கர்நாடகாவில் தேர்தல் பிரசாரத்தில் அனுமன் பெயரை கூறியதாக பிரதமர் மோடி மீது காங்கிரஸ் தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளது. பிரதமர் மோடி மே 2-ம் தேதி முதல் தனது தேர்தல் பேரணியில் வலதுசாரி அமைப்பான பஜ்ரங்தளை தடை செய்வதாக வாக்குறுதி அளித்ததற்காக காங்கிரசை தொடர்ந்து தாக்கி பேசி வருகிறார், மேலும் தடையை பஜ்ரங்பாலி, பகவான் ஹனுமானுக்கு “பூட்டு” என்று பேசி இருந்தார். இந்த நிலையில் பிரதமர் மோடி புதன்கிழமை […]

மணிப்பூரில் ஏற்பட்டுள்ள வன்முறை தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் நிலமையை மாநில முதலமைச்சரிடம் விசாரித்தார். மணிப்பூரில் பழங்குடி மக்களுக்கும் பெரும்பான்மை சமூகமான மேதி சமூகத்திற்கும் இடையே கடந்த சில நாட்களாக இருந்து வந்த மோதல்‌ திடீரென வன்முறையாக மாறியது. பழங்குடி ஒற்றுமை நடைபயணம் நேற்றுமுன்தினம் நடைபெற்றது, இதனால் மோதல் அதிகரித்ததாக கூறப்படுகிறது. மோதல் காரணமாக இதுவரை 9,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்த பணி தொடர்ந்து நடைபெற்று […]

கர்நாடகா சட்டசபை தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடப்பதாக புகார்கள் கிளம்பி வரும் நிலையில், அதிரடி சோதனைகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், வேட்பாளர் ஒருவரின் சகோதரர் வீட்டில் மரத்தில் தொங்கிய பணப் பெட்டியை ஐடி அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 10ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஆளும் பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஐக்கிய ஜனதாதளம் கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதனால், இறுதிக்கட்ட பிரச்சாரம் […]

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் வீட்டில் வளர்ந்து வந்த சின்ன கொம்பன் என்ற ஜல்லிக்கட்டு காளை பல்வேறு ஜல்லிக்கட்டுகளில் பங்கேற்று கொண்டு வெற்றி பெற்றுள்ளது. அதிமுக ஆட்சி காலத்தில் விஜயபாஸ்கர் காலை வருகிறது என்று சொன்னால் ஜல்லிக்கட்டு வீரர்கள் சற்றே பயத்துடன் தான் எதிர்கொள்வார்கள். இந்த நிலையில், நேற்று புதுக்கோட்டை வடசேரிப்பட்டி ஜல்லிக்கட்டு போட்டியில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் ஜல்லிக்கட்டு காளை சின்ன கொம்பன் வாடிவாசல் கட்டையில் மோதி மயக்கம் […]

மாநில அரசு உடனான அனுபவம் தொடர்பாக தமிழக ஆளுநர் ஆர் என் ரவி ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்திருக்கிறார். அதில் கோவை கார் குண்டுவெடிப்பு, கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மீதான தாக்குதல், தூத்துக்குடியில் கிராம நிர்வாக அலுவலர் கொலை போன்ற பல்வேறு சம்பவங்களை அவர் சுட்டிக்காட்டி உள்ளார். ஏற்கனவே பாகிஸ்தானில் இருந்து தமிழகத்திற்கு போதை பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் கடத்தப்படுவதாக மத்திய உளவுத்துறை எச்சரித்து இருந்ததாகவும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்து […]

கர்நாடக தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் பாஜக 30 சதவீதம் பேர் குற்ற பின்னணியை கொண்டவர்களாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மே 10ஆம் தேதி நடைபெறவுள்ள கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் அனைத்துக் கட்சிகளும் தாங்கள் நிறுத்தியிருக்கும் வேட்பாளர்களின் குற்றப் பதிவு குறித்த விவரம் வெளியாகி உள்ளது. ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான தேர்தல் கண்காணிப்பு அமைப்பான ஏடிஆர் அறிக்கையின்படி, காங்கிரஸ் கட்சி 31 சதவீதமும், பாஜக 30 சதவீதமும், ஜேடிஎஸ் வேட்பாளர்கள் 25 சதவீதமும் […]

வரும்‌ 8-ம்‌ தேதி 12-ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாகும்‌ பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தமிழகத்தில் பொது தேர்வு எழுதிய பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களின் தேர்வு முடிவு வரும்‌ 8ம்‌ தேதி தேர்வு முடிவு வெளியாகும்‌. மாணவர்கள் யாரும் பயப்பட வேண்டாம். தன்னம்பிக்கையோடு பொதுத்தேர்வு முடிவுகளை எதிர்நோக்க வேண்டும்‌. நான்‌ முதல்வன்‌’ என்ற […]

டாஸ்மாக் வருமானம் மூலம் ஆட்சி நடத்த வேண்டிய அவசியம் திமுகவுக்கு இல்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, ”திமுக ஆட்சி அமைத்த இரண்டு ஆண்டு காலத்தில் இதுவரை 306 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசு டாஸ்மாக் மூலம் கிடைக்கும் வருமானத்தில்தான் செயல்படுவது போல் சில பத்திரிக்கைகள் செய்திகளில் வெளியிடுவது வேதனை அளிக்கிறது. காலை 12 மணி முதல் இரவு […]

தலைநகர் சென்னையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார், அப்போது அவர் தெரிவித்ததாவது, சென்னை கிண்டியில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நூற்றாண்டு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை ஜூன் மாதம் 5ம் தேதி திறந்து வைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வரும். இந்த மருத்துவமனையை திறந்து வைப்பதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் குடியரசு தலைவருக்கு அழைப்பு விடுத்திருக்கிறார் என்று கூறியுள்ளார். மேலும் தமிழகத்தில் புதிதாக 11 செவிலியர் கல்லூரிகளை […]

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதியை பஜ்ரங் தள் அமைப்பு எரித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், பஜ்ரங் தள் அமைப்பை தடை செய்வதாக உறுதியளித்த காங்கிரஸுக்கு எதிராக போராட்டம் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் ஆனது நடைபெற்று வருகிறது. டெல்லி மற்றும் கர்நாடகா மாநிலம் மங்களூருவில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகம் அருகே போராட்டம் நடத்திய பஜ்ரங் தள் தொண்டர்கள், அக்கட்சி […]