தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் முதலமைச்சர் ஸ்டாலினின் ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் பயணத்தின் மூலமாக ஈர்க்கப்பட்ட முதலீடுகள் தொடர்பாக முன்னக்கப் முரணான தகவல்கள் வெளியாகி இருப்பதாக குற்றம் சுமத்தி இருக்கிறார். மேலும் இந்த ஆட்சியின் பாராமுகம் காரணமாக, பல்வேறு தொழில் நிறுவனங்கள் அண்டை மாநிலங்களுக்கு சென்று விட்டதாகவும் எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்திருக்கிறார். இதனால் ஏராளமான இளைஞர்களின் வேலை வாய்ப்பு பறிபோய் விட்டதாக அவர் […]

சினிமாவில் இனி 3 ஆண்டுகளுக்கு நடிக்கப் போவது இல்லை என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். திமுக இளைஞரணி செயலாளரான உதயநிதி ஸ்டாலின், சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவாக தேர்வானார். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முதல்வர் முக.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலின் இடம்பெற்றார். இதனால் தம்மால் தொடர்ந்து சினிமாவில் நடிக்க முடியாது எனவும் உதயநிதி அறிவித்தார். இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலுவுடன் இணைந்து நடிக்கும் […]

பிரதமர் மோடியின் ‘அனைவரும் இணைவோம் அனைவரும் உயர்வோம்’ என்ற குறிக்கோளுடன் அனைவருக்கும் சமூக நலன் என்பதில் பிரதமர் நரேந்திர மோடியால் தலைமை தாங்கப்படும் மத்திய அரசு கவனம் செலுத்துகிறது. எவரும் விடுப்பட்டு விடாமல் இருப்பதை உறுதி செய்யவும் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தின் தாக்கமும் பயன்களும் சமூகத்தின் அனைத்து பிரிவினரையும் ஒன்றடைவதை உறுதிப்படுத்தவும் 2014 முதல் பல வகையான முன்முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. கடந்த 9 ஆண்டுகளில் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட […]

ஜூன் 12 ஆம் தேதி பாட்னாவில் நடைபெறும் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்போம் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது, ஆனால் காங்கிரஸ் சார்பில் கூட்டத்தில் யார் கலந்துகொள்வது என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. பீகார் முதல்வரும், ஜேடியு தலைவருமான நிதிஷ்குமார் கூட்டத்தை நடத்த உள்ளார். ஜூன் 12-ம் தேதி பாட்னாவில் நடைபெறும் எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் காங்கிரஸ் நிச்சயம் பங்கேற்கும். ஆனால், யார் பங்கேற்பது என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இந்தக் கூட்டத்தில் […]

மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை, அவரது இல்லத்தில் வைத்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் சந்தித்தார். மகாராஷ்டிராவின் மூத்த அரசியல்வாதியும், தேசியவாத காங்கிரஸ் தலைவருமான சரத் பவார், அம்மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார். இந்தக் சந்திப்பின் நோக்கம் குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. அண்மைக்கால அரசியல் பின்னணி அதிகார அரசியலைப் பொறுத்த வரையில் அதற்கு அதிக முக்கியத்துவம் […]

சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்து பேசினார். ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சரின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. மத்திய அரசின் அவசர சட்டத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் ஆதரவை பெற கெஜ்ரிவால் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி அரசிடமிருந்து அதிகாரத்தை பறிக்கும் வகையில் மத்திய அரசு அவசர சட்டம் ஒன்றை பிறப்பித்துள்ளது. நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கலாகும் போது அதை எதிர்க்க வேண்டும் என கெஜ்ரிவால் […]

நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்ட நிலையில், புதிய கணக்கு தொடங்கி, முதல் பதிவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அவரது கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளான இடும்பாவனம் கார்த்தி, பாக்கியராஜன், விக்கி பார்கவ் உள்ளிட்டோரின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. மேலும் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியின் ட்விட்டர் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது.  அவர்கள் இந்திய தகவல் […]

தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரியின் அறிக்கை தமிழக ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. 2022 மார்ச் 31- உடன் முடிவடைந்த ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் நிதித்தணிக்கை அறிக்கையை இந்திய தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரி தமிழ்நாடு ஆளுநரிடம் சமர்ப்பித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்வதற்காக, இந்திய அரசியல் சட்டத்தின் பிரிவு 151(2)-ன் படி இந்திய தலைமைக்கணக்கு அதிகாரி இந்த அறிக்கையை மாநில ஆளுநரிடம் சமர்ப்பிக்க வேண்டியுள்ளதாக முதன்மை கணக்குத்தணிக்கை அலுவலர் நெடுஞ்செழியன் வெளியிட்ட […]

தமிழகம் முழுவதும் அனைத்து கல்லூரிகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்வு நடத்தப்படும். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி; தமிழகத்தில் தற்போது அனைத்து பல்கலைக்கழகங்களிலும்‌ பட்டப்படிப்பகளுக்கான தேர்வுகள்‌ மற்றும்‌ தேர்வு முடிவுகள்‌ வெவ்வேறு தேதிகளில்‌ வெளியிடப்பட்டு வருகிறது. அதனை மாற்றி 12-ம்‌ வகுப்பு பொதுத்தேர்வு எப்படி நடைபெறுகிறதோ அதே போல அனைத்து பல்கலைக்கழகங்களின்‌ கீழ்‌ உள்ள கல்லூரிகளில்‌ ஒரே நாளில்‌தேர்வும்‌, ஒரே நாளில்‌ தேர்வு முடிவுகளும்‌ வரும்‌ ஆண்டு […]

சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் பயணத்தை முடித்துக் கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை திரும்புகிறார். தமிழ்நாட்டிற்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளில் கடந்த 9 நாட்களாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு முறைப் பயணம் மேற்கொண்டார். அங்கு நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் அவர் பங்கேற்றார். மேலும் பல்வேறு நிறுவனங்களின் உரிமையாளர்களையும் அவர் சந்தித்தார். அப்போது அங்கு பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின. இந்த நிலையில் 9 நாள் வெளிநாட்டு […]