தமிழக பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கைது செய்யப்பட்டுள்ளார். தமிழக பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கைது செய்யப்பட்டுள்ளார். அவதூறு வழக்கில் தமிழக பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர். காவல் ஆணையர் அலுவலகம் முன்பு பாஜகவினர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பாஜகவினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் ‌‌‌. இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

போக்குவரத்து துறையில் வேலைவாங்கித் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட வழக்கில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் சென்னை வீடு உள்பட பல இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்த நிலையில் விசாரணைக்காக அமைச்சர் செந்தில் பாலாஜியை அதிகாரிகள் கைது செய்தனர். ஆனால் அவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது. தற்பொழுது நெஞ்சுவலி காரணமாக செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் […]

முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் அதிகாரத்தில் யாரும் தலையிட முடியாது என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த சபாநாயகர் அப்பாவு கூறியதாவது: “இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி தனது அமைச்சரவைக்கு யார், யாருக்கு எந்த, எந்தத் துறை ஒதுக்க வேண்டும் என முடிவெடுக்கும் அதிகாரம் தமிழக முதல்வருக்குத்தான் உள்ளது. ஆனால் முதல்வரின் பரிந்துரையை ஆளுநர் திருப்பி அனுப்பியது வேதனையாகவே உள்ளது. அந்த செயலை ஆளுநர் தவிர்த்திருக்க வேண்டும். […]

கடந்த செவ்வாய்க்கிழமை தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை மேற்கொண்டது. இந்த சோதனை முடிவில் நடந்த புதன்கிழமை அதிகாலை செந்தில் பாலாஜி அமலாக்க துறையினரால் கைது செய்யப்பட்டார். பின்னர் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், அவர் தற்போது ஆழ்வார்பேட்டையில் உள்ள காவிரி […]

அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று தெரிவித்து வரும் 21ஆம் தேதி அதிமுக சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அந்த கட்சியின் தலைமை தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை அதிமுகவின் பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ளார். அதோடு அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம், சட்டம் ஒழுங்கு பிரச்சனை உள்ளிட்டவற்றை கண்டித்தும் அன்றைய தினம் ஆர்ப்பாட்டம் நடைபெறும் […]

கடந்த அதிமுக ஆட்சியின் போது போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்டதாக தற்போதைய திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். உடல்நலக்குறைவால் ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த செந்தில் பாலாஜி, தற்போது காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். விரைவில் அவருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட இருக்கிறது. இந்நிலையில், செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்ததற்கு நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பாஜக அரசு […]

முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் அரசின் முன்னறிவிப்பு திட்டங்களான முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் தொடர்பாக ஏற்கனவே 3 முறை ஆலோசிக்கப்பட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை புதிய திட்டங்களின் தொடக்கம் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசனை நடைபெறுகிறது. மேலும் பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை உள்ளிட்ட துறைகளைச் சார்ந்த அமைச்சர்கள், அதிகாரிகள் […]

அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த புதன்கிழமை அதிகாலை சட்ட விரோத பண பரிவர்த்தனை செய்த வழக்கில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து அதற்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் அமைச்சர் செந்தில் பாலாஜியை வரும் 28ஆம் தேதி வரையில் நீதிமன்றக் காதலில் வைக்க உத்தரவு பிறப்பித்தது. இந்த நிலையில் தான் அமலாக்கத்துறை சார்பாக அமைச்சர் செந்தில் பாலாஜியை […]

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிராத பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த புதன்கிழமை கைதுசெய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதயத்தின் ரத்த நாளங்களில் மூன்று அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. அதோடு ஓமந்தூரார் மருத்துவமனை மருத்துவர்கள் பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்தனர். இதனைத் தொடர்ந்து, அமைச்சர் செந்தில் பாலாஜியை காவிரி மருத்துவமனையில் அனுமதித்து அறுவை சிகிச்சை செய்ய […]

ஓமந்தூரார் மருத்துவமனையில் தான் சிகிச்சை பெற வேண்டும் என செந்தில் பாலாஜி விருப்பம் தெரிவித்தார் என்றும் ஆனால், அவரது மனைவி காவேரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க விரும்பியதால் இங்கே அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். செந்தில் பாலாஜி ஓமந்தூராரில் இருந்து காவேரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவருக்கு விரைவாக பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என ஓமந்தூரார் மருத்துவமனை மருத்துவர்கள் குழுவும், இஎஸ்ஐ மருத்துவர்கள் குழுவும் பரிந்துரைத்திருந்தது. […]