மூளைத் திசுக்களைப் பாதிக்கக்கூடிய அமீபாவால் ஏற்படும் ஆபத்தான மூளைத் தொற்று நோய் கேரளாவில் பரவி வருவதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மூளைத் திசுக்களைப் பாதிக்கக்கூடிய அமீபாவால் ஏற்படும் ஆபத்தான மூளைத் தொற்று நோய் கேரளாவில் பரவி வருவதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. கோழிக்கோடு, மலப்புரம், கண்ணூர் மாவட்டங்களில் இருந்த நோய்த்தோற்று பிற மாவட்டங்களுக்கும் பரவி வருவதாகவும், இந்த ஆண்டில் இதுவரை 19 பேர் இறந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். […]

சமையலறைப் பாத்திரங்களுக்கும் காலாவதி தேதி உண்டு. அவற்றில் தேதி எழுதப்படாவிட்டாலும், அவற்றின் தரம், பாதுகாப்பு மற்றும் பயன் காலப்போக்கில் குறைந்துவிடும். அவை சரியான நேரத்தில் மாற்றப்படாவிட்டால், அவை உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். எந்தப் பாத்திரங்களை மாற்ற வேண்டும், எப்போது, ​​எந்த அறிகுறிகளைக் கவனிக்க வேண்டும் என்பதைக் கற்றுக்கொள்வோம். கத்திகள் மற்றும் உரித்தல் கருவிகள்: மழுங்கிய கத்தி முனை அல்லது உடைந்த கைப்பிடி பாதுகாப்பு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். உரிக்கும் கருவிகளை […]

பனை மரத்தை வெட்டும்போது மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெறுவது கட்டாயம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து வேளாண்துறை வெளியிட்ட அரசாணை விவரம்: சட்டப்பேரவையில் கடந்த 2022-ம் ஆண்டு வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் தாக்கல் செய்யும்போது, ‘‘பனைமரத்தை வேரோடு வெட்டி விற்கவும், செங்கல் சூளைகளுக்கு பயன்படுத்தும் செயலைத் தடுக்கவும் அரசால் உத்தரவு பிறப்பிக்கப்படும். தவிர்க்க முடியாத சூழ்நிலையில் பனைமரங்களை வெட்டுவதற்கு, மாவட்ட ஆட்சியர் அனுமதி கட்டாயமாக்கப்படும்” என அறிவித்தார். […]

ஆன்லைன் கேமிங் ஊக்குவிப்பு மற்றும் ஒழுங்குமுறை சட்டம் அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும் என்று மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்தச் சட்டம், மின்னணு விளையாட்டுகள் மற்றும் பிற ஆன்லைன் விளையாட்டுகளை ஊக்குவிக்கிறது, அதே நேரத்தில் அனைத்து வகையான பணத்தை அடிப்படையாகக் கொண்ட ஆன்லைன் விளையாட்டுகளையும் தடை செய்கிறது. “இந்த விதிகள் அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும்,” […]

ரயில் பயணங்கள் பெரும்பாலும் சாகசத்தைத் தருகின்றன, ஆனால் சில பயணங்கள் என்றென்றும் நினைவில் பதிந்துவிடும். திபெத்தில் இதுபோன்ற ஒரு அனுபவம் காத்திருக்கிறது, அங்கு ஒரு ரயில் மேகங்கள் வழியாகவும் உறைந்த பூமியின் வழியாகவும் செல்கிறது. இதுதான் உலகின் மிக உயரமான டங்குலா ரயில் நிலையம், கடல் மட்டத்திலிருந்து 5,068 மீட்டர் உயரத்தில் நிற்கிறது. இந்த ரயில் நிலையம் குறித்து பார்க்கலாம்.. சி கிங்காய்-திபெத் ரயில் பாதை, பயணிகளை வேறொரு உலகத்தைப் […]

தற்போதைய காலகட்டத்தில் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை பலரும் வாழ்ந்து வரும் நிலையில், மருத்துவச் செலவுகளுக்காக மாதந்தோறும் ஒரு தொகையை சேமித்தும் வருகின்றனர். ஆனால், மூத்த குடிமக்களுக்கு இது ஒரு பெரிய கவலையாக உள்ளது. இந்தச் சிக்கலுக்குத் தீர்வு காணும் வகையில், மத்திய அரசு ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (PM-JAY) என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், 70 வயது மற்றும் அதற்கும் மேற்பட்ட அனைத்து […]

விவசாயிகள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் (FPO) உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு அக்மார்க் தரச் சான்றிதழ் பெறுவதற்கான பதிவு கட்டணம் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. இனி ரூ.5,000-க்கு பதிலாக வெறும் ரூ.500 கட்டணம் செலுத்தி இந்த சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம். இந்த நடவடிக்கை, விவசாய பொருட்களை நேரடியாக சந்தைப்படுத்தும் உற்பத்தியாளர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அக்மார்க் சான்றிதழின் அவசியம் என்ன..? பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அரிசி, மசாலாப் பொருட்கள், நெய், […]