ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் 5 பேர், பாம்பன் நாட்டுப்படகு மீனவர்கள் 9 பேர் என மொத்தம் 14 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனே விடுவிக்க மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். ராமேசுவரம் அருகே பாம்பன் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற டேவிட் என்பவருக்குச் சொந்தமான நாட்டுப்படகை, புத்தளம் கடற்பரப்பில் நேற்று காலை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். படகிலிருந்த […]

தவெகவின் உறுப்பினர்‌ சேர்க்கைக்கான பிரத்யேகச்‌ செயலியை நாளை அக்கட்சி தலைவர் விஜய் அறிமுகம் செய்ய உள்ளார். தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தமிழக மக்களின்‌ நலனை எதிர்நோக்கி, மக்கள்‌ விரும்பும்‌ முதல்வர்‌ வேட்பாளர்‌, வெற்றித்‌ தலைவர்‌ திரு. விஜய்‌ அவர்கள்‌ தலைமையில்‌, தமிழகத்தில்‌ ஆட்சி மாற்றத்திற்கான நடவடிக்கைகளைத்‌ தமிழக மக்களின்‌ ஏகோபித்த ஆதரவோடு நாம்‌ மேற்கொண்டு வருவதை அனைவரும்‌ அறிவீர்கள்‌. அதன்‌ ஒரு பகுதியாக நமது […]

ராமநாதபுரம் சமஸ்தான இளைய மன்னர் நாகேந்திரன் சேதுபதி அதிமுகவில் இணைந்தார். பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் நாகேந்திரன் சேதுபதி அதிமுக அடிப்படை உறுப்பினராக இணைந்தார். மக்களைக் காப்போம் – தமிழகத்தை மீட்போம்’ என்று, மக்கள் ஸ்டாலின் ஆட்சியை அகற்ற கோவையில் 7.7.2025 அன்று துவங்கிய எழுச்சிப் பயணம் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் தொகுதியில் துவங்கி, ஜூலை 25-ம் தேதியில் புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை […]

விடுபட்ட குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 விரைவில் வழங்கப்படும் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர்; மருத்துவம், கால்நடை மருத்துவம், பொறியியல், கலை அறிவியல், செவிலியர் கல்லுாரிகள் என அனைத்து கல்லூரிகளும் தொடங்கப்பட்டுள்ளது. 12-ம் வகுப்பு முடிப்பவர்களுக்கு தேவையான உயர்கல்வி கிடைக்கிறது. அவர்களின் கல்வி கட்டணத்தை அரசே செலுத்துகிறது. அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் 10 சதவீதம் இடஒதுக்கீடு […]

கோடிக்கோடியாக மக்கள் பணத்தைக் கொள்ளையடித்த திமுக அரசின் அழிவிற்கான ஆரம்பம் இது என்று நயினார் நாகேந்திர விமர்சித்துள்ளார். தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.. அவரின் பதிவில் “ கள்ளக்குறிச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கைக்காக சென்ற சங்கராபுரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு. உதயசூரியன் அவர்களிடம், “சாலை வசதி செய்துதராமல் உறுப்பினர் சேர்க்கைக்கு மட்டும் ஏன் வருகிறீர்கள்?” […]

திமுக கட்சிகாரர்களின் வருமானத்துக்குப் பொதுமக்கள் உயிர்பலி கொடுக்க வேண்டுமா? என்று அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார். தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.. அவரின் பதிவில் “காஞ்சிபுரம் மாவட்டம் திம்மசமுத்திரம் அருகே பாலாஜி நகரில் உள்ள அரசு ஓட்டுநர்களுக்கான குடியிருப்புப் பகுதியில் வசித்து வந்த பெண், கடந்த நான்கு நாட்களுக்கு முன்பாக, கடுமையாகத் தாக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டு, நேற்று மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி […]