ஜூம் வீடியோ கம்யூனிகேஷன்ஸ் 1,300 பணியாளர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகளாவிய பொருளாதாரச் சரிவுக்கு மத்தியில் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பிரபல நிறுவனங்கள் பணிநீக்கம் செய்து வருகின்றனர். இந்நிலையில், வளர்ந்து வரும் தொழில்நுட்ப நிறுவனங்கள் பட்டியலில் இருக்கும் ஜூம் நிறுவனமும் இந்த பணிநீக்க நடவடிக்கையில் இறங்கியுள்ளது. கொரோனா தொற்றுநோய் குறைந்து வருவதால், ஜூம் நிறுவனத்தின் சேவைகளுக்கான தேவை குறைந்துள்ளது. இதனால், அந்நிறுவனத்தின் பணிபுரியும் 1,300 பணியாளர்கள் பணிநீக்கம் செய்ய […]

இந்தியாவில் மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் வகையில், அரசு வேகமாக உற்பத்தியை அறிமுகப்படுத்தியது. நாட்டில் பேட்டரியின் விலைகளைக் குறைக்கும் வகையில், மேம்பட்ட வேதியியல் செல்களை உற்பத்தி செய்வதற்கான உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகைத் திட்டத்திற்கு மே 12, 2021 அன்று அரசு ஒப்புதல் அளித்தது. மின்சார வாகனங்கள், உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகைத் (பிஎல்ஐ) திட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படுகின்றன, இது செப்டம்பர் 15, 2021 அன்று ஐந்து ஆண்டுகளுக்கு ரூ.25,938 கோடி பட்ஜெட் ஒதுக்கீட்டில் […]

ஆன்லைன் வங்கி சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், இணைய வங்கி தொடர்பான பரிவர்த்தனைகள்/செயல்பாடுகளுக்கு OTP-ஐ உருவாக்க Secure OTP என்ற புதிய செயலியை பாரத ஸ்டேட் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய வங்கியாக பாரத ஸ்டேட் வங்கி விளங்கிவருகிறது. இந்நிலையில், தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய செயலி ஒன்றை எஸ்பிஐ வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. அதில், வாடிக்கையாளர்கள் இனி இன்டர்நெட் பேங்கிங், ஆன்லைன் சேவைகளை பயன்படுத்த எஸ்எம்எஸ் மூலம் OTP பெறாமல், தனி செயலி […]

பொருளாதார நெருக்கடி காரணமாக ட்விட்டர், அமேசான், கூகுள், மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், கணிப்பொறி சந்தையில் முன்னணி இடம் வகித்து வரும் டெல் நிறுவனமும் 6,650 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் அதிக ஊழியர்களைப் பணிநீக்கம் செய்த நிறுவனங்கள் பட்டியலில் DELL நிறுவனமும் இணைந்துள்ளது. இது நிறுவனத்தின் ஒட்டுமொத்த பணியாளர்களில் 5 சதவீதம் பேர் என்று நிறுவனத்தின் செய்தித் […]

பான் கார்டுடன் ஆதார் அட்டையை மார்ச் 31ம் தேதிக்குள் இணைக்க வேண்டும். பான் கார்டுடன் ஆதார் அட்டையை இணைப்பதற்கான காலக்கெடுவை கடந்த இரண்டு மாதங்களில் வருமான வரித்துறை பலமுறை நீட்டித்துள்ளது. முக்கியமான ஆவணங்களை இணைப்பதற்கான கடைசி தேதி இப்போது மார்ச் 31, 2023 ஆகும். மார்ச் 31, 2023க்குள் பான் எண்ணை ஆதார் அட்டையுடன் இணைக்கத் தவறினால், உங்கள் பான் எண் செயல்படாத ஆக மாறிவிடும் என வருமான வரித்துறை […]

பீகார் அரசு வாட்ஸ்அப், ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் உள்ளிட்ட 23 சமூக ஊடக செயலிகளுக்கு தற்காலிக தடை விதித்துள்ளது. பீகாரின் சரண் மாவட்டத்தில் உள்ள முபாரக்பூர் என்ற கிராமத்தில் இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.. இதனால் நேற்று முன் தினம் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கூடி, விஜய் யாதவ் என்ற அந்த கிராமத் தலைவரின் வீட்டிற்குள் நுழைந்ததால், அங்கு பதற்றம் நிலவியது. மேலும் அவர்கள் கிராமத் தலைவரின் […]

உள்தேர்வு ஒன்றில் தேர்ச்சி பெறத் தவறிய நூற்றுக்கணக்கான ஊழியர்களை இன்ஃபோசிஸ் நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அகநிலை மதிப்பீடு தேர்வு எனப்படும் உள் தேர்வில் தோல்வியடைந்ததால், 600 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு, 208 புதியவர்கள் இத்தேர்வில் தோல்வியடைந்ததால், பணிநீக்கம் செய்யப்பட்டனர். மொத்தத்தில், கடந்த சில மாதங்களில் இந்த தேர்வில் தோல்வியடைந்த காரணத்தால், சுமார் 600 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஆனால், […]

சீன இணைப்புகளுடன் கூடிய 138 ஆன்லைன் சூதாட்ட செயலி, 94 லோன் செயலியை தடை செய்ய அரசு முடிவு செய்துள்ளது. உள்துறை அமைச்சகத்தின் தகவல்களின் பேரில், மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் 138 பந்தய பயன்பாடுகள் மற்றும் 94 கடன் வழங்கும் சீன செயலிகளை தடை செய்ய உத்தரவிட்டுள்ளது. “இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு பாதகமான பொருள்” இருப்பதால், இந்த செயலிகள் ஐடி சட்டத்தின் பிரிவு 69 கீழ் நடவடிக்கை […]

2020-21 –ஆம் ஆண்டைவிட 2021-22-ஆம் நிதியாண்டில் வாகனங்கள் ஏற்றுமதி 35.9% அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2020-21-ம் நிதியாண்டில் மொத்தம் 41,34,047 வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில், 2021-22-ம் நிதியாண்டில், 56,17,246 வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இது 35.9% உயர்வாகும். இதில் கார்களைப் பொறுத்தவரையில் 2020-21-ம் நிதியாண்டில் 4,04,394 என்ற எண்ணிக்கையில் ஏற்றுமதி செய்யப்பட்டன. 2021-22-ம் நிதியாண்டில், 5,27,875 வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டதன் மூலம் கார்களின் ஏற்றுமதி 42.9% அதிகரித்த […]

உலகளவில் அதிக பயனர்களை கொண்ட வாட்ஸ்அப் நிறுவனம் முன்னணி மெசேஜிங் ஆப்-ஆக உள்ளது.. இந்தியாவில் கோடிக்கணக்கான பயனர்களை வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.. வாட்ஸ் அப் நிறுவனம் தனது பயனர்களின் வசதிக்காக பல்வேறு புதிய வசதிகளையும், அப்டேட்களையும் வழங்கி வருகிறது.. அந்த வகையில் விரைவில் ஒரு புதிய அம்சத்தை வாட்ஸ் அப் அறிமுகம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.. பயனர்கள் தங்களின் Chats மற்றும் Whatsapp groups-களுக்குள் செய்திகளைப் பின் செய்யும் […]