மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்தித்து விவரங்களைக் கேட்டறிந்த மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன், செய்தியாளர்களிடம் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். அமலாக்கத் துறையினர் செவ்வாய்க்கிழமை நடத்திய சோதனையை அடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அவர் வரும் 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கிடையே, அமலாக்கத்துறை சோதனையின் போது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்படவே அவர் […]

தமிழக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்ட விரோத பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று அதிகாலை கைது செய்தனர். இதற்கு நடுவே அவருக்கு நெஞ்சு வலி உண்டானதால் சென்னை ஓமந்தூரார் அரசு பல்லாக்கு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதனை அடுத்து மருத்துவமனை வளாகத்தில் 100க்கும் மேற்பட்ட துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டு செந்தில் பாலாஜிக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டது. மேலும் செந்தில் பாலாஜியை நேற்று பரிசோதனை செய்த மருத்துவர்கள் இதயத்தில் […]

தமிழக மின் துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்டவிரோத பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று அதிகாலை கைது செய்தனர். இதனை தொடர்ந்து, அவருக்கு அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லும் வழியில் அவருக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டதால் சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கே பரிசோதனை செய்யப்பட்டதில் இதயத்தின் அடைப்பு இருப்பதாகவும் உடனடியாக பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் […]

அதிமுக ஆட்சிக்காலத்தின் போது போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி வேலை வாங்கித் தருவதற்காக பணம் வாங்கியதாக புகார் இருந்தது. உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இது குறித்து விசாரணை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜி தொடர்புடைய பகுதிகளில் கடந்த செவ்வாய்க்கிழமை காலை முதல் சோதனை நடத்தி வந்தனர். அதிலும் குறிப்பாக சென்னையில் உள்ள செந்தில் பாலாஜியின் வீடு, தலைமைச் செயலகம் போன்ற பகுதிகளிலும் சோதனை நடந்தது. இதனைத் […]

நேற்று முன்தினம் இரவு அமலாக்கத்துறை சோதனைக்கு பிறகு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நள்ளிரவில் கைது செய்யப்படுவதற்கான வாரன்டை அவரிடம் வழங்கினர் ஆனால் அதை அவர் வாங்க மறுத்து விட்டார். பின்னர் அவரை கைது செய்து நுங்கம்பாக்கம் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து வரும் வழியில் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்து இருந்தார்கள். இந்த நிலையில் அவருக்கு உடனடியாக ஜாமீன் வழங்க வேண்டும் என்று தெரிவித்து […]

அடுத்த ஆண்டு நடைபெறும் லோக்சபா தேர்தலில் பாஜகவின் சீனியர் ராஜ்யசபா எம்பிக்கள் மற்றும் மத்திய அமைச்சர்களாக இருக்கும் பலரும் போட்டியிட தயாராகி வருகின்றனராம். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டில் போட்டியிடுவது குறித்து ஆலோசித்து வருகிறார் என்கின்றன சில ஊடக செய்திகள். பாஜகவில் மிகவும் சீனியர்களாக இருந்து அரசியலில் தொடருவது என்பது தலைக்கு மேலே தொங்குகிற கத்தியைப் போலதான். பாஜக எனும் கட்சியை நிறுவியவர்களில் ஒருவரான அத்வானியே, அக்கட்சியின் […]

பெங்களூருவில் உள்ள கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டிகே சிவகுமார், கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஆகியோர் மீது பாஜக அவதூறு புகார் அளித்துள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் மற்றும் சிட்டிங் எம்.பி.க்கள்/எம்.எல்.ஏக்கள் தொடர்பான கிரிமினல் வழக்குகளை கையாள்வதற்காக பிரத்யேகமான சிறப்பு நீதிமன்றம், இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 499 மற்றும் 500 ஆகியவற்றின் கீழ் குற்றங்களை […]

தமிழகத்தில் விசாரணை நடத்த சிபிஐக்கு வழங்கப்பட்டு இருந்த முன் அனுமதியை தமிழக அரசு திரும்ப பெற்றுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் மத்திய புலனாய்வுத் துறை எந்த ஒரு மாநிலத்தில் விசாரணை மேற்கொள்வதாக இருந்தாலும், அந்தந்த மாநில அரசின் முன் அனுமதியைப் பெறவேண்டும் என டெல்லி சிறப்புக் காவல் அமைப்புச் சட்டம் 1946, (Delhi Special Police Establishment Act, 1946 Central Act XXV […]

அமைச்சர் செந்தில் பாலாஜியை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிகோரிய வழக்கில் இன்று தீர்ப்பு. போக்குவரத்து துறையில் வேலைவாங்கித் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட வழக்கில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் சென்னை வீடு உள்பட இடங்களில் நேற்று காலை முதல் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் 20 மணி நேர விசாரணைக்குப் பிறகு நேற்று நள்ளிரவு அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை […]

அமலாக்கத்துறை பிடியில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இதுபோன்ற பாதிப்பு ஏற்படும் என்று கடந்த 2021ஆம் ஆண்டே ஜோதிடர்கள் கணித்துள்ளனர். முருகன், திருமால் பெயரை கொண்டவர்கள் வாயால் கெடுவார்கள் என்றும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் ஜோதிடர் மணிகண்டன் பாரதிதாசன் என்பவர் முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். வி.செந்தில் குமாராக இருந்தவர் தனது பெயரை செந்தில் பாலாஜி என்று மாற்றிக்கொண்டதே ஜோதிடர் சொன்னதைக் கேட்டுதானாம். அந்த அளவுக்கு ஜோதிடத்தில் […]