இந்தியாவில் புல்லட் ரயில் கொண்டு வருவதை விட நிதி ஒதுக்கி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் தொழில்நுட்பத்தை கொண்டு வரவேண்டியது தான் முக்கியம் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். தருமபுரியில் கடந்த 15 நாட்களாக கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெற்றது. பல அணிகள் கலந்து கொண்ட இந்த தொடரின் இறுதிப்போட்டியை அன்புமணி ராமதாஸ் கிரிக்கெட் விளையாடி தொடங்கி வைத்தார். போட்டி முடிந்த பிறகு வெற்றி பெற்ற அணிகளுக்கு […]

கர்நாடகாவில் பிப்ரவரி 8 ஆம் தேதி நிகழ்ந்த சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் சம்பவத்தில் இருந்து மத்திய அரசு விழித்துக்கொள்ளாதது தான் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்துக்கு காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. கர்நாடக மாநிலத்தில் கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் சென்ற போது இண்டர்லாக்கிங் அமைப்பு செயல்பாட்டில் இருந்ததால் ஓட்டுனர் கடைசி நிமிடத்தில் ரயிலை நிறுத்தி விபத்தை தவிர்த்திருக்கிறார். இது தென் மேற்கு ரயில்வேயின் தலைமை […]

ஒடிசா ரயில் விபத்தில் காணாமல் போனதாக கூறப்பட்ட தமிழ்நாட்டை சேர்ந்த 8 பேர் நலமுடன் இருப்பதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள குறிஞ்சி இல்லத்தில், தனியார் நிறுவனம் சார்பில் உதயநிதி ஸ்டாலினிடம் 10 ஆயிரம் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. சென்னையில் பசுமை பரப்பை அதிகரிக்கும் வகையில் மரக்கன்றுகளை மாநகராட்சியிடம் வழங்கிய அமைச்சர் உதயநிதி, குறிஞ்சி இல்லத்தில் இரண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இதில், சென்னை மாநகராட்சி […]

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பள்ளிக்கல்வித்துறை வரலாற்றிலேயே முதல் முறையாக ஆசிரியர்களுக்கு தேவைப்படும் அறிவுரை வழங்கவும், மாணவர்களை கட்டுப்படுத்தவும் போதுமான தலைமை ஆசிரியர்கள் இல்லாத நிலையில், நாளை மறுநாள் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது பெற்றோர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக தெரிவித்துள்ளார். அதேபோல கற்பித்தலுக்கு 12,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும் கூறி இருக்கிறார் ஆட்சி பொறுப்பேற்று 2 வருடங்கள் முடிவடைந்த […]

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, 1952 ஆம் ஆண்டு விசாரணை ஆணையச் சட்டத்தின் கீழ், கவுகாத்தி உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி அஜய் லம்பா தலைமையில் மணிப்பூர் சம்பவம் குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்து உத்தரவிட்டுள்ளது. ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஹிமான்ஷு சேகர் தாஸ், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திரு அலோகா பிரபாகர் ஆகியோர் ஆணையத்தின் உறுப்பினர்களாக இருப்பார்கள். மணிப்பூர் […]

மதுவுக்கு அடிமையானவர்களின் குடும்பங்களில் மகிழ்ச்சியை ஏற்படுத்துங்கள் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் தனது அறிக்கையில்; வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த சின்னராஜாகுப்பத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி விஷ்ணுப்பிரியா, கூலித்தொழிலாளியான தமது தந்தையின் குடிப்பழக்கத்தால் தமது குடும்பத்தின் நிம்மதி குலைந்ததை தாங்கிக் கொள்ள முடியாமல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். தமது தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை என்று கடிதம் எழுதி […]

ஒடிசாவின் பால்சோர் மாவட்டத்தில் ஏற்பட்ட ரயில் விபத்து நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த கோர விபத்தில் சிக்கி 300 பேர் உயிரிழந்த நிலையில், 900-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த நிலையில், ரயில் விபத்தில் பாதிக்கப்பட்ட ஒடிசாவைச் சேர்ந்தவர்களுக்கு அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் நிவாரணம் அறிவித்துள்ளார். அதன்படி, ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்த மாநிலத்தைச் சேர்ந்த குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாயும், இந்த விபத்தில் பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா 1 […]

மத்திய ரயில்வே துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் என சுப்பிரமணிய சுவாமி தனது கருத்தை தெரிவித்துள்ளார். ஒடிசாவில் சரக்கு ரயில் மீது மோதியதால் கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 288 பேர் உயிரிழந்துள்ளனர். 1000-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலக வேண்டும் என […]

ஒடிசா மாநிலம் பாலாசூர் மாவட்டத்தில் இருக்கின்ற பகநாகா என்ற பகுதியில் நேற்று இரவு 3 ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர சம்பவம் காரணமாக, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 261 ஆக அதிகரித்து இருக்கிறது. 900 க்கும் அதிகமானோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஒடிசா ரயில் விபத்து குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் இன்று மாலை 5 மணி அளவில் ஒரிசாவில் இருக்கும் உதயநிதி தலைமையிலான தமிழக அமைச்சர்கள் குழுவுடன் காணொளி மூலமாக […]

2024-ஆம் ஆண்டு ஜூன் 3-ஆம் நாள் கலைஞரின் நூற்றாண்டு நிறைவுக்குள் தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும் என்றும் பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். ”தமிழ்நாட்டில் படிப்படியாக மதுவிலக்கை ஏற்படுத்தும் நோக்கத்துடன் மொத்தமுள்ள 5329 மதுக்கடைகளில் 500 கடைகள் மூடப்படும் என்று கடந்த ஏப்ரல் 12-ஆம் நாள் தமிழக சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தார். அதன்பின் […]