுப்பேற்று நிலையில் அவர் மீது வழக்கு […]

தமிழ்நாட்டில் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின்னர் அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் 1000 ரூபாய் உதவி தொகை வழங்கப்படும் என்று தன்னுடைய தேர்தல் அறிக்கையிலேயே திமுக தலைமை தெரிவித்திருந்தது. இதனை தொடர்ந்து, திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னரும் அது குறித்த அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாமல் இருந்தது. இந்த நிலையில் தான் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை கூட்டத் தொடரில் வரும் செப்டம்பர் மாதம் முதல் குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 […]

தமிழ்நாட்டில் இலாக்கா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நியமனம் செய்யப்பட்டதை எதிற்கும் விதமாக, அதிமுக தரப்பில் தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர இருக்கிறது. சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியை கைது செய்தது. அதன் பிறகு அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் அரசு ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அதன் பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் காவிரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு பைபாஸ் அறுவை […]

ஆளுநரின் ஒப்புதலுக்காக 13 மசோதாக்கள் காத்திருக்கும் பட்டியலில் உள்ளது என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தெரிய வந்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில்‌ நிறைவேற்றப்பட்ட இரண்டு மசோதாக்கள்‌ உட்பட 13 மசோதாக்கள்‌ ஆளுநர்‌ ஆர்‌.என்‌.ரவியின்‌ ஒப்புதலுக்காக காத்திருப்பு பட்டியலில் உள்ளது. தமிழ்நாடு மீன்வள பல்கலைக்‌கழக மசோதா, தமிழ்நாடு கால்நடை சட்டத்திருத்த மசோதா உள்ளிட்டவை நிலுவையில்‌ உள்ளன. அதேபோல பன்வாரிலால்‌ புரோகித்‌ ஆளுநராக இருந்தபோது, கடந்த 2020 ஜனவரியில்‌ அனுப்பிய 2 […]

அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவின் பேச்சு குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சனம் செய்துள்ளார். இந்தியாவில் சிறுபான்மை இன மக்களின் நிலை குறித்து அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா கூறிய கருத்துக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவிற்கு மூன்று நாள் பயணத்தை முடித்துக் கொண்டு தற்பொழுது எகிப்து நாட்டிற்கு அரசு முறை பயணத்தை மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில் […]

விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்க கடமைப்பட்டுள்ளேன். எடப்பாடி பழனிசாமியே எதிர்காலத்தில் பிரதமராக தகுதியுள்ளவர் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தார். மதுரை துவரிமான் பகுதியில் சமுதாயகூடத்திற்கு மேற்கூரை அமைப்பதற்கு பூமி பூஜை போடும் நிகழ்வில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பங்கேற்றார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பாட்னாவில் நடைபெற்ற எதிர்கட்சிக் கூட்டத்தால் பிரயோஜனம் இல்லை. உப்புக்கு சப்பாக தான் அந்த கூட்டம் நடைபெற்றுள்ளது. அந்த […]