தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் அமைந்துள்ள கே.வி.ரங்கா ரெட்டி மகளிர் கல்லூரியில் தேர்வு எழுதுவதற்காக மாணவிகள் வந்தனர். அப்போது புர்கா அணிந்து வந்த மாணவிகளை கல்லூரி நிர்வாகம் தேர்வெழுத அனுமதிக்கவில்லை. மாணவிகள் தேர்வு தொடங்கி அரை மணிநேரம் காத்திருந்த நிலையில் புர்காவை அகற்றிய பின்னரே தேர்வு எழுதுவதற்கு உள்ளே அனுமதிக்கப்பட்டனர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், கே.வி.ரங்கா ரெட்டி மகளிர் கல்லூரியில் புர்கா அணிந்து வந்த […]
அரசியல்
political news | Get all the latest news and updates on Tamil Nadu, National and International Politics news only on 1newsnation.com. Read all news including political news, current affairs and news headlines and more…
பாஜகவுக்கு இந்த நாட்டுக்கான தியாக வரலாறு கிடையாது. மாறாக, சாவர்க்கர் உள்ளிட்டவர்களின் துரோக வரலாறு இருக்கிறது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”இந்திய விடுதலைப் போராட்டத்தில் கடுகளவு பங்கும் வகிக்காமல் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு வெண்சாமரம் வீசி, ஆதரவாக செயல்பட்ட ஆர்.எஸ்.எஸ்., ஜனசங்கம், பாஜக. பரிவாரங்கள் நீண்டகாலமாக மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு உள்ளிட்ட அப்பழுக்கற்ற தலைவர்களின் புகழை சிதைக்கிற வகையில் […]
தமிழக அரசியலில் வெற்றி, தோல்விகளை நிர்ணயம் செய்யக்கூடிய அனைத்து தரப்புகளையும் குறிவைத்து, விஜய் பேசியிருப்பது பொதுமக்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தொகுதி வாரியாக, முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் விருதுகள் வழங்கப்பட்டன. முக்கியத்துவம் வாய்ந்த கல்விக்கு, எனது தரப்பில் இருந்து ஏதாவது செய்ய வேண்டும் என எனது மனதில் நீண்டகாலமாக ஓடிக்கொண்டு இருந்தது. அதுக்கான நேரம் தான் […]
பண மோசடி வழக்கில் அமலாக்க துறையால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக, அவர் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் ஆகவே அவருடைய இலாக மாற்றம் விவகாரம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்தனர். இந்த நிலையில், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, முத்துசாமி ஆகியோருக்கு செந்தில் பாலாஜியின் இலாக்காக்கள் மாற்றம் செய்யப்பட்டதை ஆளுனர் ஏற்றுக்கொண்டார். ஆனால் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர மறுப்பு […]
அமலாக்கத்துறை காவல் செந்தில் பாலாஜியிடம் கையெழுத்து வாங்கிய நீதிமன்ற ஊழியர்கள். அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் 8 நாள் போலீஸ்காவில் எடுத்ததற்கான ஒப்புதல் வாக்குமூலத்தில் கையெழுத்திட்டார் அமைச்சர் செந்தில் பாலாஜி. அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று சுயநினைவில் இல்லாததால் அவரிடம் கையெழுத்து வாங்க முடியாமல் போன நிலையில், இன்று அவர் சுயநினைவோடு இருப்பதால் அவரிடம் நீதிமன்ற ஊழியர்கள் அமலாக்க துறையின் கட்டுப்பாட்டில் செந்தில் பாலாஜி இருக்கிறார் என்பதற்கான ஒப்புதலில் அவரிடம் […]
வடக்கு அரபிக் கடல் பகுதியில் கடந்த 10 நாட்களாக மையம் கொண்டிருந்த அதிதீவிர புயலான பிபர்ஜாய் கடந்த வியாழக்கிழமை மாலை 6.30 மணி அளவில் குஜராத் மாநிலத்தின் கட்ச், சவுராஷ்டிரா இடையே கரையை கடந்தது. பல்வேறு பகுதிகளில் கட்டிடங்களின் மேல் கூரைகள் மற்றும் சாலைகள் உள்ளிட்டவை மிகுந்த பாதிப்பை சந்தித்துள்ளனர். இந்த புயலுக்கு இரண்டு பேர் பலியாகி இருக்கிறார்கள் 22 பேர் படுகாயம் அடைந்திருக்கிறார்கள். 23க்கும் மேற்பட்ட கால்நடைகள் பலியாக […]
தமிழகத்தில் மொத்தம் 234 தொகுதிகள் இருக்கின்றன இந்த தொகுதிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் உடன் ஊக்கத் தொகையையும் வழங்கும் கல்வி விருது விழா சென்னை நீலாங்கரையில் ஆர்கே கன்வென்ஷன் மையத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் நடிகர் விஜய் தமிழகத்தில் முதல் மற்றும் 600 க்கு 600 என முழுமையான மதிப்பெண் பெற்ற […]
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு தொகுதிக்கு உட்பட்ட கருக்கங்குடி வளத்தாமங்கலம் பகுதியை இணைத்து பேருந்து சேவையை தொடங்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். மக்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக காரைக்கால் முதல் கும்பகோணம் வரையில் செல்லும் தமிழக அரச பேருந்து சுரக்குடி, கருக்கங்குடி, வளத்தாமங்கலம் பகுதிகளை இணைக்கும் வழியாக பேருந்து சேவை தொடங்கப்பட்டது.இதனை தொடர்ந்து அந்த பேருந்து […]
தமிழக பாஜகவின் மாநில செயலாளராக இருப்பவர் எஸ் ஜி சூர்யா. மாநிலத் தலைவர் அண்ணாமலையுடன் இவர் மிகவும் நெருக்கமாக இருப்பவர் என்று கூறப்படுகிறது ட்விட்டர் சமூக வலைதளத்தில் மிகவும் தீவிரமாக செயல்படும் இவர், திமுக வெளியிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்பாக தொடர்ந்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் ட்விட்டரில் இவர் மதுரை எம்பி வெங்கடேசன் தொடர்பாக பதிவிட்டிருந்தார். அந்த பதிவில் கம்யூனிஸ்ட் கவுன்சிலரால் தூய்மை பணியாளரின் […]
இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. போக்குவரத்து துறையில் வேலைவாங்கித் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட வழக்கில் அமைச்சர் செந்தில்பாலாஜியை 23-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த நிலையில் தமிழக முதல்வரின் பரிந்துரையின் அடிப்படையில், தமிழக ஆளுநர், செந்தில் பாலாஜி வசம் இருந்த மின்சாரம் […]