ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் இணைந்து செயல்பட உள்ளதாகக் கூட்டாக அறிவித்துள்ளனர். முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், டிடிவி தினகரனை நேரில் சந்தித்தார். ஓபிஎஸ் உடன் முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரனும் உடன் இருந்தார். டிடிவி தினகரனை தொடர்ந்து சசிகலாவையும் ஓபிஎஸ் சந்திக்கலாம் என்று கூறப்படுகிறது. அடையாறில் உள்ள இல்லத்தில் டிடிவி தினகரன் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. இந்தச் சந்திப்பில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ் பல முக்கிய […]

மேற்கு வங்க மாநிலத்தில் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் அரசு, மாநிலத்தில் வெறுப்பு மற்றும் வன்முறை சம்பவங்களைத் தவிர்ப்பதற்காக ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தை தடை செய்தது. திருமணத்தின் மூலம் இஸ்லாம் மதத்திற்கு மாற்றப்பட்ட பின்னர் ISIS முகாம்களுக்கு கடத்தப்படும் மூன்று பெண்களின் வேதனையை விவரிக்கும் திரைப்படத்திற்கு முதலில் மேற்கு வங்க அரசு தடை செய்துள்ளது. பா.ஜ.க ஆளும் மத்தியப் […]

இறையாண்மை குறித்து சோனியா காந்தியின் கருத்து குறித்து விளக்கம் அளிக்க காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. கர்நாடகா மாநிலத்திற்கான சட்டமன்ற தேர்தல் நாளை ஒரே கட்டமாக நடைபெற உள்ளது இதற்கான இதற்கான தேர்தல் பிரச்சாரம் நேற்றுடன் ஓய்ந்தது. கடந்த ஆறாம் தேதி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான சோனியா காந்தி தேர்தல்‌ பிரசார கூட்டத்தில்‌, கலந்து கொண்டு பேசிய போது கர்நாடக […]

அரசுப் பள்ளிகளை தேடி வருபவர்களுக்கு சிறப்பான கல்வி வழங்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். சென்னை அண்ணா நூற்றாண்டு வளாகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை அவர் வெளியிட்டார். இதில் வழக்கம்போல மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.03 சதவீதம் […]

தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கிறது. இந்த நிலையில், 3ம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் திமுக அரசின் 2 வருட கால சாதனைகளை விளக்கம் விதமான கண்காட்சியை சமீபத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார் இத்தகைய நிலையில், தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திமுக அரசு 3ம் வருடத்தில் அடியெடுத்து வைப்பதற்கு தன்னுடைய வலைதள பக்கத்தின் மூலமாக தற்போது வாழ்த்து தெரிவித்துள்ளார். […]

தமிழக நிதித்துறை அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் சமீபத்தில் ஆடியோ சர்ச்சை ஒன்றில் சிக்கினார். இதன் காரணமாக தமிழகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்கள் அவர் மீது அதிருப்தி அடைந்தனர். மேலும் பலர் கண்டனங்களை பதிவு செய்தனர். இதன் காரணமாக திமுக தலைமை அவர் மீது அதிருப்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இது தொடர்பாக முதல்வரிடம் கேள்வி எழுப்பியபோது அவர் மீது எழுந்த […]

அதிமுகவின் தலைமை கழக பேச்சாளர் டி ராஜேந்திரன் உடல் நலக்குறைவு காரணமாக, இன்று காலமானார். எம்ஜிஆர் கட்சி தொடங்கியதில் இருந்து அதிமுகவில் உறுப்பினராக இருப்பவர் என்று கூறப்படுகிறது. மேலும் அவர் ஜெயலலிதா மீது மிகுந்த பாசமும் பற்றும் கொண்டவர் என்றும் சொல்லப்படுகிறது. அத்துடன் அதிமுகவின் நட்சத்திர பேச்சாளராக இருந்த அவர், பல்வேறு முக்கிய பொறுப்புகளை அதிமுகவில் வகித்திருக்கிறார். இத்தகைய நிலையில், உடல்நல குறைவால் என்று அவர் உயிரிழந்துவிட்ட சூழ்நிலையில், அவருடைய […]

கர்நாடகாவில் தேர்தல் பிரசாரம் செய்ய பிரதமர் மோடிக்கு தடை விதிக்க வேண்டும் என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தியுள்ளார். ஜெய்ப்பூரில் செய்தி அவர்களிடம் பேசிய அவர்; தென் மாநிலத்தில் மதத்தின் அடிப்படையில் மோடி வாக்கு சேகரித்து வருவதாக குற்றச்சாட்டினார். தேர்தல் ஆணைய வழிகாட்டுதல்களை மீறி மதத்தின் அடிப்படையில் மோடி வாக்கு கேட்டு வருகிறார். அவர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதைத் தடுக்க வேண்டும். தேர்தல் பிரச்சாரத்தில் மதத்தின் […]

அரசு தொடக்க பள்ளிகளில் செயல்படுத்தப்படும், முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டம் வரும் கல்வியாண்டில் 30,122 பள்ளிகளில் விரிவுபடுத்தப்படவுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு, அனைத்து பள்ளி வேலை நாட்களிலும், காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக தமிழ்நாடு அரசு ரூ.33.56 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த திட்டம் தமிழ்நாடு முழுவதும் விரிபடுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலமாக […]

சென்ற ஜூலை மாதம் 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தின் போது அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற மோதலில் அலுவலகத்தில் இருந்த கட்சி குறித்த அசல் பத்திரங்கள், ஆவணங்கள், ரசீதுகள் கட்சியின் பெயரில் இருக்கின்ற சொத்து ஆவணங்கள் போன்ற பொருட்களை பன்னீர்செல்வம் தரப்பினர் எடுத்துச் சென்று விட்டனர் என்று புகார் எழுந்தது. இது குறித்து கடந்த ஜூலை மாதம் 23ஆம் தேதி சி.வி. சண்முகம், சென்னை, ராயப்பேட்டை காவல் துறையில் […]