கர்நாடகாவின் அடுத்த முதல்வரைத் தேர்ந்தெடுப்பது குறித்து காங்கிரஸ் இன்னும் ஆலோசித்து வருவதால், அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே பெங்களூருவில் இன்று அடுத்த முதல்வர் யார் என்பதை அறிவிப்பார் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன. காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மற்றும் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோருடன் கலந்தாலோசித்த பிறகு கார்கே தனது இறுதி முடிவை இன்று அறிப்பார் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கான அறிவிப்பு பெங்களூருவிலேயே […]

கள்ளச்சாராயம்‌ விற்ற நபருக்கு தமிழக அரசு 50,000 ரூபாய் இழப்பீடு வழங்கியுள்ளது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. விழுப்புரம்‌ மாவட்டம் மரக்காணம்‌ அருகே கள்ளச்சாராயம்‌ அருந்தியதால்‌ இதுவரை 22 பேர்‌ உயிரிழந்துள்ளனர்‌. மேலும்‌, 30 பேர்‌ மருத்துவமனையில்‌ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்‌. இறந்தவர்களின்‌ குடும்பங்களுக்கு 10 லட்சம்‌ ரூபாய்‌, சிகிச்சை பெற்று வரும் குடும்பங்களுக்கு 50,000 நிவாரணத்‌ தொகையாக அறிவித்த முதலமைச்சர்‌ மு.க. ஸ்டாலின்‌,நேரடியாக விழுப்புரம்‌ மருத்துவமனையில்‌ சிகிச்சை பெற்று வருபவர்களை […]

கர்நாடக மாநிலத்தில் வெற்றி பெற்றும் அதனை கொண்டாட முடியாத சூழ்நிலையில், காங்கிரஸ் கட்சி இருந்து வருகிறது. அதற்கு காரணம் என்னவென்றால், அந்த மாநிலத்தில் அறுதி பெரும்பான்மையுடன் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றிருந்தாலும் முதல்வர் நாற்காலியில் அமர போவது யார்? என்பதில் அந்த கட்சியினருக்கு இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. எப்படியும் கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி தான் என்பது முடிவாகிவிட்ட நிலையில், முதல்வர் நாற்காலியில் அமரப்போவது சிவகுமாரா அல்லது […]

பொதுக்குழுவில் அதிமுகவின் விதிமுறைகளை மாற்றம் செய்ததை ஏற்றுக்கொண்டு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரியும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் ஓபிஎஸ் தரப்பினரால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இருதரப்பு வாதங்களும் கடந்த மார்ச் 22ஆம் தேதி முடிவடைந்த நிலையில், மார்ச் 28ஆம் தேதி நீதிபதி கே.குமரேஷ்பாபு தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்பில், அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுச்செயலாளர் […]

அதிமுக ஆட்சிக் காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த சமயத்தில் தற்போதைய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் சமரசமாக செல்வதாக தெரிவித்ததால் அந்த வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.இந்த உத்தரவை எதிர்க்கும் விதமாக, ஊழல் தடுப்பு அமைப்பு சார்பாக தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ததோடு வழக்கை ஆரம்பத்தில் இருந்து விசாரிக்கவும் உத்தரவு […]

கள்ளச்சாராயம் குடித்து உடல்நிலை பாதிக்கப்பட்ட 66 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”தமிழ்நாடு, புதுச்சேரி ஜிப்மரில் இதுவரை 66 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்ட 55 பேர் முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உரிய முறையில் சிகிச்சை கிடைப்பதை […]

கோயமுத்தூர் மாநகராட்சி 97வது வார்டு உறுப்பினராக இருப்பவர் நிவேதா. கோவை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்களிலேயே இளம் பெண் மாமன்ற உறுப்பினரான நிவேதா, திமுக கோவை கிழக்கு மாவட்ட செயலாளர் மருதமலை சேனாதிபதியின் மகள் என்று கூறப்படுகிறது. இவர் கடந்த 3 மாநகராட்சி கூட்டங்களின் தொடர்ந்து பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. ஆகவே இவர் தன்னுடைய கவுன்சிலர் பதவியை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. நகர்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998 பிரிவு 32(1)ன்படி […]

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வம்பாமேடு பகுதியில் விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தை, எக்கியார்குப்பம் பகுதி மீனவர்கள் அருந்தியுள்ளனர். இதையடுத்து, மீனவர்கள் மயங்கி விழுந்து உயிருக்கு போராடியுள்ளனர். அவர்களை அப்பகுதி மக்கள் மீட்டு முண்டியம்பாக்கம், மரக்காணம் மற்றும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் அனுமதித்தனர். இதில் சிகிச்சை பலனின்றி 11 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தோரின் உடலுக்கு அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். கள்ளச்சாரய மரணங்கள் தொடர்பாக விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் […]

முதலமைச்சர் ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம், சித்தாமூர் குருவட்டம், பெருங்கரணை கிராமத்தைச் சேர்ந்த வசந்தா, செல்வம், மாரியப்பன், பேரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த வள்ளியப்பன் மற்றும் சந்திரா உள்ளிட்டோர் கள்ளச்சாராயம் குடித்ததால் உடல் நலம் பாதிக்கப்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர் என்ற செய்தியை கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் […]

தமிழ்நாட்டில் 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான அறிவிப்பு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்தநாளான அடுத்த மாதம் 3ஆம் தேதி வெளியிடப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் 5,329 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 96 கடைகள் மூடப்பட்ட நிலையில், மேலும் 500 மதுக்கடைகள் இந்த ஆண்டு மூடப்படும் என்று சட்டமன்றத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தார். அதன்படி, […]